தேவநாகரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 16:
{{brahmic}}
 
'''தேவநாகரி (Devanagari)''' (देवनागरी) என்பது [[சமஸ்கிருதம்]], [[ஹிந்தி மொழி|ஹிந்தி]], [[மராட்டி மொழி|மராட்டி]], [[காஷ்மீரி மொழி|காஷ்மீரி]], [[சிந்தி மொழி|சிந்தி]] போன்ற இந்திய மொழிகளையும், [[நேபாளி மொழி|நேபாளி]]யையும் எழுதப் பயன்படுத்தும் ஒரு [[எழுத்து முறைமை]]யாகும். தேவநாகரி [[அபிகுடாஅபுகிடா]] என்று அழைக்கப்படும் [[அரிச்சுவடிஎழுத்து முறைமை]] வகையைச் சேர்ந்தது. [[அபிகுடாஅபுகிடா]] என்பது ஒவ்வொரு மெய்யெழுத்தும் உள்ளார்ந்த உயிரெழுத்தொன்றைக் (இங்கே "அ") கொண்டிருக்கும், வேறு குறியீடுகளைச் சேர்ப்பதன் மூலம் இதனை மாற்றிக்கொள்ள முடியும். தேவநாகரி, கி.மு 500 வாக்கில் புழக்கத்துக்கு வந்த [[பிராமி அரிச்சுவடி|பிராமி]]யின் வாரிசாகக் கருதப்படுகின்றது. பிராமி எழுத்துக்கள் கிழக்கு [[அராமைக் அரிச்சுவடி]] போன்ற செமிட்டிக் எழுத்துக்களிலிருந்து உருவானதாகப் பெரும்பாலான அறிஞர்கள் கருதுகின்றார்கள். [[கி.மு 2600]] ஆண்டுகள் வரையாவது பழமையான [[சிந்து வெளி]] எழுத்துக்களிலிருந்து தோன்றியிருக்கக்கூடுமென்ற அதிகம் ஏற்றுக்கொள்ளப்படாத கருத்தும் உண்டு. [[பிராமிக் குடும்பம்|பிராமிக் குடும்பத்தை]]ச் சேர்ந்த வேறு எழுத்துக்களையும் ஏனைய பல இந்திய மொழிகள் பயன்படுத்துகின்றன.
 
தேவநாகரி என்னும் சொல், கடவுள் என்பதைக் குறிக்கும் சமஸ்கிருதச் சொல்லான "தேவ" என்பதும், நகரம் என்பதைக் குறிக்கும் "நாகரி" என்பதும் சேர்ந்து உருவானது. இச் சொல், கடவுளின் நகரத்தின் எழுத்து என்ற பொருள்படும்.
"https://ta.wikipedia.org/wiki/தேவநாகரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது