நோவாவின் பேழை (ஹொங்கொங்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 4:
 
==வரலாறு==
[[படிமம்:நோவாவின் பேழை 45.JPG|thumb|left|260px|கடலின் முகப்பில் நோவாவின் கப்பல், கீழே மக்கள்]]
[[படிமம்:நோவாவின் பேழை 4.JPG|thumb|left|260px|நோவாவின் கப்பல் பின்வலம், கீழே மக்கள்]]
"[[கிறித்தவம்|கிறித்தவர்களின்]] புனித நூலாகிய பைபிளில், பழைய ஏற்பாட்டில், யெனிசசில், 6 மற்றும் 7 அதிகாரங்களில் இந்த [[நோவாவின் பேழை]] குறித்தக் குறிப்புகள் வருகின்றன. பைபிளின் பழைய ஏற்பாட்டில் அதிகாரம் 6-7 களில், நோவாவின் கதை வருகிறது. அக்கதையின் படி மனிதனது பாவச் செயல்கள் பூமியில் அதிகரித்ததால், கோபமுற்றக் கடவுள் எல்லோரையும் அழிக்க வேண்டும் என பிரளயத்தை உண்டுப்பன்னுகிறார். ஆனால் நீதித்தவறாத ஒரே மனிதனான நோவாவையும் அவனது குடும்பத்தினரையும் மட்டும் எப்படியாவது காப்பாற்ற கடவுள் எண்ணுகிறார். அதனால் கடவுள் நோவாவிற்கு ஒரு கட்டளையிடுகிறார். அந்தக்கட்டளையின் படி நோவாவால் கட்டப்படுவதே "நோவாவின் கப்பல் அல்லது நோவாவின் பேழை என்பதாகும். கப்பலை நோவா கட்டியவுடன் நோவாவையும், நோவாவின் குடும்பத்தாரையும், உலகில் உள்ள உயிரினங்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு சோடி விலங்குகள், பறவைகள், ஊர்வன என நோவாவின் கப்பலுக்குள் ஏற்றிக்கொண்டு மூடிக்கொள்ளும் படி கடவுள் கட்டளை இடுகிறார். அதனைத் தொடர்ந்து 40 நாட்கள் இடைவிடாத கடும் மழை, கடல் நீர் மட்டம் மலை முகடுகளுக்கும் மேலாக உயர்கின்றது. அந்த வெள்ளப்பெருக்கில் உலகில் உள்ள உயிரிணங்கள் எல்லாம் அழிந்து போகின்றன. ஆனால் நோவாவும், அவரது குடும்பத்தாரும், கப்பலில் ஏற்றப்பட்ட விலங்குகளும் மட்டுமே உலகில் மிஞ்சுகின்றது. மீண்டும் கடல் நீர் மட்டம் வடிந்து இயல்பு நிலை தோன்றுகிறது. நோவாவின் குடும்பத்தாருடன், மிருகங்களும், பறவைகளும் கப்பலை விட்டு சோடி சோடிகளாக வெளியேறுகின்றன." இதுதான் பைபில் கூறும் கதை. இக்கதையை உண்மை வரலாறு என்று கூறுவோரும், கற்பனை என்று கூறுவோரும் ஒரு புறம் இருக்க, இந்தக் கதைக்கு செயல் வடிவம் கொடுத்து, ஹொங்கொங் வரும் உல்லாசப் பயணிகளை ஈர்த்தெடுக்கும் திட்டம் ஒன்றை வகுத்து, நோவாவின் கப்பலை ஹொங்கொங்கில் ஒரு அழகிய இடமான [[சிங் மா பாலம்|சிங் மா பாலத்தின்]] அடியில் கடல் முகப்பில் கட்டியது ஹொங்கொங் அரசாங்கம், 2009 பெப்ரவரி 15 ஆம் திகதி பொது மக்கள் பார்வைக்கு திறந்து வைத்தது.
 
"https://ta.wikipedia.org/wiki/நோவாவின்_பேழை_(ஹொங்கொங்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது