பல்ஜ் சண்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உஇ
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 33:
{{போர்த்தகவல்சட்டம் மேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்)}}
{{போர்த்தகவல்சட்டம் பல்ஜ் சண்டை}}
'''பல்ஜ் சண்டை''' (''Battle of the Bulge'') என்பது [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] [[மேற்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்) |மேற்குப் போர்முனையில்]] நிகழ்ந்த ஒரு சண்டை. இது '''ஆர்டென் தாக்குதல்''' (''Ardennes Offensive'') மற்றும் '''வான் ரன்ட்ஸ்டெட் தாக்குதல்''' (''Von Rundstedt Offensive'') என்றும் அறியப்படுகிறது. டிசம்பர் 16, 1944 - ஜனவரி 25, 1945 காலகட்டத்தில் நடந்த இத்தாக்குதல் மேற்குப் போர்முனையில் [[நாசி ஜெர்மனி]] மேற்கொண்டுமேற்கொண்ட இறுதி முக்கிய தாக்குதல் முயற்சியாகும். இத்தாக்குதலில் ஜெர்மானியப்படைகள் [[ஆண்ட்வெர்ப்]] துறைமுகத்தைக் கைப்பற்றி நேச நாட்டுப்படைகளை இரு பிளவுகளாகப் பிரிக்க முயன்று தோற்றன.
 
1944ன் இறுதியில் [[மேற்கு ஐரோப்பா]]வின் பெரும் பகுதிகளை நேசநாட்டுப் படைகள் ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்து விடுவித்துவிட்டன. அடுத்து ஜெர்மனியின் பிரதேசங்களைத் தாக்கும் முயற்சி தொடங்கியது. [[கிழக்குப் போர்முனை (இரண்டாம் உலகப் போர்) |கிழக்குப் போர்முனையிலும்]] [[சோவியத் யூனியன்|சோவியத் யூனியனின்]] படைகள் ஜெர்மானியப்படைகளை முறியடித்து வேகமாக முன்னேறி வந்தன. இருமுனைப் போரில் வெகு காலம் தாக்குப்பிடிக்க முடியாதென்பதை உணர்ந்த [[ஹிட்லர்]] மேற்குப் போர் முனையில் வேகமாக போரை முடிக்க விரும்பினார். மேற்கத்திய நேச நாடுகள் போரை நிறுத்தி அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டுமெனில் அவர்களுக்குஅவர்களுக்குப் போர்களத்தில் ஒரு பெரும் தோல்வியைக் கொடுக்க வேண்டுமென்று உணர்ந்தார். இதற்காக பல்ஜ் சண்டைக்கான திட்டம் வகுக்கப்பட்டது.
 
[[ஆர்டென் காடு|ஆர்டென்]] பகுதியில் தாக்கி நேசநாட்டுப் படைநிலைகளை இரண்டாகப் பிளந்து, [[ஆண்ட்வெர்ப்]] துறைமுகத்தைக் கைப்பற்ற வேண்டும். பின்னர் வடக்கு நோக்கி திரும்பி சுற்றி வளைக்கப்பட்ட நான்கு நேசநாட்டு [[ஆர்மி (படைப்பிரிவு)|ஆர்மி]]களை அழிக்க வேண்டும். இவையே பல்ஜ் சண்டையில் ஜெர்மனியின் இல்க்குகள்இலக்குகள். இவற்றை நிறைவேற்றிவிட்டால், சோர்வடைந்த மேற்கத்திய நாடுகள் போர் போதுமென்று அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வந்து விடுவார்கள் என்பது ஜெர்மானிய [[மேல்நிலை உத்தி]]யாளர்களின் கணிப்பு. இதற்கான ஆயத்தங்கள் மிக ரகசியமாக மேற்கொள்ளப்பட்டன. டிசம்பர் 16ல் தொடங்கிய தாக்குதல் மேற்கத்தியப் படைகளை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. நேசநாட்டு உளவுத்துறைகள் இப்படி ஒரு தாக்குதல் நிகழும் என்று எச்சரித்திருந்தாலும், தளபதிகள் அதனைப் பொருட்படுத்தாம்லிருந்தனர்பொருட்படுத்தாமலிருந்தனர். பனிக்காலத்தில் வானிலை மோசமாக இருந்த்தால்இருந்ததால் நேசநாட்டு வான்படைகள் தங்கள் [[வான் ஆளுமை|பலத்தை]] ஜெர்மானியத் தரைப்படைகள் மீது பிரயோகிக்க முடியவில்லை. ஆரம்பத்தில் ஜெர்மானியப் படைகள் நேசநாட்டு பாதுகாவல் நிலைகளை முறியடித்து வேகமாக முன்னேறின. ஆனால் முக்கிய இலக்கான [[பாஸ்டோன்]] நகரை அவைகளால் [[பாஸ்டோன் முற்றுகை|கைப்பற்ற முடியவில்லை]]. அவசரமாக போர்முனைக்கு அனுப்பப்பட்ட புதிய நேசநாட்டுத் துணைப்படைகளின் எதிர்த்தாக்குதல், வானிலை சீரடைந்ததால் தொடங்கிய நேசநாட்டு வான்படைத் தாக்குதல் போன்ற காரணங்களால் விரைவில் ஜெர்மானிய முன்னேறம்முன்னேற்றம் தடைபட்டு அறவே நின்று போனது. 1945 ஜனவரி மாத இறுதிக்குள் ஜெர்மானியர் இச்சண்டையில் கைப்பற்றிய பகுதிகள் அனைத்தும் மீண்டும் நேசநாடுகள் வசமாகின.
 
மேற்குப் போர்முனையில் ஜெர்மனி மேற்கொண்ட இறுதிப் பெரும் தாக்குதல் இதுவே. இத்தாக்குதலில் ஜெர்மானியப்படைகளுக்கு ஏற்பட்ட பெரும் இழப்புகள் (சுமார் 1,00,000) மேற்குப் போர்முனையின் முக்கியப் படைப்பிரிவுகள் அனைத்தையும் வெகுவாக பலவீனப்படுத்தி விட்டன. மிஞ்சியபடைபிரிவுகள்மிஞ்சிய படைப்பிரிவுகள் [[சிக்ஃபிரைட் கோடு|சிக்ஃபிரைட் கோட்டிற்குப்]] பின் வாங்கின. அமெரிக்கப் படைகளுக்கு இச்சண்டையே இரண்டாம் உலகப்போரில் மிகப்பெரியதும், அதிக அளவில் இழப்புகளை (சுமார் 89,000) ஏற்படுத்திய சண்டையாகசண்டையுமாக அமைந்தது. “பல்ஜ்” என்ற ஆங்கில சொல்லுக்கு வீக்கம் என்று பொருள். வரைபடங்களில் நேச நாட்டு படைநிலைகளின் ஊடாக ஜெர்மானியப் படைகளின் முன்னேற்றம் ஒரு வீக்கம் போல காட்சியளித்ததால், மேற்கத்திய ஊடகங்கள் இதனை பல்ஜ் சண்டை என்று அழைக்கத் தொடங்கினர். பிற்காலத்தில் இந்தப் பெயரே நிலைத்து விட்டது.
 
==பின்புலம்==
"https://ta.wikipedia.org/wiki/பல்ஜ்_சண்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது