சிவராம காரந்த்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஞானபீட விருது பெற்ற கன்னட எழுத்தாளர்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: கோடா சிவராம காரந்த். கன்னட மொழியின் மிகச்சிறந்த படைப்பாளி. ஞ...
(வேறுபாடு ஏதுமில்லை)

04:59, 28 சனவரி 2011 இல் நிலவும் திருத்தம்

கோடா சிவராம காரந்த். கன்னட மொழியின் மிகச்சிறந்த படைப்பாளி. ஞானபீட விருது பெற்றவர். (கன்னடம்: ಕೋಟಾ ಶಿವರಾಮ ಕಾರಂತ) (அக்டோபர் 10, 1902 - டிசம்பர் 9, 1997) சூழியல்போராளி. கலைக்களஞ்சிய தொகுப்பாளர். வரலாற்றாசிரியர். நடனக்கலைஞர். யக்‌ஷ கானத்தை மறு சீரமைப்பு செய்தவர். சிற்ப ஆராய்ச்சியாளர். நவீன இந்தியாவின் சிற்பிகளில் ஒருவர். பத பூஷண் விருது பெற்றவர். நெருகக்டிநிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதை திரும்பகொடுத்துவிட்டார்

வாழ்க்கை

உடுப்பி அருகே கோடா என்ற சிற்றூரில் மாத்வ பிராமண குடும்பத்தில் பிறந்தார். சேஷ காரந்தருக்கும் லக்‌ஷமம்மாவுக்கும் அவர் ஐந்தாவது குழந்தை. குந்தாபுராவில் பள்ளிப்டிப்பு முடித்தார். கல்லூரியில் படிக்கையில் காந்தியவாதியாக ஆகி சுதந்திரப்போரில் ஈடுபட்டு சிறைசென்றார். கதர்போராளியாக இருந்தார். அப்போதுதான் எழுத ஆரம்பித்தார். முதல் படைப்புகள் நான்கு நாடகங்கள். தன் முப்பதவது வயதில் லீலா காரந்தை மணந்தார

காரந்த் பலமுகம் கொண்டவர். சமூகசேவையையே தன் வாழ்க்கையாகக் கொண்டார். தன் சொந்த ஊரில் வேளாண்மை செய்தார். ஒரு சிறந்த கல்விநிலையத்தை உருவாக்கினார். காகிதத்தில் பொம்மைசெய்வதில் அவர் நிபுணர். கன்னட கலைக்களஞ்சியம் பன்னிரண்டு தொகுதிகளையும் தானே உருவாக்கினார். கன்னட நடன வடிவமான யட்சகானம் என்ற முறையை பழமையில் இருந்து மீட்டு நவீன கலைவடிவமாக மாற்றம்செய்தார். அவர் சிறந்த நடனக்கலைஞரும்கூட. கன்னட அச்சு முறையை நவீனப்படுத்தினார். கொஞ்சகாலம் அச்சகங்களையும் நடத்தினார்.

வாழ்நாள் முழுக்க காரந்த் போராடிக்கொண்டே இருந்தார். முதிய வயதில் கன்னட சூழியலுக்காக முன்னணிபோராளியாக இருந்தார். அரசுக்கு எதிரான பல வழக்குகளை நடத்தினார். தன் 95 ஆவது வயதில் அவர் கர்நாடக பறவைகளைப்பற்றிய முக்கியமான நூல் ஒன்றை எழுதினார்.

காரந்தின் சுயசரிதை பித்தனின் பத்து முகங்கள். காரந்தின் மகன் உல்லாஸ் காரந்த் இந்தியாவின் முக்கியமான சூழியல் அறிஞர். புலிகளைப்பற்றி ஆராய்ச்சி செய்து முக்கியமான நூல்களை வெளியிட்டிருக்கிறார்.

படைப்புகள்

காரந்த் 47 நாவல்களும் 31 நாடகங்களும் ஆறு கட்டுரை தொகுதிகளும் கலைவிமர்சனங்களின் தொகுதிகளாக 31 நூல்களும் சாளுக்கிய கட்டிடக்கலை பற்றிய ஆய்வுநூல் ஒன்றும் யட்சகானத்தைப்பற்றிய இரு பெரும் தொகை நூல்கலையும் எழுதினார்.

மூன்று வால்யூம் கொண்ட குழந்தைகள் கலைக்களஞ்சியம், 12 வால்யூம் கொண்ட கன்னட கலைக்களஞ்சியம் நான்கு வால்யூம் கொண்ட அறிவியல் கலைக்களஞ்சியம் ஆகியவை அவரது சாதனை நூல்கள்.

இவற்றைத்தவிர 240 குழந்தை நூல்களையும் 4 பயண நூல்களையும் பறவைகளைப்பற்றி 2 நூல்களையும் எழுதியிருக்கிறார். மொத்தம் 417 நூல்கள். நூல்களின் அளவில் அவருக்கு இணையாக தமிழில் எவருமே இல்லை.

மூகஜ்ஜிய கனசுகளு [ஊமைப்பெண்ணின் கனவுகள்] மரணி மண்ணிகே [மண்ணும் மனிதரும்] சோமன துடி [சோமனின் துடி] ஆகிய மூன்றுநாவல்களும் அவரது சாதனைப்படைப்புகள்

பரிசுகள்

காரந்த் கிட்டத்தட்ட 30 விருதுகளை பெற்றிருக்கிறார்

ஞானபீடம் 1978

பத்ம விபூஷண் 1977

சாகித்ய அக்காதமி 1958

பாம்பா விருது

துள்ஸி சம்மான்

ஸ்வெதேஷ் அக்காதமி சம்மான்

திரையில்

சோமன துடி [புட்டண்ண கனகல்]

சிக்குரித கனசு

மலைய மக்களு


மொழியாக்கம்

தமிழில் வெளிவந்த நாவல்கள்

1. ஊமைப்பெண்ணின் கனவுகள் - சித்தலிங்கையா நேஷனல் புக் டிரஸ்ட்

2 மண்ணும் மனிதரும் -சித்தலிங்கையா நேஷனல் புக் டிரஸ்ட்

3 சோமன துடி சித்தலிங்கையா நேஷனல் புக் டிரஸ்ட்

4 அழிந்தபிறகு -சித்தலிங்கையா நேஷனல் புக் டிரஸ்ட்


இணைப்புகள்

அழிந்தபிறகு, யாழிசை

மண்ணும் மனிதரும். ஜெயமோகன்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவராம_காரந்த்&oldid=678012" இலிருந்து மீள்விக்கப்பட்டது