சென்னை சாந்தோம் பேராலயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சேர்க்கை - திருத்தம் |
|||
வரிசை 1:
{{Infobox building
| name =
| fullname =
| image = Santhome_Basilica.jpg
| imagesize =
| landscape =
| caption = சாந்தோம் தேவாலயம்/கோவில்
| location = [[சென்னை]], [[தமிழ்நாடு]]
| country = [[இந்தியா]]
வரிசை 18:
| founded date =
| founder =
| dedication = [[சீடர்
| dedicated date =
| consecrated date =
| cult =
| relics = புனித
| events =
| past bishop =
| people =
| status = உயர் மறைமாவட்டப் பேராலயம்; [[சிறு பசிலிகா]]<ref>[http://www.santhomebasilica.com/basilica.html About San Thome Basilica]</ref>
| functional status = நடப்பில் உள்ளது
| heritage designation = தேசிய வழிபாட்டுத்தலம் <ref>[http://www.santhomebasilica.com/history.html National Shrine Status]</ref>
| designated date = 7 பிப்ரவரி, 2006
| architect =
| architectural type = புது-கோதிக்
| style = [[கோதிக்
| groundbreaking =
| completed date = 1523
வரிசை 50:
| spire height = {{convert|47.2|m|ft}}
| materials =
| parish = சாந்தோம் பங்கு
| deanery =
| archdeaconry =
| diocese = சென்னை மயிலை உயர் மறைமாவட்டம்
| province =
| presbytery =
வரிசை 61:
| division =
| subdivision =
| archbishop =
| bishop = ஆயர் பேரருள்திரு லாரன்சு பயசு
| dean =
| subdean =
வரிசை 102:
}}
'''சாந்தோம் பசிலிகா''' (Santhome Basilica) [[இந்தியா]]வின் [[சென்னை]]யில் [[மயிலாப்பூர்|சாந்தோம்]] பகுதியில் அமைந்துள்ள ஓர் [[சிறு பசிலிகா]] வகையைச்சேர்ந்த [[ரோமன் கத்தோலிக்கம்|ரோமன் கத்தோலிக்க]] தேவாலயமாகும். இது 16ஆம் நூற்றாண்டில் [[போர்த்துகல்|போர்த்துகீசிய]]
சாந்தோம் தேவாலயம்/கோவில்/பசிலிகா புனிதா தோமா என்னும் திருத்தூதருக்கு அர்ப்பணிக்கப்பட்ட வழிபாட்டுத் தலம் ஆகும். சாந்தோம் என்னும் சொல் San + Thome என்னும் இரு சொற்கள் இணைந்து பிறக்கின்ற போர்த்துகீசிய வடிவமாகும். அது புனித தோமா என்று பொருள்படும்.
சென்னை மைலாப்பூர் ரோமன் கத்தோலிக்கம்|கத்தோலிக்க மறைபேராண்மையில் சாந்தோம் பசிலிக்காவே முதன்மை தேவாலயமாகும்.1956ஆம் ஆண்டு போப்பரசர் பயஸ் XII இதற்கு சிறிய பசிலிகா நிலையை அளித்தார். பிப்ரவரி 11,2006ஆம் ஆண்டு இது இந்திய கத்தோலிக்க மறைபேராளர்கள் மாநாட்டில் தேசிய வழிபாட்டுத்தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிறித்தவர்களுக்கு இது ஓர் முக்கியமான புனிதத்தலமாகும். தேவாலயத்தில் ஓர் அருங்காட்சியகமும் உள்ளது.▼
==இந்தியாவில் புனித தோமா==
இந்தியாவில் [[தோமா கிறித்தவர்]] [[(Thomas Christians)]] நடுவிலும் பிற இடங்களிலும் நிலவுகின்ற பழைமையான மரபுப்படி, [[இயேசு கிறித்து|இயேசு கிறிஸ்துவால்]] தேர்ந்தெடுக்கப்பட்ட பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவரான [[தோமா_(திருத்தூதர்)|புனித தோமையார்]]<ref>[http://en.wikipedia.org/wiki/Thomas_the_Apostle புனித தோமா: வரலாற்றுக் குறிப்பு]</ref> கி.பி. 52ஆம் ஆண்டு [[பாலஸ்தீனம்|பாலசுதீனத்திலிருந்து]] இந்தியாவின் தென்மேற்குக் கடற்கரையில் அமைந்துள்ள மலபார் பகுதியில் கொடுங்ளூரில் (பண்டைய சேர நாட்டு "முசிறிப்பட்டினம்") வந்து, கிறித்தவ சமயத்தைப் பரப்பினார். இருபது ஆண்டு பணிக்காலத்தில் இன்றைய கேரளப் பகுதியிலும் கன்னியாகுமரி மாவட்ட நாஞ்சில் நாடு பகுதியிலும் கிறித்தவ சபைகளை உருவாக்கினார். பின்னர் இன்றைய ''புனித தோமா மலையில்'' (Saint Thomas Mount) அருகில் ''சின்னமலை''யில் (Little Mount) தம் கிறித்தவ நம்பிக்கையின் பொருட்டு கி.பி. 72இல் ஈட்டியால் குத்திக் கொல்லப்பட்டார். அவரது உடல் சென்னை நகரின் பகுதியாய் உள்ள [[மயிலாப்பூர்|மயிலாப்பூரில்]] அடக்கம் செய்யப்பட்டது என்றும் அக்கல்லறையின் மீது புனித தோமையார் நினவாகக் கோவில் கட்டப்பட்டது என்றும் கிறித்தவ மரபு கூறுகிறது.
