இலங்கை தொடருந்து போக்குவரத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 27:
==ஒப்பந்தம் ரத்து==
இதன் விளைவாக 1861ல் கம்பனியுடனான ஒப்பந்தம் ரத்துச் செய்யப்பட்டது. கம்பனி இட்ட மூலதனத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு இலங்கை அரசு தொடர்வண்டி பாதையமைக்கும் பொறுப்பைத் தானே ஏற்றுக்கொண்டது. இதற்காக இலங்கை அரசாங்க புகையிரதம், (Ceylon Government Railway - CGR) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. பின்னர் ரயில் பாதை அமைக்கும் வேலைக்காக விலை மனுக்கள் கோரப்பட்டன. இறுதியில் ஆகக் குறைந்த விலையைச் சமர்ப்பித்த டபிள்யு. எப். ஜி. பவுல் (W.F.G. Favuell) என்ற ஒப்பந்தக்காரருக்கு ரயில் பாதையமைக்கும் வேலை ஒப்படைக்கப்பட்டது.
 
==டோனி வெற்றி பெற்றார்.==
இலங்கை அரசாங்க புகையிரதத்தின் பிரதம பொறியியலாளராக நியமிக்கப்பட்டிருந்த சேர். ஜி.எல்.மோலிஸ்வேர்த் Sir G.L. Molesworth என்பவருடன் இணைந்து 3 வருடங்களில் அம்பேபுஸ்ஸ வரையிலான ரயில் பாதையை அமைப்பதில் டோனி வெற்றி பெற்றார்.
 
களனி நதி மீதான 244 மீற்றர் (800அடி) நீளமான பாலம் பல துண்டங்களாக நிர்மானிக்கப்பட்டது. (பாலத்தின் ஒரு பகுதி [[1872]] [[செப்டம்பர் 20]]ம் திகதி பெய்த கடும் மழையின் போது ரயில் என்ஜின் ஒன்றுடனும் அதன் பணியாளர் குழுவுடனும் முறிந்துவிழுந்தது. தற்போதுள்ள களனி ரயில் பாலம் 1902ல் பூர்த்தியாக்கப்பட்டது.)
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை_தொடருந்து_போக்குவரத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது