அவுரங்காபாத், மகாராட்டிரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Padmakavi (பேச்சு | பங்களிப்புகள்)
Padmakavi (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 297:
* '''கிலா-ஏ-ஆர்க்''' : 1692 ஆம் ஆண்டில், அவுரங்கசீப் அரண்மனையொன்றை கட்ட ஆணையிட்டார், மேலும் அதற்கு கிலா அராக் என பெயர்ச் சூட்டினார். கிலா ஆர்க் அல்லது கோட்டையால் சூழ்ந்துக்கொள்ளப்பட்ட இடைவெளி கிட்டத்தட்ட நகரத்தின் மெக்கா மற்றும் டெல்லி வாயில்களின் இடையேயான முழு மைதானத்தையும் உட்கொண்டிருக்கிறது. அது நான்கு அல்லது ஐந்து வாயில்களையும் ஒரு நாகர்கானாவையும் இசைக் கலைஞர்களுக்காக வைத்துள்ளது. சுவர்கள் போர்ப்-பாதுகாப்பு மற்றும் சுடுவதற்கு ஏற்றத் துளைகளுடனும் சுவர் முனைகளில் அரை-வடிவ கோபுரங்களையும், ஒருகாலத்தில் அதன் மீது பீரங்கிகள் ஏற்றப்பட்டிருந்தனவாகவும் இருக்கின்றன. உட்பகுதி நகரச் சுவர்களில் உள்ளது போன்ற உட்பகுதிகளைக் கொண்டிருக்கிறது. நுழைவாயிலின் வலது புறம் ஓர் உயர்ந்த மேற்கூரை சூழ்ந்துக்கொள்ளப்பட்ட நிலத்தின் முழு நீளத்திற்கும் நீடித்துக் கொண்டுள்ளது. இதில் பரந்த தோட்டத்தின் மற்றும் பாதி இடிந்த குளங்கள் மற்றும் கோட்டையின் மீதம் ஆகியவற்றை இப்போதும் விட்டுச் சென்ற அடையாளங்களாகக் காணலாம். ஆம் காஸ் அல்லது தர்பார் ஹால், ஜூம்மா மசூதி ஆகியன மட்டுமே மீதமுள்ள ஆர்வமூட்டும் இடங்களாகும். மஸ்ஜித்தின் அருகிலுள்ள நிலப்பகுதியின் ஒரு துண்டானது விளையாட்டிற்காக சுவர் எழுப்பி பிரிக்கப்பட்டுள்ளது. நிலப்பகுதிக்கு வழிவிடும் வாயிற்பகுதி 1659 கி.பி. எனக் காலம் பொறித்து வைத்தலைக் கொண்டுள்ளது. தக்த் அல்லது அரசர் அவுரங்கசீப்பின் நாற்காலி அறை ஒரு பூங்கா கூடாரத்திலுள்ளது. மேலும் ஒரு உரை நிகழ்த்தும் மேடை போன்ற தோற்றத்தைக் கொண்டுள்ளது. அதொரு தெளிவான மற்றும் எளிய வகையினதாகும்.
* '''பர்ரா தார்ரி''' : சலார் ஜங்கின் அரண்மனை மற்றும் கோவிந்த் பக்ஷ்ஷின் மஹால் ஆகியவை பைத்தானுக்கும் ஜாஃபர் கேட்டிற்கும் இடையிலுள்ளது. டாம்ரி மஹால் மற்றும் இவாஸ் கானின் பர்ரா தார்ரி ஆகியவை டெல்லி வாயிலுக்கு அருகிலுள்ளது. மஹால் தற்போது மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தினால் பயன்படுத்தப்படுகிறது. பர்ரா தார்ரியும் அருகிலுள்ள கட்டடங்களும் இவாஸ் கானால் எழுப்பப்பட்டன. ஒரு மூடப்பட்ட கால்வாய் கட்டடங்களின் ஒன்றின் மீது கடந்துச் செல்கிறது மற்றும் பழங்காலங்களில் நீர் கீழே பல நீரூற்றுக்களைக் கொண்டிருக்கிற செவ்வக கோட்டையில் மழைப் போல் தாரையாய் பொழியும். அது தற்போது செயலற்றுள்ளது.
* '''தாம்ரி மஹால்''' : அருகிலுள்ள தாம்ரி மஹால் பர்ரா தார்ரி முடிவடைந்தப் பிறகு கட்டப்பட்டது. அதற்கு அப்பெயரானது பர்ரா தார்ரியில் பணியமர்த்தப்பட்ட வேலையாட்களின் தாம்ரியின் பங்களிப்பு மீது விதிக்கப்பட்ட வரியினால் வந்தது. தூண்கள் மீது அமைந்த வளைவுகளின் வரிசையுடைய வெளிப்புறத் தாழ்வாரம் முன்புறத்தில் கட்டடத்தின் புகுமுக மண்டபம் போன்று நீட்டிக் கொண்டிருக்கிறது. மேலும் ஐந்து நத்தைப் போன்ற வளைவுடைய வில்வளைவுகளைக் கொண்டுள்ளது. பின்புறம் வரிசையில் ஒழுங்குபடுதப்பட்டஒழுங்குபடுத்தப்பட்ட பல்வேறு அளவுகள் கொண்ட பத்து அறைகள் உள்ளன. வலது புறத்தில் ஏழு சிறிய அறைகள் வரவேற்பறைகளுடனுள்ளன. வலது மூலையில் நுழைவாயிலுள்ளது. அருகில், மற்றவற்றை விட சிறிது உயரமான நிலையில் மற்றொரு சிறிய ஆனால் துண்டிக்கப்பட்ட கட்டிடமுள்ளது. கூரை வில்வளைவுகளைக் கொண்டுள்ளது. அங்கு இரு கோட்டைகள், ஒன்று தாழ்வாரம் முன்பும் மற்றொன்று கட்டிடத்திற்கு வெளியேயுமுள்ளது.
