க. அ. நீலகண்ட சாத்திரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 46:
| year = 2009
| isbn = 978-0195697872
}}</ref> தமிழ் வரலாற்றாளரான [[ஆ. இரா. வேங்கடாசலபதி]], [[20ம் நூற்றாண்டு|இருபதாம் நூற்றாண்டில்]] தமிழ் நாட்டின் சிறந்த வரலாற்றாளராக நீலகண்ட சாஸ்திரியைக் கருதுகிறார். 1915ல் வங்காள வரலாற்றாளர் ஜாதுநாத் சர்க்கார், ''கன்ஃபஷன்ஸ் ஆஃப் அ ஹிஸ்டரி டீச்சர்'' (''மாடர்ன் ரிவ்யூ'' இதழ்) என்ற கட்டுரையில் வட்டார மொழிகளில் வரலாற்றுப் படைப்புகள் அதிகம் இல்லை என்றும் வட்டார மொழிகளில் வரலாற்றுப் புத்தகங்கள் அவசியம் வெளிவரவேண்டும் மற்றும் வரலாற்றுப் பாடம் வட்டார மொழிகளில் பயிற்றுவிக்கப் படவேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். அப்போது திருநெல்வேலியில் ஆசிரியராக இருந்த நீலகண்ட சாஸ்திரி தமிழைவிட [[ஆங்கிலம்]] தான் தன் கருத்துக்களை எழுத வசதியாக இருப்பதாகவும் வட்டார மொழிகள் அந்த அளவுக்கு வளமானதாக இல்லாததுதான் அதற்குக் காரணம் எனவும் சர்க்காரின் கருத்துக்கு மறுப்புத் தெரிவித்து செய்தித்தாளில் எழுதியிருந்தார். சாஸ்திரியின் இக்கருத்துக்கள் [[சுப்பிரமணிய பாரதி]]யின் வன்மையான கண்டனத்துக்குள்ளானதுகண்டனத்துக்குள்ளாயின.<ref name="coffeep2">{{cite book | title=In Those Days There was No Coffee: Writings in Cultural History| last=Vēṅkaṭācalapati|first=Ā. Irā | year=2006| publisher=Yoda Press|pages=2|id=ISBN 81-902272-7-0, ISBN 978-81-902272-7-8}}</ref><ref name="coffeep3">{{cite book | title=In Those Days There was No Coffee: Writings in Cultural History| last=Vēṅkaṭācalapati|first=Ā. Irā | year=2006| publisher=Yoda Press|pages=3|id=ISBN 81-902272-7-0, ISBN 978-81-902272-7-8}}</ref>
 
நீலகண்ட சாஸ்திரிக்கு ஆழமான தமிழ் அறிவு கிடையாது என்றும் தமிழ் இலக்கியங்களை [[ச. வையாபுரிப்பிள்ளை]]யின் உரைகளின் துணையோடுதான் புரிந்து கொள்ள முடிந்தது என்றும் வேங்கடாசலபதி கூறுகிறார். இதனால் நீலகண்ட சாஸ்திரியால் காலமாற்றத்துக்கு ஏற்றவகையில் தமிழ் வார்த்தைகளுக்குப் பொருள் கொள்ள இயலவில்லை என்றும் அவர் கருதுகிறார். மேலும் சாஸ்திரியின் காலத்தில் தமிழ் நாட்டில் கிடைத்த ஆதாரங்களை வேறு களங்களில் உள்ள ஆதாரங்களோடு ஒப்பிட்டு ஆராயும் பழக்கம் வரலாற்றியலில் இருக்கவில்லை எனவும் அவர் கூறுகிறார்.<ref name="coffeep4">{{cite book | title=In Those Days There was No Coffee: Writings in Cultural History| last=Vēṅkaṭācalapati|first=Ā. Irā | year=2006| publisher=Yoda Press|pages=4–5|id=ISBN 81-902272-7-0, ISBN 978-81-902272-7-8 | url = http://books.google.com/books?id=tk-KZmcUEvAC | authorlink=A R Venkatachalapathy}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/க._அ._நீலகண்ட_சாத்திரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது