அ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
 
=="அ" வின் வகைப்பாடு==
தமிழ் எழுத்துக்களின் உள்ள [[உயிரெழுத்து]], [[மெய்யெழுத்து]] என்னும் இரண்டு வகைகளில் '''அ''' உயிரெழுத்து வகையைச் சேர்ந்தது. ஒலிக்கும் கால அளவின் அடிப்படையில் இது குற்றெழுத்து எனப்படுகின்றது. குற்றெழுத்துக்கள் ஒரு [[மாத்திரை (இலக்கணம்)|மாத்திரை]] அளவே ஒலிக்கும் தன்மை வாய்ந்தன. இதனால் இவ்வெழுத்தும் ஒரு மாத்திரை அளவுடனேயே ஒலிக்கும்<ref>''தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை'', 2006 பக். 11</ref>
 
 
தமிழில் உள்ள சுட்டெழுத்துக்கள் மூன்றில் இதுவும் ஒன்று. இது சேய்மைச் சுட்டைக் குறிக்கப் பயன்படுகின்றது<ref>இளவரசு, சோம., 2009. பக். 42</ref>. எடுத்துக்காட்டாக அவன், அது, அங்கே போன்ற சேய்மைச் சுட்டுச் சொற்களில் '''அ''' முதல் எழுத்தாக நிற்பதைக் காணலாம். இந்த எடுத்துக் காட்டுக்களில் '''அ''' சொல்லின் உள்ளேயே வருவதால் அது அகச் சுட்டு எனப்படுகின்றது. '''அ''' புறச் சுட்டாகவும் வருவதுண்டு. அவ்வாறு வரும்போது அது சொல்லுக்குப் புறம்பாக நிற்கும்<ref>இளவரசு, சோம., 2009. பக். 42</ref>. அப்பெண் (அ + பெண்), அம்மனிதன் (அ + மனிதன்) போன்ற சொற்கள் இதற்கு எடுத்துக்காட்டுக்கள்.
 
==இனவெழுத்துக்கள்==
வரிசை 18:
==எழுத்து முறையில் "அ"==
[[படிமம்:Writing_Tamil_2.gif|thumb|250px|'அ' எழுதும் முறை]]
முறை என்பது எழுத்துக்களின் ஒழுங்கு. தமிழ் நெடுங்கணக்கில் '''அ''' முதல் எழுத்தாக வைக்கப்பட்டுள்ளது என்று முன்னரே கூறப்பட்டது. அகரம் தானும் இயங்கித் தனி மெய்களையும் இயங்கவைக்குக் சிறப்பால் முதலில் வைக்கப்பட்டது என்று [[தொல்காப்பியம்|தொல்காப்பிய]] உரையில் [[இளம்பூரணர்]] கூறுகிறார்<ref>''தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை'', 2006 பக். 10</ref>. உயிரெழுத்துக்கள் எல்லாமே தாமும் தனித்தியங்கி, மெய்களையும் இயங்கவைப்பதால் உயிர்கள் அனைத்தும் மெய்களுக்கு முன் வைக்கப்பட்டன என்றும், உயிர்களுள்ளும் '''அ'''. '''ஆ''' என்பன பிற உறுப்புக்களின் முயற்சியின்றிப் பிற உயிர்களிலும் குறைந்த முயற்சியுடன் அங்காந்து கூறுவதனால் மட்டும் உருவாவதால் அவை முன் வைக்கப்பட்டன என்றும், '''ஆ''', '''அ''' வின் விகாரமே என்பதால் '''அ''' முதலில் வைக்கப்பட்டது என்பதும் [[நன்னூல் விருத்தியுரை]]யில் தரப்படும் விளக்கம் ஆகும்<ref>''நன்னூல் விருத்தியுரை'', 2004 பக். 49</ref>.
 
=="அ" வும் மெய்யெழுத்துக்களும்==
'''அ''' வுடன் மெய்யெழுத்துக்கள் சேர்ந்து அகர உயிர் மெய்யெழுத்துக்கள் உருவாகின்றன. மெய்யெழுத்துக்கள் முதலெழுத்துக்களாக இருப்பினும் வரிவடிவங்களில் எழுதும்போது மூல வரிவடிவங்கள் அகரத்தோடு கூடிய மெய்யெழுத்துக்களையே குறிக்கின்றன. தனி மெய்களை எழுதும்போது அவற்றுக்கு மேல் ஒரு புள்ளியிட்டுக் காட்டப்படுகின்றது<ref>''தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை'', 2006 பக். 15</ref>.
 
 
வரிசை 69:
 
==சொல்லில் அகரம் வரும் இடங்கள்==
தனி '''அ''' சொற்களில் முதல் எழுத்தாக வரும். க், த், ந், ப், ம், வ் ஆகிய மெய்யெழுத்துக்களுடன் சேர்ந்தும் '''அ''' சொற்களுக்கு முதலாக வரும் என்கிறது தொல்காப்பியம்<ref>''தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை'', 2006 பக். 33</ref>. இதிலிருந்து தொல்காப்பியத்தின்படி ங, ச, ஞ, ட, ண, ய, ர, ல, ழ, ள ற, ந ஆகிய எழுத்துக்கள் சொற்களுக்கு முதலாக வரா என்பது தெளிவு. ஆனால் நன்னூல், க, ஞ, ச, ங, த, ந, ப, ம, வ, ய ஆகிய 10 அகர உயிர்மெய்களும் சொல்லுக்கு முதலில் வரும் என்கிறது<ref>இளவரசு, சோம., 2009. பக். 55</ref>. இதன்படி தொல்காப்பியத்தில் சொல்லப்படாத ங, ஞ, ச, ய என்னும் நான்கு எழுத்துக்களும் கூட சொற்களுக்கு முதலாக வரும் என்கிறது நன்னூல்.
 
 
அகரம் தனித்து நின்று சொல்லுக்கு இறுதியாக வருவதில்லை. ஆனால் எல்லா மெய்களோடும் சேர்ந்து அகரம் சொல்லுக்கு இறுதியில் வரும். [[உயிரளபடை]]களில் சொல்லுக்கு இறுதியில் '''அ''' இட்டு எழுதுவது வழக்கு ஆயினும், அது நெட்டுயிர்களின் மாத்திரை மிகுந்து ஒலிப்பதைக் காட்டுவதற்கான ஒரு குறியீடாக எழுதப்படுகிறதே அன்றி அது தனி அகரமாக நிற்பதில்லை. அகரம் தனியே சொற்களுக்கு இடையிலும் வருவதில்லை. பிற மெய்களுடன் கூடியே வரும்<ref>இளவரசு, சோம., 2009. பக். 57</ref>.
 
==அகர ஒலிப்பிறப்பு==
தொல்காப்பியம் எல்லா உயிர்களும் தொண்டையில் இருந்து பிறக்கும் வளிமூலம் உருவாகிறது என்றும், '''அ''' வெறுமனே வாயைத் திறக்கும் முயற்சியால் உருவாகும் என்றும் கூறுகிறது<ref>''தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை'', 2006 பக். 42</ref>. இது இன்றைய மொழியியலாளர்களில் கருத்தோடு ஒத்துப் போகிறது. தற்கால [[மொழியியல்|மொழியியலின்]] அடிப்படையில், தொண்டையின் ஊடாக வரும் காற்று, [[நாக்கு]] கீழே படிந்திருக்க [[வாய்|வாயில்]] தடையின்றி, வெளியேறும்போது உருவாவதே அகாரம் ஆகும்<ref>சுப்பிரமணியன், சி., 1998 பக். 32</ref><ref>வேலுப்பிள்ளை, ஆ., 2002. பக். 43</ref>
 
==வரிவடிவம்==
"https://ta.wikipedia.org/wiki/அ" இலிருந்து மீள்விக்கப்பட்டது