தேவிகாபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
'''தேவிகாபுரம்''' [[திருவண்ணாமலை]] மாவட்டத்தில் ஆரணி வட்டத்தைச் சேர்ந்தது. போளுர்போளூர் சென்னை நெடுஞ்சாலையில் போளுரில் இருந்துபோளூரிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது. திருவண்ணாமலை கோயிலுக்கு அடுத்த நிலையில் நீண்ட நெடிது உயர்ந்த கோபுரங்களுடனும், ஈடு இணையற்ற சிற்ப எழில் கொஞ்சும் நீண்ட நெடிய மதில்களுடனும் காட்சி தரும் மாட்சிமை உடையது தேவிகாபுரம் என்னும் இத்திருத்தலமாகும்.
 
==பெயர்க்காரணம்==
வரிசை 6:
பண்டைய நாளில் இறைவன் எழுந்தருளிய இடமெல்லாம் நறுமணங்கமழும் சோலைகள் சூழ்ந்த பகுதியாக விளங்கின, அதனால் அப்பகுதியில் உள்ள கோவில்கள் அச்சோலைகளின் பொருளைக் குறிக்கும் சான்றாக திருவானைக்கா, திருக்கோலக்கா, திருக்கோடிகா, திருநெல்லிகா என்னும் திருத்தலங்களின் பெயர்களை இங்கு நோக்கத்தக்கது. இதுபோன்று '''தேவன் எழுந்தருளிய கா தேவக்கா''' என வழங்கப்படுகிறது. பின்னர் அதனுடன் புரம் என்ற சொல் சேர்ந்து தேவிகாபுரம் என்று மருவியது எனக்கூறலாம்.
 
தனிபெரும்தனிப்பெரும் ஆலயத்துள் தேவி எழுந்தருளி இருந்து அருள்பாலித்து வருவதால் தேவி காத்தருளும் புரம் என்ற பொருளில் தேவிகாபுரம் என்று வழங்குகிறது எனக் கொள்ளினும் அதுவும் பொருந்துவதே ஆகும்.
 
==அருள்மிகு பெரியநாயகி அம்மன் திருக்கோயில்==
வரிசை 14:
 
===புடைப்புச் சிற்பங்கள்===
ஆயத்தின் நுழைவு வாயிலின் இருபுறமும் புடைப்புச் சிற்பங்களாக அமைந்த லிங்கோற்பவர், நரசிம்மர், காலபைரவர், அதிகாரந்ந்திஅதிகாரநந்தி, நடன மாதர், துவாரக பாலகர் போன்ற அற்புதமான சிற்பங்களைக் கண்டு களிக்கலாம். முகம்மதியர் படையெடுப்பால் இவற்றில் சில சிற்பங்கள் சிதைந்து காணப்படுகின்றன.
 
===காணவேண்டிய அழகிய மண்டபம்===
வரிசை 26:
இதனைக்கடந்து அர்த்த மண்டபத்தின் உள்ளே சென்றால் தெற்கு நோக்கியவாறு அருள் பாலிக்கும் நடராசமூர்த்தியைக் கண்டு வணங்கலாம். மேற்படி மண்டபத்தின் தென்பகுதியில் உற்சமூர்த்திகளையும் வணங்கலாம். அதுத்து விநாயகர், நால்வர், சேக்கிழார் ஆகியவர்களின் திருவுருவங்களையும் (மூலவர்கள்) முதல் பிரகாரத்தின் நுழைவு வாயிலின் இருபுறமும் துவாரபாலகிகளையும் வணங்கி மகிழலாம்.
 
இதையுங்கடந்து உள்ளே சென்றால் முதல் பிரகாரத்தை அடையலாம். இப்பிரகாரத்தில் விநாயகர் திருமால் வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமான், சண்டீஸ்வரர் ஆகிய தெய்வத்திற்குதெய்வ உருவங்களைக் கண்டு வணங்கலாம். எதிர்காலத்தில் வேறுசில தெய்வத்திருவுருவங்களை அமைக்கும் வாய்ப்பும் உள்ளன.
 
===அருளே வடிவான அன்னை பெரியநாயகி===
இவ்வாறு அனைத்து தெய்வங்களையும் வழிபாடு செய்து கொண்டு இறுதியில் உள் மண்டபத்தை அடைகிறோம். இதன் மேற்கில் அமைந்த கருவறையில் அருளே வடிவான அன்னை பெரியநாயகி பக்தர்களுக்குபக்தர்களுக்குக் காட்சி தரும் அற்புதமான கோலத்தைக் கண்டு வணங்கி துதித்து மகிழலாம். நாள் முழுவதும் கண்டு மகிழத்தக்க அருட்பேரழகினை உடையவள் அன்னை பெரியநாயகி. அன்னை மேல் இருகரங்களில் அபயம், வரதம் ஆகிய முத்திரைகளையும் கொண்டு நின்ற கோலத்தில் அழகுடன் காட்சியளிக்கின்றாள்.
 
==அருள்மிகு பொன்மலைநாதர் திருக்கோயில் (மலைக்கோயில்)==
 
===கனகாசலம் அல்லது கனக்கரி===
அம்பாள் ஆலயத்தின் பின்புறம் தென்மேற்கில் சிறிது தொலைவில் 500 அடி உயரம் 5 கி.மி. சுற்றளவும் 302 படிகளையும் கொண்ட கனகாசலம் அல்லது கனக்கரி என்னும் பெயருடையமலைபெயருடைய மலை அமைந்துள்ளது. இதன் உச்சியில் சுவாமி சுயம்பு மூர்த்தியாக எழுந்ருளியுள்ளார்எழுந்தருளியுள்ளார். சுவாமியின் திருப்பெயர் கனககிரி ஈஸ்வர்ர்ஈஸ்வரர் (அல்லது) பொன்மலைநாதர் என்பதாகும். கல்வெட்டுகள் இவரைத் திருமலை உடையார் அல்லது திருமலை உடைய நாயனார் என்றுஎன அழைக்கின்றன.
 
இக்கோயில் தோன்றிய வரலாற்றினைப் பற்றிய செவிவழிச்செய்திகள் இருவிதமாகக் கூறப்படுகின்றன. அவ்ற்றுள் ஒன்று (சிவமஞ்சரி 10 வது மலரில் வெளிவந்த கட்டுரை):
 
===பொன்போல் பிரகாசித்து மிதந்தது===
ஒரு சமயம் உலகம் ஒடுங்கிய ஊழி இரவில் உலகம் வெள்ளத்தால் அமிழ இம்மலைமட்டும் பொன்போல் பிரகாசித்து மிதந்தது.
 
எனவே இம்மலை பொன்மலைநாதர் என்றும் வழங்குவதாயிற்று. இதுவே வடமொழியில் கனகாசலம் , கனககிரி என்றும் இறைவனின் திருப்பெயர் கனக கிரிஸ்வர்ர்கிரிஸ்வரர் என்று வழங்குவதாயிற்று.
 
இம்மலையின் மீது பார்வதி தேவியார் சிவலிங்கம் அமைத்து நான்கு கால பூசை செய்தாள். அவள் பூசை செய்யும் சிறப்பையும் நேர்த்தியையும் காணச் சிவபெருமான் அருகில் சுயம்புலிங்கமாக எழுந்தருளினார். அவளுடைய அன்பையும் பத்தியையும் கண்டு அவளுக்குஅவளுக்குத் தரிசனம் தந்து அவளைத் தன் இடப்பாகத்தில் சேர்த்துக்கொண்டார். அந்த நாளே மகாசிவராத்திரி ஆகும்.
 
===அம்பிகை பூசை செய்வதாக ஐதீகம்===
இத்தலத்தில் இன்றும் சிவராத்திரி காலங்களில் அம்பிகை பூசை செய்வதாக ஐதீகம். எனவே சிவராத்திரி இரவில் நான்கு காலங்களிலும் இங்கு வழிபடுவது நாமும் அம்பிக்கையோடுஅம்பிகையோடு சேர்ந்து வழிபடுவதாகவே கருதப்படும். இங்குள்ள பிரதிக்ஷ்டாலிங்கம் தேவியால் அமைக்கப்பட்டதென்றும் அருகில் உள்ள சுயம்பு லிங்கம் இறைவன் தான் தோன்றியதாக (சுயம்புவாக) எழுந்தருளிய நிலை என்றும் கூறுவர்.
 
மற்றொரு செவிவழிச்செய்தி. ஒரு சமயம் இம்மலைப்பகுதி அடர்நத காடாக இருந்த போது வேடன் ஒருவன். கிழங்கு அகழந்து எடுப்பதற்காக மலையுச்சியில் இரும்புக் கருவியைக் கொண்டு தோண்டிய போது குபீர் என குருதி கொப்பளித்துக்கொட்டியது. அதைக் கண்ட்டகண்ட வேடன் உடனே ஊர் மக்களிடம் வந்து செய்தியைக் கூறினான். மக்கள் சிலர் மலையின் மீது சென்று மேலும் அகழ்ந்த போது ஓர் அழகிய சிவலிங்கத் திருமேனி காணப்பட்டது. அன்று முதல் மக்கள் அச்சிவலிங்கத்திற்கு வழிபாடு செய்து வந்தனர்.
 
===இரண்டு சிவலிங்க மூர்த்திகள்===
இவ்வாறு பூசை நடக்கும் நாளில் அவ்வழியாக வந்த அரசன் ஒருவன் இச்செய்தியைக் கேள்விப்பட்டு தான் கோவில் கட்டுவதாககட்டுவதாகக் கூறினான். பின்னர் அவ்வாறே கட்டி முடித்தான். அரசன் கட்டிமுடிக்கும் காலத்தில் சுவாமி மறைந்தருளினார். சுவாமி மறையவே அவ்வரசன் மிகவும் மனம் வருந்தி காசி விசுவநாதரை அமைத்துக் கும்பாபிசேகம் செய்த நாளன்று சுயம்பு மூர்த்தியும் தோன்றியருளினார். எனவே இன்னும் இரண்டு சிவலிங்க மூர்த்திகள் அமைந்திருப்பது நமக்குத் தெரிந்த அளவில் இத்திருத்தலத்தில் மட்டுமேயாகும்.
 
===கோயிலின் அமைப்பு===
இந்த மலைக்கோயில் கிழக்கு மேற்காக 185 அடி நீளமும் வடக்கு தெற்காக 75 அடி அகலமும் கொண்ட மதில்களுடன் விளங்குகிறது. இதன் முகப்பில் 36 கால்களை உடைய மண்டபத்துடன் கூடிய மூன்று நிலைகளைத்நிலைகளைக் கொண்ட இராசகோபுரம் காட்சியளிக்கிறது. இம்மண்டபத்தின் முன் திருநந்திதேவர் கொடிமரம், பலிபீடம் முதலியன உள்ளன. இவற்றை வணங்கி உள்ளே சென்றால் பிரகாரத்தில் தென்முக்க்கடவுள்தென்முகக்கடவுள் விநாயகர், ஆறுமுகர், விசாலாட்சி அம்மாள், சண்டீஸ்வர்ர்சண்டீஸ்வரர் முதலிய தெய்வத்திருவுருவங்களை (மூர்த்திகளை) வணங்கலாம்.
 
===அருணகிரிநாதர் எழுந்தருளி பாடலை அருளிச்செய்துள்ளார்===
வரிசை 60:
 
===காசி விசுவநாதர், பொன்மலை நாதர்===
இக்கோயிலின் அர்த்த மண்டபத்தில் அருமையான வேலைப்பாடுகளுடன் கூடிய சிற்பங்கள் காட்சியளிக்கின்றன. இவற்றைக் கடந்து உள்ளே சென்றால் கருவறையில் இரண்டு சிவலிங்க மூர்த்திகளைக் காணலாம். அம்மூர்த்திகளில் ஒருவர் அரசனால் பிரதிட்டை செய்யப்பட்டவர். அம்மூர்த்தியின் திருப்பெயர் காசி விசுவநாதர் என்பதாகும். மற்றொரு மூர்த்தி சுயம்புவாகத் தோன்றியவர். இவரின் திருப்பெயர் கனக கிரிஸ்வரர் (அல்லது) பொன்மலை நாதர் என்பதாகும். இவ்வருமூர்த்திகளும்இவ்விருமூர்த்திகளும் தன்னை மெய்யன்புடன் துதிக்கும் பக்தர்களுக்கு அனைத்து நலன்களையும் அளிக்கின்றனர் என்பது திண்ணம்.
 
===பார்வதி தேவி தவம் செய்த இடம்===
இம்மலையிலிருந்து இறங்கும் போது இடப்புறம் பார்வதி தேவி தவம் செய்ததாகக் கருதப்படும் இடம் ஒன்று உள்ளது. அங்குத் தேவியின் திருப்பாதங்கள் காட்சியளிக்கின்றன. வலப்புறத்தில் வீரபத்திதிரவீரபத்திர ஆலயம் விளங்குகிறது.
 
[[பகுப்பு:தமிழ்நாட்டுச் சுற்றுலா மையங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/தேவிகாபுரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது