புதினம் (இலக்கியம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: bar, ml அழிப்பு: af, ar, bat-smg, be-x-old, bg, bs, ca, cs, cv, da, de, el, en, eo, es, et, eu, fi, fr, gan, gd, he, hr, hu, hy, id, it, ja, ka, ko, lb, lt, lv, mk, ms, nl, nn, no, pl, p
வரிசை 1:
'''புதினம்''' என்பது மக்களால் பரவலாக விரும்பப்படும் ஒரு [[இலக்கியம்|இலக்கிய]] வடிவம் ஆகும். இதில் வாழ்க்கையும், நிகழ்வுகளும் [[கற்பனை]]யாக [[உரைநடை]]யில் எழுதப்படுகின்றன. தற்காலப் பயன்பாட்டில் புதினம், நீளமாக இருத்தல், [[புனைகதை]]யாக அமைதல், உரைநடையில் எழுதப்படல் போன்ற இயல்புகளால் ஏனைய இலக்கிய வடிவங்களிலிருந்து வேறுபடுத்தப்படுகின்றது. இது பொதுவாக நூல் வடிவில் வெளியிடப்படுகின்றது. எனினும் புதினங்கள் வார, மாத [[சஞ்சிகை]]களில் தொடராக வெளிவருவதும் உண்டு.
நாவல் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் இலக்கியவடிவம் உரைநடையில் அமைந்த நீள்கதை. இது புத்திலக்கியவகையாக ஐரோப்பாவில் பதினெட்டாம் நூற்றாண்டில் உருவானது. ஆனால் பத்தாம்நூற்றண்டிலேயே சீனாவில் நாவல்கள் இருந்துள்ளன. இதுசீனப்பெருநாவல்மரபு எனப்படுகிறது. நாவல் என்பது தமிழில் திசைச்சொல்லாக அப்படியே கையாளப்படுகிறது. புதினம் என்றும் சொல்லப்படுகிறது.
 
தமிழில் எழுதப்பட்ட முதல் நாவல் 1879 ல் வெளிவந்த பிரதாப முதலியார் சரித்திரம். இது மாயூரம் வேதநாயகம்பிள்ளையால் எழுதப்பட்டதாகும். சிலவருடங்களுக்குள் வெளிவந்த பிற இரு நாவல்களும் முன்னோடிகளாக கருதப்படுகின்றன. அவை ராஜம் அய்யர் எழுதிய கமலாம்பாள் சரித்திரம் அ.மாதவையா எழுதிய பத்மாவதி சரித்திரம். ஏறத்தாழ இக்காலத்தில் ஈழ இலக்கியத்தில் முதல் நாவல் உருவானது. சித்தி லெப்பை மரைக்காயர் எழுதிய அசன்பே சரித்திரம்
 
தமிழில் நாவல்கலை பெரும் வளர்ச்சியைக் கண்டுவருகிறது. தமிழ்நாவல்களின் வரலாற்றை சிட்டி சிவபாதசுந்தரம் எழுதிய தமிழ்நாவல் வரலாறு என்ற நூலில் காணலாம்.நாவலின் வடிவம் பற்றி ஜெயமோகன் நாவல் என்ற கோட்பாட்டு நூலை எழுதியிருக்கிறார்
 
=வெளி இணைப்புகள்=
* [http://jeyamohan.in/?p=206 நாவல் – ஒரு சமையல்குறிப்பு - [[ஜெயமோகன்]]]
"https://ta.wikipedia.org/wiki/புதினம்_(இலக்கியம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது