அ. மாதவையர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''அ. மாதவையா (A. Madhaviah)''' ([[1872]]-[[1925]]) , தமிழின் ஒரு முன்னோடி [[எழுத்தாளர்]], [[நாவலாசிரியர்]], [[பத்திரிக்கையாசிரியர்]], எழுத்தின் மூலம் சமூக சீர்திருத்தம் கொண்டுவருவதில் நம்பிக்கை உடையவர். இவர் "பத்மாவதி சரித்திரம்" என்ற புகழ் பெற்ற நாவலை எழுதியவர். [[ஆங்கிலம்]] மற்றும் [[தமிழ்]] ஆகிய இரண்டு மொழிகளிலும் புலமைப் பெற்றவர்.
==வாழ்க்கை சுருக்கம்==
அ.மாதவையா, 1872 வருடம் ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி, [[திருநெல்வேலி]] அருகே உள்ள பெருங்குளம் என்ற கிராமத்தில் பிறந்தவர். தன் பள்ளிப்படிப்பை திருநெல்வேலி மாவட்டதில் 1887ஆம் ஆண்டில் முடித்தார். சென்னையில் உள்ள [[கிறித்துவ கல்லூரியில்]] இளங்கலை மேற்படிப்பு தொடர்ந்தார். இங்கு தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் தேர்ச்சி பெற்றார். தன்னுடைய கல்லூரி முதல்வரான [[ரெவ்ரண்ட் வில்லியம் மில்லரின்]] கருத்துக்களின் கவரப்பட்டார். தன்னுடைய இளங்கலை படிப்பில் (B.A) முதல் மாணவராக திகழ்ந்தார்(1892). பின்னர் அக்கல்லூரியிலேயே ஆசிரியராக பணிபுரிந்தார்.
 
அக்காலத்தில் இருந்த அவர் குடும்ப விழுமியங்களுக்கு ஏற்ப தன்னுடைய பதினைந்தாம் வயதிலேயே (1887) மாதவையாவுக்கு திருமணம் செய்யப்பட்டது. அவருடைய குடும்பத்தை நடத்துவதற்காக, "Salt and Abkari department" நடத்திய தேர்வில் முதலிடம் வந்து Salt Inspectorஆக தற்போது [[ஆந்திராவில்]] உள்ள கஞ்சம் மாவட்டத்தில் பணியிலமர்ந்தார். அங்கு அவர் [[தெலுகு]] மொழியினையும் கற்றறிந்தார்.
 
மாதவையா தனது இருபதாம் அகவையிலேயே பத்திரிக்கைகளுக்கு எழுதும் பழக்கம் கொண்டிருந்தார். அவருடைய நண்பரான [[சி.வி.சுவாமிநாதைய்யர்]] என்பவர் 1892 ஆம் ஆண்டு தொடங்கிய [[விவேக சிந்தாமணி]] என்ற பத்திரிக்கையில் "[[சாவித்திரியின் கதை]]" என்ற தொடரினை எழுதத்தொடங்கினார். ஆனால் அத்தொடர் இடையில் சில நாட்கள் தடைப்பட்டு பிறகு தொடர்ந்து வந்தது. அத்தொடர் 1903 ஆம் ஆண்டு [[முத்துமீனாக்ஷி]] என்ற பெயரில் நாவலாக வெளிவந்தது.
 
1898ஆம் ஆண்டு [[பத்மாவதி சரித்திரம்]] என்ற நாவலின் முதற்பகுதியும், 1899 ஆம் ஆண்டில் இரண்டாம் பகுதியும் மாதவையாவால் எழுதப்பட்டது. 1925ஆம் ஆண்டில் பஞ்சாம்ருதம் என்ற பத்திரிக்கை ஒன்றை தொடங்கினார். பத்மாவதி சரித்திரத்தின் மூன்றாம் பகுதியினை 1924ஆம் ஆண்டு எழுதத் தொடங்கி, முழுமையடையாத தருணத்தில் மாதவையா மரணமடைந்தார்.
 
[[சென்னை பல்கலைகழகத்தின்]] செனட் உறுப்பினராக மாதவையா 1925 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 22 ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டார். அப்போது தமிழை கட்டாய பாடமாக இளங்கலை (B.A) பாடதிட்டத்தில் சேர்க்கவேண்டும் என்று சொற்பொழிவினை நிகழ்த்தினார். அன்று, தன் ஐம்பத்தி மூன்றாம் வயதில், மாரடைப்பால் காலமானார்.
 
==குடும்பம்==
அ.மாதவையாவுக்கு, ஐந்து பெண் மற்றும் மூன்று ஆண் என்று எட்டு மகவுகள். அவருடைய பிள்ளைகளான
[[மீனாக்ஷி தியாகராஜன்]],[[ மா.கிருஷ்ணன்]], [[முக்தா வெங்கடேஷ்]] என்ற முத்துலக்ஷ்மி ஆகியோர் மிக பிரபலமானவர்கள்.
 
==சுவையான செய்திகள்==
*1914ஆம் ஆண்டில் '''இந்திய கும்மி''' என்ற கவிதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றார் மாதவையா. இப்போட்டியில் [[சுப்பிரமணிய பாரதி|சுப்பிரமணிய பாரதியாரும்]] பங்கு கொண்டார்.
*1892 ஆம் ஆண்டில் சாவித்திரியின் கதை (அல்லது சாவித்திரியின் சரித்திரம்) என்ற நாவலை எழுத்தத் தொடங்கினார். தமிழில் [[மாயூரம் வேதநாயகம் பிள்ளை]] எழுதிய [[பிரதாப முதலியார் சரித்திரம்]] (1879) என்ற நாவலுக்கு பின்பு வந்த இரண்டாம் தமிழ் நாவல், சாவித்திரியின் கதை. ஆனால் நான்கு முறை தடைப்பட்டு 1903இல் முழுமையாக வந்ததாலும், [[பி.ஆர்.ராஜமய்யர்]] எழுதிய [[கமலாம்பாள் சரித்திரம்]] என்ற நாவல் 1896இல் வந்ததாலும், தமிழின் இரண்டாம் நாவல் என்ற தகுதி பத்மாவதி சரித்திரம் நாவலுக்கு கிட்டாமல் போனது.
== படைப்புகள் ==
===நாவல்===
"https://ta.wikipedia.org/wiki/அ._மாதவையர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது