'''அறம்''' நல்வழி, ஒழுங்கு, தர்மம் போன்ற கருத்துக்களைக் குறிக்கின்றது. தமிழர் சிந்தனைப்புலத்தில் அறம் ஒரு முக்கிய கருத்துரு ஆகும். "அறம் செய்ய விரும்பு" என்பது [[ஔவையார்]] கூற்று. [[திருக்குறள்|திருக்குறளிலும்]] அறத்துப்பால் என்ற ஒரு பகுதி உண்டு.
'''ஒழுக்கநெறி''' (Morality) என்பது நல்லவை, தீயவை என்பன தொடர்பில் ஒரு சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடத்தைகளின் தொகுப்பு எனலாம். ஒழுக்கநெறிகள் எல்லாச் சமுதாயங்களிலுமே ஒன்றுபோல இருப்பதில்லை. காலம், நம்பிக்கைகள், [[பண்பாடு]] என்பவற்றைப் பொறுத்து இவை வேறுபடுகின்றன. ஒழுக்கநெறிகள், [[சமூகம்]], [[மெய்யியல்]], [[சமயம்]], தனிமனிதரின் [[மனச்சாட்சி]] போன்றவற்றால் வரையறுக்கப்படுகின்றன.
== இவற்றையும் பார்க்க ==
நெறி சார்ந்ததும், உலகம் தழுவியதுமான பொருளில், ஒழுக்கநெறி என்பது, குறிப்பிட்ட சூழ்நிலைகளில், ஒவ்வொருவரும் கடைப்பிடிக்கவேண்டிய இலட்சிய நடத்தைகளின் தொகுப்பைக் குறிக்கிறது. இவ்வாறான "விதிமுறை" சார்ந்த ஒழுக்கநெறிகளின் அடிப்படையிலேயே "கொலை ஒழுக்கநெறிக்கு மாறானது" போன்ற முடிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
* [[நாற்பொருள்]]
* [[:en:Ethics]]
== வெளி இணைப்புகள் ==
[[பகுப்பு:ஒழுக்கநெறிகள்]]
* [http://ennappinnalgal.blogspot.com/2005/10/blog-post_24.html வள்ளுவர் அறம், அறவினை போன்றவற்றை வரையறுக்கிறாரா?]