ஒத்தமை நற்செய்தி நூல்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ஒத்தமை நற்செய்தி நூல்கள்
 
சி திருத்தம்
வரிசை 22:
*இயேசு கலிலேயாவில் மக்களுக்குப் போதித்து அவர்களுக்குக் குணமளித்து, பொதுப்பணி புரிந்தார்.
*இயேசு எருசலேமுக்குச் சென்றார்.
*இயேசு எருசலேமில் பாடுகள் அனுபவித்தார் (இயேசு பிடிபடல், நீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்படல், துன்பம் அனுபவித்தல், இறத்தல்).
*இயேசு கல்லறையில் அடக்கப்பட்ட பின் கல்லறை வெறுமையாக இருந்தது என சீடர் கண்டுபிடித்தனர்.
 
மேற்கூறிய செய்திகளையெல்லாம் வடிவமைத்துத் தருவதில் '''ஒத்தமை நற்செய்திகள்''' பெரிதும் ஒன்றுபட்டிருக்கின்றன.
 
*இயேசு ஒரு போதகராகவும், குணமளிப்பவராகவும் செயல்பட்டார் என ஒத்தமை நற்செய்திகள் இயேசுவைச் சித்தரிக்கின்றன.
*இயேசுவுக்கு வழங்கப்படும் [[புதிய ஏற்பாட்டில் இயேசுவின் பெயர்கள்]] |சிறப்புப் பெயர்களும்]] ஒத்திருக்கின்றன. அவை: ''தாவீதின் மகன்'', ''மெசியா'', ''கடவுளின் மகன்'', ''ஆண்டவர்'' முதலியவை ஆகும்.
 
*ஒத்தமை நற்செய்திகள் [[இயேசு கிறித்து|இயேசுவின் வரலாற்றைச்]] சிறுசிறு கூற்றுத்தொடர்களாக வழங்குகின்றன. அங்கே இயேசு புரிந்த [[இயேசுவின் புதுமைகள்|புதுமைகள்]] உண்டு; எதிரிகளோடு நிகழ்த்திய வாதங்கள் உண்டு; [[இயேசுவின் உவமைகள்|உவமைகள்]] உண்டு. இயேசுவின் கூற்றுத் தொகுப்புகள் பகுதியில் அவர் உரைத்த பழமொழிகள், போற்றுதல் தூற்றுதல் உரைகள், ''நானே'' எனத்தொடங்கும் உரைகள் ("I" Sayings) உண்டு. சில வேளைகளில் ஒத்தமை நற்செய்திகள் எவ்வளவு ஒத்திருக்கின்றன என்றால், அந்த ஒற்றுமைகள் எதேச்சையாக ஏற்பட்டன என்று கூறிட முடியாது. ஏதோ விதங்களில் அவை எழுத்துவடிவம் பெற்ற பிறகு ஒன்றோடொன்று ஒத்திருக்கும் விதத்தில் அமைக்கப்பட்டன என்பதில் ஐயத்திற்கு இடமில்லை.
வரி 41 ⟶ 42:
=="இரு ஆதார விளக்கம்"==
 
இந்த விளக்கத்தின்படி, முதலில் தோன்றிய நற்செய்தி நூல் [[மாற்கு நற்செய்தி (நூல்)|மாற்கு]] ஆகும்; மாற்கு நற்செய்தியை மத்தேயுவும் லூக்காவும் தனித்தனியே பயன்படுத்தினர்; அதோடு இவ்விருவரும் இயேசுவின் கூற்றுக்கள் அடங்கிய இன்னொரு ஏட்டையும் பயன்படுத்தினர். இந்த ஊக ஏடுதான் (hypotheticaldocumenthypothetical document) “Q” என அழைக்கப்படுகிறது. “Q” என்பது Quelle என்னும் செருமானியச் சொல்லின் முதல் எழுத்து; இதற்கு ஆங்கிலத்தில் Source, அதாவது ''மூலம்'', ''ஆதாரம்'' என்று பொருள். எனவே, மத்தேயுவும் லூக்காவும் பயன்படுத்திய இரு மூல ஆதாரங்கள் மாற்குவும் “Q”வும் ஆகும்.
 
மாற்கு எழுதப்பட்டது கி.பி. சுமார் 70ஆம் ஆண்டளவில். “Q” பெரும்பாலும் கிரேக்க மொழியில் கி.பி. 50 அளவில் தோன்றியிருக்கக் கூடும். இயேசு பேசிய அரமேய மொழியில் அமைந்த முன்னைய ஒரு மரபு “Q”வில் இருக்கக் கூடும். இந்த “Q” என்னும் ஊக ஏட்டின் அமைப்பு வடிவம் [[பழைய ஏற்பாடு|பழைய ஏற்பாட்டு]] நூல்களாகிய [[நீதிமொழிகள் (நூல்)|நீதிமொழிகள்]], [[சீராக்கின் ஞானம் (நூல்)|சீராக்கின் ஞானம்]] ஆகியவைபோல் இருந்திருக்க வேண்டும். இயேசுவின் இளமைப் பருவப் பகுதியோ, பாடுகளின் பகுதியோ அதில் இருந்திருக்காது.
வரி 63 ⟶ 64:
அடுத்த வேறுபாடு நற்செய்தி நூல்களைப் பெற்றுக்கொண்ட சமூகங்கள் எங்கே இருந்தன என்பதைக் குறித்தது. மத்தேயுவின் சமூகம் சிரியா நாட்டு அந்தியோக்கியாவிலும், மாற்குவின் சமூகம் உரோமை நகரிலும், லூக்காவின் சமூகம் கிரேக்க நாட்டிலும் இருந்தன. இச்சமூகங்கள் வெவ்வேறு சூழ்நிலைகளில் வாழ்ந்துவந்தன. மத்தேயுவின் சமூகம் ஒரே சமயத்தில் யூதராகவும் கிறிஸ்தவராகவும் இருப்பது எப்படி என்னும் சிக்கலுக்கு வழிதேடிக் கொண்டிருந்தது. மாற்குவின் சமூகம் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருந்தது; லூக்காவின் சமூகம் ஏழை-செல்வர் வேறுபாட்டை விளக்கிடத் திணறிக்கொண்டிருந்தது.
 
இது மட்டுமல்ல, மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகியோர் இயேசுவை வெவ்வேறு கண்ணோட்டங்களில் பார்க்கின்றனர். மத்தேயுவில் இயேசு [[விவிலியம்|திருநூலில்]] எழுதப்பட்டவற்றை நிறைவேற்றுபவராகக் காட்டப்படுகிறார். மாற்கு இயேசுவைத் துன்புறும் மானிட மகனாகக் காட்டுகிறார். லூக்கா நற்செய்தியில் இயேசு ஓர் இறைவாக்கினராக, ஒரு முன்மாதிரியாக விளக்கப்படுகிறார்.
 
அதுபோலவே, இயேசுவின் சீடர்களைச் சித்தரிப்பதிலும் வேறுபாடுகள் உள்ளன. [[மத்தேயு நற்செய்தி (நூல்)|மத்தேயு]] இயேசுவின் சீடர்களை ''நம்பிக்கை குன்றியவர்களாக''க் காண்கிறார். [[மாற்கு நற்செய்தி (நூல்)|மாற்கு]] சீடர்களைக் கோழைகளாக, இயேசுவின் வார்த்தைகளைப் புரிந்துகொள்ளாதவர்களாகக் காட்டுகிறார். [[லூக்கா நற்செய்தி (நூல்)|லூக்கா]] நற்செய்தியில் சீடர்கள் இயேசுவுக்கும் [[திருச்சபை|திருச்சபைக்கும்]] இடையே தொடர்புப் பாலம் போல் அமைவதாகக் காட்டப்படுகிறார்கள்.
"https://ta.wikipedia.org/wiki/ஒத்தமை_நற்செய்தி_நூல்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது