மாதிகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிறு திருத்தங்கள்
சிNo edit summary
வரிசை 1:
'''மாதிகை''' (அல்லது ''மாசிகை'') என்பது [[மாதம்]] ஒருமுறை வெளியாகும் இதழ் (சஞ்சிகை). பெரும்பாலான [[தமிழ்]] இலக்கிய இதழ்கள் மாதிகையாகவே வெளியாகின்றன. மாதிகை, திங்களிதழ், மாத இதழ் என்பன ஒரு பொருள் குறிக்கும் சொற்கள். உலகெங்கிலும், பல மொழிகளிலும், மாதிகைகள் பெரும்பாலும் 19 ஆம் நூற்றாண்டில்தான் வெளிவரத்தொடங்கின. தமிழில் பழைய மாதிகைகள் 1860ல் வெளிவந்த [[தேசோபகாரி]], 1864ல் வெளிவந்த [[தத்துவ போதினி]], 1870ல் வெளிவந்த [[சத்திய வர்த்தினி]], 1870ல் வெளிவந்த [[நற்போதம்]], 1880ல் வெளிவந்த [[கோயமுத்தூர் கலாநிதி]] முதலியன ஆகும். சுமார் 1860ல் தொடங்கி 1957 ஆம் ஆண்டு வரை உள்ள ஆண்டுகளில் தொடங்கப்பட்ட 346 தமிழ் மாதிகைகள் பற்றிய குறிப்புகள் இன்று அறியப்படுவன<ref>''பழந்தமிழ் இதழ்கள்,'' கழகப் புலவர் குழு, திருநெல்வேலி தென் இந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை-18, 2001, பக். 1-312.</ref>
==மேற்கோள்==
<References/>
"https://ta.wikipedia.org/wiki/மாதிகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது