==கி.பி. 800ஆம் ஆண்டு முதல் கி.பி. 1453ஆம் ஆண்டு வரையிலான நிகழ்வுகள்==
*கி.பி. 800, திசம்பர் 25: உரோமை நகரில் அமைந்துள்ள புனித பேதுரு பேராலயத்தில், போப்பாண்டவர் மூன்றாம் லியோ (சிங்கராயர்), ஃபிராங்கிய இனத்தவரின் மன்னராகிய சார்லிமேன்<ref>[http://en.wikipedia.org/wiki/Charlemagne சார்லிமேன்]</ref> என்பவருக்கு "புனித உரோமைப் பேரரசன்"<ref>[http://en.wikipedia.org/wiki/Holy_Roman_Empire புனித உரோமைப் பேரரசு]</ref> என்னும் பட்டமளித்து முடிசூட்டுகிறார்.
*கி.பி. 829: ஆன்சுகார் (ஆஸ்கார்)<ref>[http://en.wikipedia.org/wiki/Ansgar ஆன்சுகார்]</ref> என்னும் மறைபோதகர் சுவீடன் நாட்டில் இசுடாக்கோம் அருகே கிறித்தவ சமயத்தைப் பரப்பும் பணியில் ஈடுபடுகிறார்.
*கி.பி. 863: காண்ஸ்தாந்திநோப்புள் முதன்மை ஆயர் புனித சிரில் என்பவரையும் அவர்தம் சகோதரர் புனித மெத்தோடியுசு என்பவரையும் தேர்ந்தெடுத்து, அவர்கள் கிழக்கு ஐரோப்பிய மக்களாகிய சிலாவிய இனத்தார் நடுவே கிறித்தவ சமயத்தைப் பரப்பும்படி அனுப்பிவைக்கிறார். இவ்விரு சகோதரர்களும் திருவிவிலியத்தை சிலாவோனிய மொழியில் பெயர்க்கின்றார்கள் <ref>[http://en.wikipedia.org/wiki/Saints_Cyril_and_Methodius புனிதர்கள் சிரில், மெத்தோடியுசு]</ref>. சிலாவிய இலக்கிய மற்றும் கலை வளர்ச்சிக்கு அடித்தளம் இடுகிறார்கள்.
*கி.பி. 869: ஃபோத்தியுசு <ref>[http://en.wikipedia.org/wiki/Photios_I_of_Constantinople ஃபோத்தியுசு]</ref> என்னும் காண்ஸ்தாந்திநோப்புள் முதன்மை ஆயர் தப்பறைக் கொள்கை கற்பித்தார் என்பதற்காக நான்காம் காண்ஸ்தாந்திநோப்புள் பொதுச்சங்கம் <ref>[http://en.wikipedia.org/wiki/Fourth_Council_of_Constantinople_(Catholic) நான்காம் காண்ஸ்தாந்திநோப்புள் பொதுச்சங்கம்]</ref> அவரைக் கண்டனம் செய்கிறது.
இச்சங்கம் முறையானதல்ல என்று கீழை மரபுவழி திருச்சபை கருதுகிறது. எல்லாக் கிறித்தவ சபைகளாலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற பண்டைக் கிறித்தவ ஏழு பொதுச்சங்கங்கள் இத்தோடு முடிகின்றன.