இரண்டாம் வகைப் பூச்சுக்கள் கண்ணாடிகள் தூய்மையாவதற்கு முதல் வகையிலும் வேறான முறையொன்றைப் பயன்படுத்துகின்றன. இவ்வகையின் பெயர் குறித்துக் காட்டுவதுபோல் நீர் மூலக்கூறுகளைக்[[மூலக்கூறு]]களைக் கவர்வதன் மூலம் கண்ணாடியில் விழும் நீர் கண்ணாடியில் பரவிச் செல்ல உதவுகின்றன. தூசி கலந்த நீர் கண்ணாடி முழுவதும் சீராகப் பரவாமல் குறித்த வழிகளில் வழிந்தோடுவதாலேயே காயும்போது அழுக்குக் கோடுகள்[[கோடு]]கள் உருவாகின்றன. இவ்வகைப் பூச்சுக்கள் நீரைச் சீராகப் பரவச் செய்வதால் கண்ணாடி மேற்பரப்பில் உருவாகும் மெல்லிய நீர்ப்படலம் அழுக்கு அடையாளங்களை உருவாக்காமல் விரைவில் காய்ந்து விடுகிறது. நீர்கவர் பூச்சுக்கள் முதல்வகைப் பூச்சுக்களிலும் கூடிய நிலையான தன்மை கொண்டவை. எனினும் மழை நீருடன் கலந்திருக்கும் உலோக அயன்கள் இவற்றின் செயல்திறனைப் படிப்படியாகக் குறைத்துவிடுவது இப்பூச்சுக்களின் ஒரு குறைபாடு ஆகும்.