'''போரிஸ் லியோனிடவிச் பாஸ்ரர்நாக்''' அல்லது '''போரிஸ் லியோனிடவிச் பாஸ்டர்நாக்''' (Boris Leonidovich Pasternak, ([[ரஷ்ய மொழி]]: Борис Леонидович Пастернак) ([[பெப்ரவரி 10]] [[1890]] - [[மே 30]], [[1960]]) [[ரஷ்யா|ரஷ்ய]]க் கவிஞரும், புதின எழுத்தாளருமாவார். [[1958]] ஆம் ஆண்டுக்கான [[நோபல் பரிசு|நோபல் பரிசை]]த் தனது [[டாக்டர் ஷிவாகோ (புதினம்)|டாக்டர் ஷிவாகோ]] புதினத்துக்காகப் பெற்றவர். இப்புதினத்தின் மூலம் அவர் மன்னர் காலத்து உயர் வகுப்பினரதும் ஏனைய வகுப்பைச் சார்ந்தவர்களினதும் நடைமுறை உண்மையை எடுத்துக் காட்டியிருந்தார். [[அக்டோபர் புரட்சி]]யின் பின்னர் ஏற்பட்ட மாறுதல்களை விவரித்திருந்தார். இந்நாவல் முதன் முதலில் [[இத்தாலி]]ய மொழியில் [[1957]]இல் மொழிபெயர்க்கப்பட்டது. இதன் [[ஆங்கிலம்|ஆங்கில]] மொழிபெயர்ப்பு [[1958]]இல் வெளிவந்தது.