தொடக்க நூல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
merged |
சி திருத்தம் |
||
வரிசை 28:
ஒருசில ஆய்வாளர் கருத்துப்படி, மோசே தோராவின் சில பகுதிகளை எழுதியிருக்கலாம். அவர் பெயரில் கி.மு. 10ஆம் நூற்றாண்டிலிருந்தே சில மரபுகளும் இருந்திருக்கலாம். ஆயினும் தோராவுக்கு இறுதி வடிவம் கொடுத்தவர்கள் வேறு ஆசிரியர்களே. விவிலியத்தில் விளக்கப்படுகின்ற இசுரயேல் மக்களின் சமய நம்பிக்கைக்கும் வாழ்க்கைக்கும் அடித்தளம் இட்டவர் மோசே என்பது உறுதி. ஆனால், கி.மு. 450 அளவில்தான் இந்நூல்கள் இறுதிவடிவம் பெற்றன.
மோசே இசுரயேல் மக்களை எகிப்திலிருந்து பாலைநிலம் வழியாக வழிநடத்தி வந்த காலம் கி.மு. சுமார் 1250. அப்போது அம்மக்கள் நாடோடிகளாக
வரிசை 62:
உலகம் மற்றும் மனிதர் எவ்வாறு தோன்றினார்கள் என்பது குறித்து தொடக்க நூல் தருகின்ற தொன்மப் புனைவு வேறு மக்களினத்தாரிடமும் கலாச்சாரங்களிலும் உண்டு. குறிப்பாக, இசுரயேலை அடுத்துள்ள நடு ஆசிய கலாச்சாரங்கள் நடுவே வழக்கிலிருந்த தொன்மப் புனைவுகள் விவிலியப் புனைவை ஒத்திருக்கின்றன.
எடுத்துக்காட்டாக, கில்காமெஷ் (Gilgamesh) என்று அழைக்கப்படும் பாபிலோனிய தொன்மப் புனைவைக் கூறலாம். அதில்
இருப்பினும் விவிலியத்தில் வருகின்ற படைப்புத் தொன்மப் புனைவு சில சிறப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது: இக்கதையில் பல கடவுளர்களுக்குப் பதில் ஒரே கடவுள் வருகிறார். அவரே உலகம் அனைத்தையும் படைத்து அதை மனிதரின் கையில் ஒப்படைக்கிறார். கடவுள் தாம் படைத்த அனைத்தும் நன்றாக இருந்தது எனக் காண்கின்றார். ஆனால் மனிதர் கடவுளின் அன்பையும் நல்லெண்ணத்தையும் புறக்கணிக்கிறார்கள். தம் சொந்த விருப்புப் போல நடக்க விழைகிறார்கள். இதனால் உலகில் துன்பமும் சாவும் நுழைகிறது. மனிதர் ஒரு நாள் இறந்தே ஆகவேண்டும் என்னும் நிலை இருந்தாலும் கடவுள் அவர்களுக்கு ஒரு புது வாழ்வு தருவதாக வாக்களிக்கிறார். உலகம் அழியும் வேளையிலும் கடவுள் மனிதரைக் கைவிட மாட்டார் என்னும் நம்பிக்கை மிகுந்த செய்தி தொடக்க நூலில் உள்ளது.
*தொடக்க நூலின் இரண்டாம் பிரிவு (அதிகாரங்கள் 12 முதல் 50 முடிய):
வரிசை 73:
#இசுரயேல் மக்கள் எகிப்தில் குடியேறுதல் (தொநூ 46:1 - 50:26)
தொடக்க நூலின் இந்த இரண்டாம் பகுதி இசுரயேல் மக்கள் எவ்வாறு ஒரு பெரும் குலமாக உருவானார்கள் என்பதை வரலாறும் புனைவும் கலந்து எடுத்துரைக்கிறது. ஆபிராம் என்றொரு மனிதர் நடு ஆசியாவில் வாழ்ந்துவந்தார் (அன்றைய மெசபொத்தாமியா, இன்றைய ஈராக் பகுதி). கடவுள் ஆபிரகாமைத் தம் சொந்த ஊராகிய "ஊர்" என்னும் இடத்திலிருந்து வெளியேறுமாறு கூறுகிறார். ஆபிராமின் பெயரை ஆபிரகாம் என்று மாற்றி, அவரோடு ஓர் [[உடன்படிக்கை
யாக்கோபுக்குக் கடவுள் ''இசுரயேல்'' என்றொரு பெயரை அளிக்கிறார். இதுவே பிற்காலத்தில் ஒரு பெரும் இனத்தைச் சார்ந்த மக்களின் பெயராக மாறிற்று. யாக்கோபு என்னும் பெயர் "யூதா" என்றும் வரும். அச்சொல்லிலிருந்து "யூதர்" என்னும் சொல் பிறந்தது. அதுவும் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்குப் பெயராயிற்று. பிற்காலத்தில் இம்மக்கள் குடியிருந்த பாலத்தீனத்தின் வடக்குப் பகுதி "இசுரயேல்" என்றும், தெற்குப் பகுதி "யூதா" என்றும் பெயர் பெற்றன.
|