==புனித தோமா இந்தியா வந்தார் என்பதற்கு மறுப்பும் அதற்குப் பதில்மொழியும்==
புனித தோமா இந்தியா வந்து கிறித்தவ மறையைப் பரப்பினார் என்பதும், அங்கு இறந்து மயிலாப்பூரில் அடக்கம் செய்யப்பட்டார் என்பதும் வரலாற்று அடிப்படியில் நிறுவப்படமுடியாது என்று சிலர் வாதாடுகின்றனர். தோமா இந்தியா வந்தார் என்பதை அகழ்வாய்வு, இலக்கியச் சான்று போன்றவற்றின் அடிப்படையில் ஐயமற நிறுவ முடியாது என்றாலும் அவர் இந்தியா வந்து கிறித்தவ மறையை இங்கு பரப்பி, இங்கு உயிர்துறந்திருக்கலாம் என்பதை ஏற்பதற்குக் கீழ்வரும் சான்றுகள் உள்ளன:
*கி.பி. முதல் நூற்றாண்டில் உரோமை, எகிப்து, மேற்கு ஆசியா உட்பட பல நாட்டுப் பகுதிகளுக்கும் சங்க காலத் தமிழகத்திற்குமிடையே (சேர நாடு = இன்றைய கேரளம்; பாண்டிய நாடு) வணிகப் போக்குவரது இருந்துவந்தது என்பதற்குச் சங்க இலக்கியங்களும் அகழ்வாய்வுகளும் சான்று பகர்கின்றன<ref>[http://news.bbc.co.uk/2/hi/4970452.stm முசிறிப் பட்டினத்தில் பண்டைய உரோமை கலைப்பொருள்கள்]</ref><ref>[http://en.wikipedia.org/wiki/Muziris முசிறி துறைமுகத்தின் சிறப்பு]</ref><ref>[http://en.wikipedia.org/wiki/Periplus_of_the_Erythraean_Sea பெரிப்ளுசு - கடல்பயணக் குறிப்புகள்]</ref>
*கி.பி. 3-4ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கிறித்தவ ஆசிரியர் பலர் புனித தோமா இந்தியா வந்து கிறித்தவத்தைப் பரப்பியதாகக் குறிப்பிடுகிறார்கள். இவர்களுள் புனித எப்ரேம் (St. Ephrem) (காலம்: கி.பி. 306-373)<ref>[http://nasrani.net/saint-thomas-christians-chronological-events-from-first-century-to-twenty-first-century/ புனித எப்ரேம்]</ref>, புனித நசியான் கிரகரி (கி.பி. 329-390), புனித அம்புரோசு (கி.பி. 340-395) முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
*மேலை நாடுகளிலிருந்து இந்தியாவுக்குப் பயணமாக வந்த பலர் புனித தோமா இந்தியா வந்தது பற்றியும், அவர் இறந்து மயிலாப்பூரில் அடக்கம் செய்யப்பட்டதையும் குறிப்பிட்டு, தாங்களும் அப்புனிதரின் கல்லறையைச் சந்தித்ததாகக் குறிப்பிடுகிறார்கள்<ref>[http://www.newadvent.org/cathen/14678a.htm புனித தோமாவின் இந்திய வருகை - கத்தோலிக்கக் கலைக்களஞ்சியம்]</ref>
==சாந்தோம் கோவில் வரலாறு==
பண்டைய கிறித்தவ ஆசிரியர்களின் குறிப்புகள்படி, தோமா இறந்ததும் அவரது உடல் அவரே கட்டியிருந்த சிறு கோவிலில் அடக்கப்பட்டது. கி.பி. 10ஆம் நூற்றாண்டில் கிறித்தவர்கள் தோமா அடக்கப்பட்ட இடத்தில் ஒரு கோவில் கட்டினார்கள். [[மார்க்கோ போலோ]] என்னும் இத்தாலிய பயணி 1292இல் மயிலாப்பூர் சென்றதாகக் குறிப்புடுகிறார். 1349இல் ஜான் தே மரிஞ்ஞோலி என்பவர் புனித தோமா கோவிலையும் கல்லறையையும் சந்தித்ததாக எழுதுகிறார்.
1517ஆம் ஆண்டும், 1521ஆம் ஆண்டும் போர்த்துகீசியர் தருகின்ற குறிப்புகள்படி, அவர்கள் தோமா கோவில் பாழடைந்து கிடந்ததைக் கூறுகிறார்கள்; ஒரு சிற்றாலயம் மட்டும் தோமாவின் கல்லறையை அடையாளம் காட்டியது. அது "பென் தூமா" ("தோமாவின் வீடு" என்பது பொருள்) என்று அழைக்கப்பட்ட ஒரு சிறு கோவில்; அது ஓர் இசுலாமியரின் கண்காணிப்பில் அப்போது இருந்ததாம்.
1523இல் போர்த்துகீசியர் தோமா கல்லறைமீது பெரிய அளவில் ஒரு கோவிலைக் கட்டி எழுப்பினார்கள்; அதோடு சாந்தோம்-மயிலாப்பூர் என்னும் மறைமாவட்டமும் நிறுவப்பட்டது (கி.பி. 1523). அகுஸ்தின் சபை சார்ந்த செபஸ்தியான் தே பேத்ரோ என்பவர் அம்மறைமாவட்டத்தின் ஆயராக நியமிக்கப்பட்டார். போர்த்துகீசியர் தங்கள் குடியிருப்பைப் பாதுகாக்க ஒரு கோட்டை கட்டினார்கள். அது பின்னாட்களில் டச்சுக்காரர்களால் தகர்க்கப்பட்டது.
போர்த்துகீசியர் கட்டிய சாந்தோம் கோவில் பழுதடையத் தொடங்கிய நிலையில் புதியதொரு கோவில் கட்ட வேண்டியதாயிற்று. ஹென்ரி ஃகொசே என்னும் மறை ஆயரின் தலைமையில் 1893ஆம் ஆண்டு புதிய கோவில் வேலை தொடங்கியது. மயிலாப்பூரில் தங்கியிருந்த கேப்டன் பவர் (Captain J.A. Power) என்பவர் புதிய கோவிலுக்கு வடிவம் கொடுத்தார். அவர் பிரித்தானிய பொறிநுட்ப வல்லுநர். புதிய கோதிக் என்னும் கட்டடப்பாணியில் கோவிலை விரித்து, பெரிதாகக் கட்ட பவர் பெரிதும் துணைபுரிந்தார்.
கோதிக் கட்டடப்பாணியில் உயர்ந்த கோபுரங்கள் எழுப்புவது வழக்கம். சாந்தோம் கோவிலின் கோபுரம் 155 அடி உயரம் கொண்டது. கோவிலின் உட்பகுதி 112 அடி நீளமும் 33 அடி அகலமும் கொண்டது. பலிபீடம் அடங்கிய திருத்தூயகப் பகுதி 62 அடி நீளம், 33 அடி அகலம்; கோவில் உட்பகுதியில் மேல்கூரை உயரம் 36 அடி 6 அங்குலம்; திருத்தூயகப் பகுதியில் கூரை உயரம் 41 அடி 6 அங்குலம்.
கோவில் உட்பகுதியில் 36 பெரிய சாளரங்கள் உள்ளன. அவற்றில் ''நிறப்பதிகைக் கண்ணாடி'' (stained glass) அமைக்கப்பட்டு, கதிரவன் ஒளி கோவிலின் உள் இதமாக நுழைய வழியாகின்றன. கிறித்தவ சமயம் தொடர்பான காட்சிகள் அக்கண்ணாடிப் பதிகையில் எழிலுற அமைக்கப்பட்டுள்ளன. திருத்தூயகத்தின் பின்புறம் அமைந்துள்ள பெரிய நிறப்பதிகைக் கண்ணாடி செருமனியில் மூனிச் நகரில் அமைந்த மையர் (Mayer) நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. அதில் ஒரு பகுதியில் இயேசு தோமாவுக்குத் தோன்றும் காட்சி எழிலுற வடிக்கப்பட்டுள்ளது.
▲சென்னை மைலாப்பூர் ரோமன் கத்தோலிக்கம்|கத்தோலிக்க
2004ஆம் ஆண்டிலும் அதைத் தொடர்ந்தும் சாந்தோம் கோவிலும் தூய தோமா கல்லறைச் சிற்றாலயமும் அழகுற புதுப்பிக்கப்பட்டு வனப்போடு விளங்குகின்றன.
==படத்தொகுப்பு==
<gallery>
Image:SanThomeCathedralBasilica.jpg|தேவாலயத்தின் மாலைநேர காட்சி
வரி 124 ⟶ 160:
==வெளிப்புற இணைப்புகள்==
* [http://www.
* [http://maps.google.com/maps?f=q&source=s_q&hl=en&geocode=&q=13.033743,80.277936&sll=13.032593,80.275962&sspn=0.031316,0.038452&ie=UTF8&z=17 Goole Maps location]
* [http://sites.google.com/site/santhomythgrp/ San Thome Church Youth Group]
|