* '''காலி மஸ்ஜித், ஜூம்மா மஸ்ஜித்''' : மசூதிகளிடையே, மாலிக் அம்பாரால் கட்டப்பட்ட ஜூம்மா மஸ்ஜித் மற்றும் காலி மஸ்ஜித்,மேலும் ஷா கஞ்ச் மசூதி ஆகியவை மேன்மைவாய்ந்தவை. மாலிக் அம்பார் ஏழு மசூதிகளைக் கட்டியுள்ளார் எனக் கூறப்படுகிறது. அவை காலி மஸ்ஜித் எனும் பொதுப் பெயரில் அழைக்கப்படுகின்றன. காலி மஸ்ஜித் ஜூனா பஜார் பகுதியிலுள்ளது மற்றும் 1600 ஆம் ஆண்டில் எழுப்பப்பட்டது. அதொரு ஆறு தூண் கொண்ட கல் கட்டடமாக உயர்வான பீடத்தில் நின்றுக்கொண்டிருக்கிறது. மாலிக் அம்பாரின் ஜூம்மா மஸ்ஜித் கிலா அர்ராக் அருகிலுள்ளது. அது ஐந்து வரிசைகளுடைய ஐம்பத்து நான்கிற்கு மேற்பட்ட தூண்களுடன் வரிசையுடையது, மேலும் வில் வளைவுகளையுடைய அமைப்பினால் இணைக்கப்பட்டது, அவை கட்டடத்தை இருபத்தியேழு சமமான தொகுதிகளாகப் பிரிக்கின்றன, ஒவ்வொன்றும் எளிமையான ஆனால் நேர்த்தியான வடிவுடைய கூம்பு வடிவிலான வில்வளைவுகளினால் மூடப்பட்டிருக்கின்றன. முன்புறம் கூரிய முனையுடைய ஒன்பது வில்வளைவுகள் உள்ளன. இவற்றில், ஐந்து மாலிக் அம்பாரால் 1612 ஆம் ஆண்டில் எழுப்பப்பட்டன, மேலும் மீதமுள்ள நான்கு அவுரங்கசீப்பினால் சேர்க்கப்பட்டன. பீடம் உயர்வானது மற்றும் பல சந்தைப் பக்கம் திறந்திருக்கும் அறைகளைக் கொண்டுள்ளது. சாய்வான சுவர் ஏந்தற்பலகையினால் முட்டுக்கொடுக்கப்பட்டுள்ளது, மேலும் பதுங்கு குழி அரண் நன்கு துளையிடப்பட்டுள்ளது. மூலையிலுள்ள கோணங்கள் எண்கோண வடிவிலான சுரங்க வாயில்களைக் கொண்டுள்ளது, வட்டுக்களால் அலங்கரிக்கப்பட்ட மற்றும் சிறிய கவிகைமாடங்களையும் பெற்றிருக்கிறது. மசூதியின் வடிவம் நல்ல ரசனையோடு உள்ளது. சாதாரணமானது ஆனால் உறுதியானது, மேலும் அதிகமாக பீஜப்பூரின் கட்டடங்களைப் போல் உள்ளது. மசூதியின் முன்னுள்ள முற்றம் சுற்றுலாப் பயணிகளுக்காக மூன்று பக்கங்களில், திறக்கப்பட்ட முன்புறம் உடைய கட்டடங்களைக் கொண்டுள்ளது. முற்றத்தின் நடுவே கோட்டையுள்ளது, அது பிரபலமாக நஹார் அம்பேரி எனப்படும் மாலிக் ஆம்பெர் கால்வாயிலிருந்து தனது நீர் அளிப்பைப் பெறுகிறது.
* '''ஷாகஞ்ச் மஸ்ஜித்''' : அவுரங்காபாத்தின் பெரிய சந்தை சதுக்கத்தினை ஆக்ரமித்தவாறு இருப்பது அகன்ற ஷா கஞ்ச் மசூதியாகும், இந்தியாவின் எந்தவொரு பகுதியிலும் காணப்படக்கூடிய அதன் வகையிலான சிறந்த மாளிகைகளில் ஒன்றாகும். அது சுமார் 1720 ஆம் ஆண்டில் கட்டப்பட்டதாகும். காஃபி கான், முண்டகாபு-இல்-லூபாப் நூலாசிரியர் தக்காணத்தின் அரசப்பிரதிநிதியாக சய்யாத் ஹுசைன் கானின் காலத்தை குறித்து கூறுகிறார் "ஷா கஞ்ச் சிலுள்ள நீர்த்தேக்கம் சய்யாத் ஹுசைன் அலியினால் துவங்கப்பட்டது, மேலும் ஆஸூ-ட் தௌலா இர்ஸா கான் கட்டடங்களையும் மசூதியையும் அகலப்படுத்தியும் உயர்த்தியிருந்தாலும் இன்னும் சய்யாத் ஹுசைன் அலியே விரிந்த நீர்த்தேக்கத்தை துவக்கியவர், அது கோடைக்காலத்தில் நீர் பற்றாக்குறையுடன் இருக்கும்போது குடிமக்களின் பாதிப்பினை அகற்றுகிறது". மசூதியானது உயர்த்தப்பட்டதொரு தளத்தில் உள்ளது, வெளிப்புறத்தில் மூன்று கடைகளும் உள்ளன; அதே போல நான்காவது அல்லது வடக்கு புறம் திறந்துள்ளது மற்றும் வரிசையான படிகளால் உயர்த்தப்பட்டது கட்டடத்தின் முகப்பிற்கு அறிகுறியாயிருப்பது தூண்களின் மீதமைந்த ஐந்து நத்தை வடிவிலான வளைவுகள், இந்தோ-சாராசானிக் பாணியிலமைந்துள்ளன. மேலும் கல்தூண்களால் தாங்கி நிற்பனவாகும். இப் பக்கம் சற்று முன் துருத்தியுள்ளது; மேலும் உட்புறம் இருபத்தி நாலு தூண்களைக் கொண்டுள்ளது, அது ஆறு சதுரத் தூண்களுடன் பின்புறச் சுவரில் உள்ளது, சதுர வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. மத்தியப் பகுதி கண்கவரும் குமிழ் வடிவ கவிகைமாடத்தினால் மூடப்பட்டுள்ளது, அதன் அடிப்புறம் முறுக்கப்பெற்ற சுருக்கப்பட்ட தாமரை இலை குறுகிய அழகிய இழையில் கட்டப்பட்டுள்ளது; மேலும் உச்சப் பகுதியில் நேர்த்தியான கோபுரக் கலசமுள்ளது. காம் காஸ் என அழைக்கப்படும் தூண்கள் மீதமைந்த துறவி மடம் கிழக்கு மேற்கு பிரிவுகளில் அமைந்து, ஒவ்வொரு பக்கத்திலும் ஐந்து வளைவுகளைக் கொண்டுள்ளது, முதன்மைக் கட்டடம் போன்று கட்டப்பட்டது, ஆனால் தரைமட்ட கட்டடமாகும். உட்புறம் தரைமட்ட வளைவுகளால் இணைக்கப்பட்டுள்ளது; மேலும் கூரை தொடர்ச்சியான சிறிய கவிகை மாடங்களால் அமைக்கப்பட்டுள்ளது, ஒவ்வொன்றும் நான்கு தூண்களால் தாங்கி நிறுத்தப்பட்டுள்ளது. முதன்மைக் கட்டடத்தின் முனைகளிலும், மேலும் காம் காஸ்சின் முனைகளின் முடிவில் பள்ளி வாயிற்தூபிகள் உள்ளன. முன் புறமுள்ள முற்றம் இரு பெரிய கோட்டைகளைக் கொண்டுள்ளது. நுழைவாயில் சிறிய மசூதி வடிவிலுள்ளது, கூரான வளைவையும் இரு பள்ளிவாயிற் தூபிகளுள்ளன.
* '''சௌக் மஸ்ஜித்''' : 1655 ஆம் ஆண்டில் ஷாயிஸ்தா கான் அவுரங்கசீப்பின் தாய் மாமனால் கட்டப்பட்டது. அதன் முன்புறம் ஐந்து கூரான வளைவுகளைக் கொண்டுள்ளது, மேலும் இரு வளைவுகள் நடுப்பகுதியில் உள்ளன. இவை ஒன்றுடன் மற்றொன்று எட்டுத் தூண்களுடனும் மற்றும் ஒத்திசைவான சதுரத் தூண்களுடனும் இணைக்கப்படுள்ளன, மேலும் ஐந்து கவிகை மாடங்களையும் தாங்கி நிற்கிறது. மத்திய கவிகைமாடமானது உலோகம் போன்ற கம்பீரமான கோபுரத் தூபியுடன் உள்ளது, அதேபோல மற்றவை கூரையில் மறைக்கப்பட்டுள்ளன. முனைகள் பள்ளி வாயில்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. முழுக் கட்டடமும் உயர்ந்த அடித்தளத்தை கடைகளுக்கு பயன்படும் அறைகளைக் கொண்டுள்ளது, அவை சாலைப் பக்கத்தில் திறக்கப்பட்டுள்ளன. வாயிற்புறம் இரு பள்ளி வாயிற்களைக் கொண்டுள்ளது. மசூதி முன்னே முற்றத்தில் ஒரு கோட்டையுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/அவுரங்காபாத்,_மகாராட்டிரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது