அ. ச. ஞானசம்பந்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 1:
'''அ. ச. ஞானசம்பந்தன்''' (நவம்பர் 10, 1916 – ஆகஸ்ட் 27, 2002) ஒரு [[தமிழ்]] அறிஞர், எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். அவர் 1985ன் தமிழுக்கான [[சாகித்திய அகாதமி விருது]] பெற்றவர். சுருக்கமாக '''அ. ச. ஞா''' என்றும் அழைக்கப் பட்டார்.
==வாழ்க்கைக் குறிப்பு==
அ. ச. ஞானசம்பந்தன் [[திருச்சிராப்பள்ளி மாவட்டம்|திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்]] [[கல்லணை|கல்லணைக்கருகில்]] உள்ள [[அரசன்குடி]] என்ற ஊரில் பிறந்தவர். அவரது பெற்றோர் அ. மு. சரவண முதலியார் மற்றும் சிவகாமி ஆவர். அவரது தந்தை [[சைவம்|சைவசமய]] பக்திக் காவியமான [[திருவிளையாடல் புராணம்|திருவிளையாடல் புராணத்திற்கு]] உரையெழுதிய தமிழ் அறிஞர். ஞானசம்பந்தன் [[லால்குடி]] போர்டு உயர்நிலைப் பள்ளியில் படித்து முடித்த பின் இடைநிலை வகுப்புக்கு (இண்டெர்மீடியட்) [[அண்ணாமலைப் பல்கலைக்கழகம்|அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்]] [[இயற்பியல்]] பாடத்தைத் தேர்வு செய்து படித்தார்.
அங்கு தமிழ்ப் பேராசிரியராக இருந்த [[சோமசுந்தர பாரதியார்]] அவரது தமிழ் அறிவையும் ஆர்வத்தையும் அடையாளம் கண்டு அவரை இயற்பியலில் இருந்து தமிழுக்கு மாறும்படி செய்தார். அக்கல்லூரியில் படிக்கும்போது [[வி. எஸ். ஸ்ரீனிவாச சாஸ்திரி]], [[திரு. வி. க]], [[பொ. மீனாட்சி சுந்தரம்]] போன்ற தமிழ் அறிஞர்களின் தொடர்பு அவருக்குக் கிடைத்தது. தமிழில் முதுகலைப் பட்டம் பெற்று 1942ல் [[பச்சையப்பன் கல்லூரி|பச்சையப்பன் கல்லூரியில்]] தமிழ் விரிவுரையாளராக வேலையில் சேர்ந்தார். அக்கல்லூரியில் 1956 வரை வேலை பார்த்தார்.
"https://ta.wikipedia.org/wiki/அ._ச._ஞானசம்பந்தன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது