முரளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பக்கவழி நெறிப்படுத்தல் |
No edit summary |
||
வரிசை 1:
{{Infobox actor
| name = முரளி
| image = murali.jpg
| caption = முரளி
| birth_place = [[பெங்களூர்]],
| residencymp =[[சென்னை]]
| death_date =
| death_place = சென்னை
| salary =
| spouse = ஷோபா
| children =காவ்யா, அதர்வா, ஆகாஷ்
}}
'''பூ விலங்கு'''
1984-ம் வருடம், பூ விலங்கு என்ற படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு கதாநாயகனாக அறிமுகமானவர், முரளி. இவருடைய சொந்த ஊர், பெங்களூர். முரளியின் தந்தை சித்தலிங்கப்பா, பிரபல கன்னட டைரக்டர் ஆவார். நடிகர் முரளி அ.தி.மு.க.வில் கட்சியில் இணைந்து இருந்தார்.
புதுவசந்தம், இதயம், காலமெல்லாம் காதல் வாழ்க, பொற்காலம், வெற்றிக்கொடி கட்டு உள்பட 98 படங்களில் கதாநாயகனாக நடித்தார். சமீபத்தில் திரைக்கு வந்த பானா காத்தாடி படத்தில், அவருடைய மகன் அதர்வா கதாநாயகனாக அறிமுகம் ஆனார்.
[[File:murali 01.jpg|thumb|right|
நடிகர் முரளி தனது மனைவி ஷோபாவுடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்த போது எடுத்த படம்..]]
'''99-வது படம்'''
அந்த படத்தில், மருத்துவ கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவராக, கவுரவ வேடத்தில் முரளி நடித்து இருந்தார். அது, அவருடைய 99-வது படம்.
அவருடைய 100-வது படமாக, விடியல் காரணம் என்ற படம் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக, தனது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் முரளி ஈடுபட்டு இருந்தார். இந்த நிலையில், தூங்கிக்கொண்டிருக்கும் போது முரளிக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.
'''46 வயது'''
மரணம் அடைந்த முரளிக்கு வயது 46. மிக இளமையான தோற்றம் கொண்ட நடிகர்களில் இவரும் ஒருவர். 98 படங்களில் கதாநாயகனாகவே நடித்தார். அதுவும், பெரும்பாலான படங்களில் கல்லூரி மாணவராகவே வந்தார். இன்னமும் கல்லூரி மாணவர்தானா? என்று மற்ற நடிகர்கள், முரளியை கிண்டல் செய்கிற அளவுக்கு, இளமையாக காணப்பட்டார்.
முரளியும், அவர் மனைவி ஷோபாவும் காதல் திருமணம் செய்தவர்கள். இவர்களுக்கு காவ்யா என்கிற மகளும் அதர்வா, ஆகாஷ் என 2 மகன்களும் உள்ளனர்.
'''நடிகர்-நடிகைகள் அஞ்சலி'''
ஆஸ்பத்திரியில் இருந்து முரளியின் உடல், சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வீட்டுக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு ஏராளமான நடிகர்-நடிகைகளும், திரையுலக பிரமுகர்களும் முரளியின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.
நடிகர் ரஜினிகாந்த், சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர், சிவகுமார், சூர்யா, கார்த்திக், அர்ஜுன், பார்த்திபன், சுரேஷ், மோகன், ஷாம், பிரசன்னா, கரண், சரவணன், ஜித்தன் ரமேஷ், மன்சூர் அலிகான், எஸ்.வி.சேகர், ராஜேஷ், நாசர், விவேக், ஆனந்தராஜ், ஆனந்த் பாபு, இளவரசு, செந்தில், சின்னி ஜெயந்த், ரமேஷ்கண்ணா, தியாகு, எம்.எஸ்.பாஸ்கர், வையாபுரி, தலைவாசல் விஜய், போஸ் வெங்கட், பாபுகணேஷ், கே.ராஜன், நடிகைகள் ராதிகா சரத்குமார், சினேகா, தன்ஷிகா, ரேவதி, நளினி, குயிலி, சத்யப்ரியா, பாத்திமா பாபு, ஆர்த்தி கணேஷ்,
நடிகர் கமல்ஹாசன், டைரக்டர் கவுதம் மேனன் ஆகிய இருவரும் வெளிநாடுகளில் இருந்து போன் மூலம் முரளியின் மகன் அதர்வாவிடம் துக்கம் விசாரித்தார்கள்.
|