இரா. நாகலிங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 39:
 
அன்புமணி அவர்கள் களுவாஞ்சிக்குடி உதவி அரசாங்க அதிபராகக் கடமையாற்றிய காலகட்டங்களில் சைவமாமணி விஸ்வலிங்கம் எழுதிய ‘மண்டூர் பிள்ளைத் தமிழ்’ எனும் நூலினையும், தற்போது அவுஸ்திரேலியாவில் வசித்துவரும் சு. ஸ்ரீகந்தராசா எழுதிய ‘சந்ததி சுவடுகள்’ எனும் நூலினையும் ஆரையூர் நல். அலகேசமுதலியார் எழுதிய ‘ஆரையூர் கோவை’ எனும் நூலினையும் வெளியிட காரணகர்த்தாவாக இருந்துள்ளார். அதேபோல இலங்கையில் மூத்த பெண் எழுத்தாளர் ந. பாலேஸ்வரி எழுதிய ‘தத்தை விடு தூது’ எனும் நூலினையும், எஸ்.எல்.எம். ஹனீபா எழுதிய ‘மக்கத்து சால்வை’ எனும் நூலினையும் மட்டக்களப்பு செபஸ்டியன் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடுவதற்கு பூரண ஒத்துழைப்பினை வழங்கியுள்ளார்.
 
== மலர் ==
அன்புமணியின் கலை இலக்கிய சேவையின் இவரால் வெளியிடப்பட்ட 'மலர்' இலக்கிய சஞ்சிகை ஒரு முக்கிய இடத்தைப் பெறுகின்றது. 1970ஆம் ஆண்டு முதல் 1972ஆம் ஆண்டு வரை 'மலர்' பத்து இதழ்கள் விரிந்தன. ஈழத்து சஞ்சிகை வரலாற்றில், 'மலர்' கிழக்கு மாகாணத்தில் மாத்திரமன்றி நாடளாவிய ரீதியில் பல இளம் எழுத்தாளர்களுக்கு களமமைத்துக் கொடுத்து அவர்களை வளர்த்து விட்டிருக்கின்றது.
 
== நாடகப் பணி ==
அன்புமணியின் நாடகப் பணியும் குறிப்பிட்டுக் காட்டக் கூடியதொன்றாகும். கல்லூரியில் கற்கும் காலத்திலிருந்தே பல நாடகங்களில் முக்கிய வேடங்களில் இவர் நடித்துள்ளார். அதே போல கல்லூரி காலத்தில் ஓரரங்க நாடகங்களிலும் இவர் பிரபல்யம் பெற்றிருந்தார். கல்லூரி வாழ்க்கையில் ஏற்பட்ட நடிப்பு ஆர்வம் பிற்காலத்தில் இவரை ஒரு நடிகராக, நெறியாள்கையாளராக, நாடக ஆசிரியராக இனம்காட்டியது. இந்த அடிப்படையில் ஆரையம்பதியில் 1952ஆம் ஆண்டில் ‘மனோகரா’ எனும் பொது மேடை நாடகத்தின் முலம் ஒரு நடிகராகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமானார். ‘அமரவாழ்வு’, ‘ஏமாற்றம்’, 'பிடியுங்கள் கலப்பையை’ போன்ற ஓரரங்க நாடகங்கள் இவரால் தயாரித்து, நடித்து, மேடையேற்றப்பட்ட நாடகங்களாகும்.
 
1962ஆம் ஆண்டு இவரால் எழுதப்பட்ட ‘தரைகடல் தீபம்’ எனும் நாடகப் பிரதியாக்கத்திற்கு 'சாகித்தியமண்டலப்' பரிசு கிடைத்தமை குறிப்பிடத்தக்கது. பின்பு இந்நாடகம் பல இடங்களில் மேடையேற்றப்பட்டது. அதே போல இவரின் ‘சூழ்ச்சிவலை’ எனும் மேடை நாடகமும் ஜனரஞ்சகத் தன்மை பெற்றிருந்தது.
 
== இலங்கை வானொலியில் ==
1962ஆம் ஆண்டு முதல் இலங்கை வானொலியில் அவர் பல நாடகங்களை எழுதியுள்ளார். 1967ஆம் ஆண்டு ‘நமது பாதை’ எனும் தொடர் நாடகம் 3 மாதங்கள் தொடர்ச்சியாக ஒலிபரப்பாகியதன் மூலம் தனக்கென ஒரு இரசிகர் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டார்.
 
ஒரு நடிகர், நெறியாள்கையாளர், நாடக ஆசிரியர் ஆகிய 'அன்புமணி' ஒரு நாடக விமர்சகருமாவார். அதுமட்டுமன்றி பிரதேச, மாவட்ட, தேசிய ரீதியில் பல நாடகப் போட்டிகளில் நடுவராகவும் தனது பங்களிப்பை வழங்கியுள்ளார்.
 
== கௌரவங்களும், விருதுகளும் ==
‘தமிழ்மணி’ - இந்து சமய விவகார அமைச்சு - 1992
வடக்கு, கிழக்கு ஆளுனர் விருது - 2001
‘கலாபூசணம்’ – 2002
'பல்கலை வித்தகர்' - சிந்தனைவட்டம் 2008
 
இவை தவிர பிரதேச, மாவட்ட, மாகாண மட்டத்தில் பல்வேறுபட்ட இலக்கியச் சங்கங்கள் இவருக்குப் பொன்னாடை போர்த்தியும், கௌரவப் பட்டங்கள் வழங்கியும் கௌரவித்துள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/இரா._நாகலிங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது