பொன்னையா (நடனக் கலைஞர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
'''பொன்னய்யா'''
தட்டடவு முடிவு அடவு என்று பத்து வகை அடவுகளை அவர் வகுத்தார். இந்த பத்து வகைகளை ஒவ்வொன்றிலும் 12 உட்பிரிவுகள் கொண்டு மொத்தம் 120 அடவுகளாக விரிவுப் படுத்தினார். பின்னர் அலாரிப்பு, ஜதீஸ்வரம், சப்தம், பதவர்ணம், பதம், ராகமாளிகை அல்லது ஸ்லோகம், தில்லானா என்ற அட்டவணையையும் முறைப்படுத்தினார். பதவர்ணம், ஸ்வரஜதி ஆகியவைகளை தமிழிலும், தெலுங்கிலும் நாயக, நாயகி பாவத்தோடு ஏற்றினார். இவ்வாறு வகுத்த முறையை தன் குருநாதர் முன்னிலையிலும், அரசவையிலும் அரங்கேற்றினார். இதைக் கண்டு வியந்த தீட்சிதர் சங்கீதத்திற்கு என் மாணவர்கள் வழிகாட்டிகள் என்று பாராட்டி நால்வருக்கும் சங்கீத சாகித்தியர் பரத ஸ்ரேஷர் என்ற சிறப்புப் பட்டத்தை மன்னரைக் கொண்டு வழங்கச் செய்தார். இன்னும் இவர்கள் வகுத்த பாணியில்தான் நடக்கட்டு சாரிகள் நடைபெறுகின்றன. குலதெய்வத்தின் பெயரிலும், துலேஜா, சரபோஜி, சிவாஜி ஆகிய மராட்டிய மன்னர்கள் பெயரிலும் நாயக, நாயகி பாவத்திலும் நாட்டியத்திற்கு ஏற்ப இசை பாடங்களை பொன்னய்யா ஏற்றினார்.
பொன்னய்யா, சிவானந்தம் ஆகியோருக்கு சரபோஜி மன்னர் பல்லாக்கு மற்றும் பல பரிசுகள் அளித்து, தம்முடனேயே அந்த இசை மேதைகள் இருக்கவேண்டும் என்று பணித்தார். பொன்னய்யா விரும்பியபடியே தஞ்சை பெரிய கோவில் தண்ணீர் பந்தலும், சக்கர விநாயக கோவிலிலும் அமைத்தார். இது நட்டுவன சாவடி என்று அழைக்கப்படுகிறது. தமது தம்பி நோய்வாய்ப்பட்டு இருந்த சமயம் பொன்னய்யா பெரிய நாயகி பெயரில் பிராதாம்மா என்ற பாடலை சங்கராபரண ராகத்தில் இயற்றிப் பாடியதாகாவும் உடனே தம்பியின் நோய் குணமானதாகவும் கூறப்படுகின்றது. கோவில் திருப்பணியில் தமக்கு கிடைத்த ஊதியத்தை தேர்திருவிழா, தண்ணீர் பந்தல் உணவிடல் முதலியவற்றுக்கு கொடையளித்து பொன்னய்யா தொடங்கிய பணி இன்றும் நடைபெறுகின்றது. தஞ்சையில் இந்நால்வரும் வாழ்ந்த இல்லத்திலேயே நாட்டியக் கல்லூரியாக மாணவமாணவியர்க்கு நடனப் பயிற்சி அளிக்கப்பட்டு கோவில்களில் நாட்டிய பணியாற்ற ஏற்பாடு செய்தார். அலாரிப்பு முதல் தில்லானா வரை ராக, தாள, உருப்படிகளை ஏற்றி வெளிப்படுத்தினார். இவற்றில் சங்கராபரண ராகத்தில் 'அதிமோகமாளே ' என்ற பதவர்ணமும், ஆனந்த பைரவி ராகத்தில் 'சகியே இந்த வேலையில் ' என்ற வர்ணமும் குறிப்பிடத்தக்கன. சப்ததாளமாளிகை, நவரத்தினமாளிகை, நட்டரச்சிய மாளிகை முதலியன இவரது அறிவாற்றலுக்கும் கற்பனை வளத்திற்கும், கலை ஞானத்திற்கும் சான்றுகளாகும்.▼
▲பொன்னய்யா, சிவானந்தம் ஆகியோருக்கு சரபோஜி மன்னர் பல்லாக்கு மற்றும் பல பரிசுகள் அளித்து, தம்முடனேயே அந்த இசை மேதைகள் இருக்கவேண்டும் என்று பணித்தார். பொன்னய்யா விரும்பியபடியே தஞ்சை பெரிய கோவில் தண்ணீர் பந்தலும், சக்கர விநாயக கோவிலிலும் அமைத்தார். இது நட்டுவன சாவடி என்று அழைக்கப்படுகிறது. தமது தம்பி நோய்வாய்ப்பட்டு இருந்த சமயம் பொன்னய்யா பெரிய நாயகி பெயரில் பிராதாம்மா என்ற பாடலை சங்கராபரண ராகத்தில் இயற்றிப் பாடியதாகாவும் உடனே தம்பியின் நோய் குணமானதாகவும் கூறப்படுகின்றது. கோவில் திருப்பணியில் தமக்கு கிடைத்த ஊதியத்தை தேர்திருவிழா, தண்ணீர் பந்தல் உணவிடல் முதலியவற்றுக்கு கொடையளித்து பொன்னய்யா தொடங்கிய பணி இன்றும் நடைபெறுகின்றது. தஞ்சையில் இந்நால்வரும் வாழ்ந்த இல்லத்திலேயே நாட்டியக் கல்லூரியாக மாணவமாணவியர்க்கு நடனப் பயிற்சி அளிக்கப்பட்டு கோவில்களில் நாட்டிய பணியாற்ற ஏற்பாடு செய்தார். அலாரிப்பு முதல் தில்லானா வரை ராக, தாள, உருப்படிகளை ஏற்றி வெளிப்படுத்தினார். இவற்றில் சங்கராபரண ராகத்தில் 'அதிமோகமாளே ' என்ற பதவர்ணமும், ஆனந்த பைரவி ராகத்தில் 'சகியே இந்த வேலையில் ' என்ற வர்ணமும் குறிப்பிடத்தக்கன. சப்ததாளமாளிகை, நவரத்தினமாளிகை, நட்டரச்சிய மாளிகை முதலியன இவரது அறிவாற்றலுக்கும் கற்பனை வளத்திற்கும், கலை ஞானத்திற்கும் சான்றுகளாகும்.<ref>[http://www.thinnai.com/?module=displaystory&story_id=20303021&format=print பரத நாட்டியம் - சில குறிப்புகள் - 1]</ref>
== மேற்கோள்கள் ==
|