கட்புலனாகும் நிறமாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: be:Бачнае выпраменьванне
வரிசை 34:
== வரலாறு ==
 
முதன் முதலில் ஒளியியல் நிறமாலையைப் பற்றி இரண்டு பேர் விளக்கியுள்ளனர். ஐசக் [[நியூட்டன்]] (Isaac Newton) அவரது ஆப்ட்டிக்ஸ் (Opticks) என்னும் புத்தகத்திலும் கர்ட்டு (Goethe) என்பவரின் தியரி ஆஃப் கலர்ஸ் (Theory of Colours) என்ற புத்தகத்திலும் இந்த விளக்கங்கள் இடம்பெற்றன. இருப்பினும், நியூட்டன் முப்பட்டகங்கள் வெள்ளொளியைப் பிரிகையடையச் செய்யவும் ஒருங்கிணைக்கவும் கூடியன எனக் கண்டுபிடிக்கும் நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே ரோசர் பேக்கான் (Roger Bacon) தனது அவதானிப்புப் பதிவுகளில் இதைப் பற்றிக் குறித்துள்ளார். இவர் முதன் முதலில் கண்ணாடி டம்ளரில் இருந்த நீரைப் பார்க்கும் போது கட்புலனாகும் நிறமாலையைக் கண்டறிந்தார்.[8]
 
நியூட்டன், 1671 ஆம் ஆண்டு ஒளியியல் பற்றிய அவரது பரிசோதனைகளைப் பற்றி விவரிக்கும் தனது வெளியீடுகளில், ஸ்பெக்ட்ரம் ("தோற்றம்" அல்லது "அருவம்" எனப் பொருள் தரும் இலத்தீன் சொல்) என்ற சொல்லை முதலில் பயன்படுத்தினார் பயன்படுத்தினார். கர்ட்டு, தனது தியரி ஆஃப் கலர்ஸ் என்ற புத்தகத்திலும் ஸ்கோப்பன்னர் (Schopenhauer) தனது ஆன் விஷன் அண்ட் கலர்ஸ் (On Vision and Colors) என்ற புத்தகத்திலும், "ஸ்பெக்ட்ரம்" [Spektrum] என்ற சொல்லை ஒளியியல் ரீதியாக ஏற்படும் ஒரு மாயத் தோற்றம் போன்ற ஒளியியல் நிலைப்பை குறிக்கவே பயன்படுத்தினர். நியூட்டன், சூரிய ஒளியின் மெல்லிய கற்றை ஒன்று ஒரு கண்ணாடி முப்பட்டகத்தில் ஒரு குறிப்பிட்ட கோணத்தில் படும் போது, அதில் ஒரு பகுதி ஒளிக் கற்றைகள் எதிரொளிப்பதையும் ஒரு சில கற்றைகள் கண்ணாடியில் புகுந்து சென்று வெவ்வேறு நிறங்களைக் கொண்ட பட்டைகளைத் தோற்றுவிப்பதையும் கண்டார். நியூட்டன், ஒளியானது வெவ்வேறு நிறங்களாலான "ஒளித்துகள்களால்" (கார்ப்பசல்) (துகள்கள்) ஆனது. மேலும் ஒளி ஊடுருவக்கூடிய பருப்பொருளில், ஒளியின் வெவ்வேறு நிறங்கள் வெவ்வேறு வேகத்தில் நகர்கின்றன. இந்நிகழ்வின் போது கண்ணாடியில் சிவப்பு ஒளியானது ஊதாவை விட வேகமாக நகர்கிறது என்ற கருதுகோளை முன்மொழிந்தார். இதன் விளைவாக, முப்பட்டகத்தின் வழியாகச் செல்லும் போது சிவப்பு ஒளியானது ஊதாவை விட குறைவாகவே வளைகிறது (ஒளிவிலகலடைகிறது), இதனால் நிறமாலை உருவாகிறது.
வரிசை 40:
நியூட்டன் நிறமாலையை ஏழு பெயர்களைக்கொண்ட தனித்தனி நிறங்களாகப் பிரித்தார்: சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, நீலம், கருநீலம் (இண்டிகோ) மற்றும் ஊதா. (பள்ளி மாணவர்கள் இந்த வரிசையை நினைவில் கொள்ள ROY G. BIV அல்லது ரிச்சர்டு ஆஃப் யார்க் கேவ் பேட்டில் இன் வெயின் (Richard Of York Gave Battle In Vain) என்ற நினைவாற்றல் பேணும் வாக்கியத்தைக் கொண்டு நினைவில் கொண்டனர்.) நிறங்களுக்கும், இசை சுவரங்களுக்கும், சூரிய மண்டலத்திலுள்ள அறியப்பட்ட பகுதிகளுக்கும் வாரத்தின் நாட்களுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது என்னும் பண்டைய கிரேக்க சோஃபிஸ்ட்டுகளின் நம்பிக்கையின் அடிப்படையிலேயே அவர் இவ்வாறு ஏழு நிறங்கள் உள்ளதெனக் கருதினார்.[10][12] மனிதக் கண்ணானது மற்ற நிறங்களுடன் ஒப்பிடுகையில் இண்டிகோவின் அதிர்வெண்களை அதிகம் உணரும் திறன் கொண்டது. இதனால் அதிக பார்வைத் திறன் உள்ளவர்களால் இண்டிகோவையும் ஊதாவையும் பிரித்தறிய முடியாது. இந்தக் காரணத்தினாலேயே ஐசாக் அசிமோவ் (Isaac Asimov) உள்ளிட்ட விவரணையாளர்கள், இண்டிகோவை ஒரு தனிப்பட்ட நிறமாகக் கருதக்கூடாது, அதை ஊதா அல்லது நீலத்தின் ஒரு மாறுநிறமாகவே கருத வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளனர்.
 
ஜோஹன்யோகான் உல்ஃப்கேங்உல்புகேங்கு வான் கர்ட்டு (Johann Wolfgang von Goethe), தொடர் நிறமாலை என்பது ஒரு கூட்டு நிகழ்வாகும் என வாதிட்டார். நியூட்டன், இந்த நிகழ்வை மட்டும் தனித்துக் காண்பிப்பதற்காக ஒளிக் கதிரைக் குறுகலாக்கினார், கர்ட்டு அகலமான துளை நிறமாலையை உருவாக்குவதில்லை, ஆனால் அதற்கு மாறாக இடையிடையே வெள்ளை நிறத்துடன் சிவப்பு-மஞ்சள் மற்றும் நீல-சியான் விளிம்புகள் காணப்பட்டன. இந்த விளிம்புகள் ஒன்றின் மீது ஒன்று பொருந்துமளவு நெருக்கமாக அமையும் போது நிறமாலை தோன்றுகிறது.
 
19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், கட்புலனாகும் நிறமாலை பற்றிய கருத்து மேலும் வரையறுக்கப்பட்டதாக மாறியது. [[வில்லியம் ஹார்ச்சல் எர்சல்]](William Herschel) (அகச்சிவப்பு) மற்றும் ஜோஹான்யோகான் வில்லியம் [[ரிட்டர்]] (Johann Wilhelm Ritter) (புற ஊதா), [[தாமஸ் யங்]] (Thomas Young), தாமஸ் ஜோஹன்யோகான் [[சீபக்]] (Thomas Johann Seebeck) மற்றும் பலர் கட்புலனாகும் ஒளி வரம்புக்கு அப்பாலமைந்துள்ள ஒளியைப் பற்றிக் கண்டறிந்ததே அதற்குக் காரணமானது.
1802 ஆம் ஆண்டு யங் தான் முதல் முதலில், ஒளியின் வெவ்வேறு நிறங்களின் அலைநீளங்களை அளவிட்டார்.
 
"https://ta.wikipedia.org/wiki/கட்புலனாகும்_நிறமாலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது