ஆர்மோனியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
No edit summary
வரிசை 3:
 
==வரலாறு==
பிரெஞ்சு நாட்டவரான [[அலெக்சாண்டர் தெபைன்]] என்பவர் 1840 ஆம் ஆண்டில், முதன் முதலாக இதனை உருவாக்கினார், எனினும், இது போன்ற வேறு இசைக்கருவிகள் வேறு பலராலும் இதே காலத்தில் உருவாக்கப்பட்டன.<ref>{{cite web | url=http://www.harmoniums.com/hist_en.htm | title=History of the reed organ | accessdate=2010-08-06}}</ref> 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலும், 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் மேலை நாடுகளில் இதன் பயன்பாடு உச்ச நிலையில் இருந்தது. இது, பெரிய தேவாலயங்களில் பயன்படுத்தப்பட்ட [[குளாய் ஆர்கன்]]களை விட அளவில் சிறியனவாகவும், மலிவாகவும் இருந்ததனால், அக்காலத்தில், சிறிய தேவாலயங்களிலும் சிற்றாலயங்களிலும் இதனை விரும்பிப் பயன்படுத்தினர். எடுத்துச் செல்வதற்கு இலகுவாக இருந்த இக்கருவி அக்கால ஐரோப்பிய வல்லரசுகளின் [[குடியேற்ற நாடு]]களுக்கும் பரவியது.
 
மேலை நாடுகளில் இக்கருவி புகழ் பெற்றிருந்த 1900 ஆண்டுக் காலப் பகுதியில், பல்வேறு பாணிகளில் ஆர்மோனியங்கள் உருவாக்கப்பட்டன. எளிமையான அலங்காரங்கள் அற்ற பெட்டிகளுடன் கூடிய ஆர்மோனியங்கள் முதல் பெரிய அளவிலான, அழகூட்டல்களுடன் கூடியவையுமான பெட்டிகளைக் கொண்ட ஆர்மோனியங்கள் வரை உருவாகின. விலை கூடிய ஆர்மோனியங்கள் குளாய் ஆர்கன்களைப் போல் தோன்றுமாறு செய்யப்பட்டன. இதற்காக குளாய் ஆர்கன்களில் உள்ளது போன்ற ஆனால் போலியான குளாய்கள் ஆர்மோனியத்துடன் பொருத்தப்பட்டன. சில வகை ஆர்மோனியங்கள் இரண்டு விசைப்பலகைகளுடன் அமைக்கப்பட்டதுடன், காலால் இயக்கும் விசைப்பலகைகளைக் கொண்ட ஆர்மோனியங்களும் உருவாக்கப்பட்டன. இவ்வாறான ஆர்மோனியங்களின் துருத்திகளை இயக்குவதற்கு ஒரு உதவியாளர் தேவை. சில பிற்கால ஆர்மோனியங்களில் இதற்காக மின் இயக்கிகள் பயன்பட்டன.
வரிசை 20:
19 ஆம் நூற்றாண்டில் கர்நாடக இசை, பார்சி, மராட்டி இசைகள் போன்ற பல்வேறு இந்திய இசை நிகழ்ச்சிகளில் ஆர்மோனியம் முக்கியமான இடத்தைப் பெற்றிருந்தது. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட தேசிய எழுச்சியினால் ஆர்மோனியமும் ஒரு வெளிநாட்டுப் பொருளாகப் பார்க்கப்பட்டு, அதற்கு எதிர்ப்பு உருவானது. அத்தோடு பல்வேறு நுட்பக் காரணங்களும் ஆர்மோனியத்துக்கு எதிராக அமைந்தன. கர்நாடக, இந்துத்தானி இசைகளுக்கு இன்றியமையாத [[கமகம்|கமகங்களை]] ஆர்மோனியத்தில் வாசிப்பது கடினம். இதில் 12 சுரத்தானங்களே இருப்பதால் 16 சுரத்தானங்களைக் கொண்ட இந்திய இசையை வாசிப்பதில் சிக்கல்கள் உள்ளன. கன ராகங்கள் எனப்படும் சங்கராபரணம், பைரவி, கல்யாணி போன்ற இராகங்களை ஆர்மோனியத்தில் வாசிக்க முடியாது. அத்துடன் இது எழுப்பும் ஒலியும் அதிகம்.
 
இவ்வாறான பல காரணங்களால், அகில இந்திய வானொலி தனது நிகழ்ச்சிகளில் ஆர்மோனியத்துக்குத் தடை விதித்தது. இத்தடை அப்போதைய இந்தியப் பிரதமர் சவகர்லால் நேருவின் ஆணைக்கு இணங்கவே விதிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது<ref>http://www.brahmintoday.org/magazine/2009_issues/bt70-1204_harmonium.php</ref>. சிறந்த கவிஞராகவும், கர்நாடக இசை நுட்பங்களை அறிந்தவராகவும், விடுதலைப் போராட்ட வீரராகவும் விளங்கிய [[சுப்பிரமணிய பாரதி|சுப்பிரமணிய பாரதியாரும்]] ஆர்மோனியத்தை எதிர்த்துக் கட்டுரை எழுதியுள்ளார்<ref>http://www.tamilvu.org/slet/lA450/lA450ktu.jsp?id=101&sid=10100&pno=0</ref>.
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/ஆர்மோனியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது