விருமாண்டி ([[கமலஹாசன்]]) மற்றும் அவருக்கு நெருக்கமான பங்காளிகளான கொத்தலத் தேவர் [[பசுபதி]] மற்றும் நல்லம்ம நாயக்கர் [[நெப்போலியன்(நடிகர்)]] ஆரம்ப காலங்களில் நட்புடன் இருந்து வந்தனர்.அவர்களுள் கொத்தலத் தேவர் விருமாண்டிக்கு சொந்தமான நிலச்சொத்துக்களை தானே அனுபவிக்கவேண்டும் என்ற ஆசையினால் விருமாண்டியின் மனைவியையும் அவரது பங்காளியினையும் கொலை செய்கின்றார்.இதனை அவர் சிறையில் வேறு விதமாக தொலைக்காட்சிப்பேட்டியாளரிடம் கூறவே விருமாண்டியின் மீது அவர் பழியைப்போடவே கதையில் விறுவிறுப்பு.இத்திரைப்படத்தின் சிறப்பம்சம் திரைக்கதையாகும். விருமாண்டியின் பார்வையிலும் அவரது எதிரியின் பார்வையிலும் திரைக்கதை நகர்வது மேலும் திரைப்படத்தில் விறுவிறுப்பை கூட்டுகின்றன.