குமரி விடுதலைப் போராட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 8:
===முதல் காரணம்===
இந்தியா சுதந்திரம் அடைந்ததைத் தொடர்ந்து நாட்டின் ஒருங்கினைந்த வளர்ச்சிக்காக பல்வேறுத் ஐந்தாண்டு திட்டங்களை வகுத்து செயல்படுத்தியது. இதன் படி முதலாவது ஐந்தாண்டு திட்டம் 1950 முதல் 1955 வரை செயல்படுத்தப் பட்டது. இந்த திட்டத்தில் திருவிதாங்கூர் தமிழ் பகுதிகளின் வளர்ச்சிக்கு பல திட்டங்கள் தீட்டப் பட்டது. அவை பெருஞ்சாணி அணைத் திட்டம், சிற்றாறு பட்டணம் கால்வாய்த் திட்டம், நெய்யாறு இடதுகரைக் கால்வாய்த் திட்டம், குழித்துறை லிப்டு இரிகெசன் (Lift irrigation) திட்டம், ஆகியன ஆகும். இவ் முக்கிய நீராதாரத் திட்டங்களை சுதந்திர திருவிதாங்கூர் அரசு செயல் படுத்தவில்லை. இதனால் மக்கள் இந்த அரசு மீது வெறுப்படைந்தனர். ஐந்தாண்டுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்த எந்த திட்டங்களையும் செயல்படுத்த முன்வரவில்லை. மக்கள் தலைவர்கள் பலமுறை வேண்டிக் கேட்டுக் கொண்டும், இப் பகுதி வளர்ச்சித் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை வேண்டுமென்றே வட திருவிதாங்கூர் வளர்ச்சிக்கென திருப்பிவிட்டது. இதனால் தென் திருவிதாங்கூர் தமிழர்கள் வாழ்கின்ற பகுதிகள் முற்றிலும் புறக்கணித்தது திரு [[பட்டம் தாணுபிள்ளை]]யின் அரசு. இத்தகைய தென் பொருளாதார வளர்ச்சிப் புறக்கணிப்பு, தாய் தமிழகத்துடன் இணைவதற்கான கோரிக்கை வலுவடைய முக்கிய காரணியாக அமைந்தது.
===இரண்டார்இரண்டாம் காரணம்===
திருவிதாக்கூர் நாடு [[இந்து]] ஆகம அடிப்படையில் ஆட்சி நடத்தப்பட்டமையால் [[சாதி]]க் கோட்ப்பாடுகள் மிகக் கடுமையாக கடைபிடிக்கப்பட்டு வந்தது. [[உயர் இந்துக்கள்]], [[இழிவு இந்துக்கள்]] என சமுதாயத்தை இருகூறுகளாக்கினர். இழிவு இந்துக்களை தீண்டத்தகாதவர்களாகவும், காணத்தகாதவர்களாகவும், நடமாடத் தகுதியற்றவர்களாகவும் கருதி சமுதாயத்தில் அவர்களை இழிவுபடுத்தினர். இந்த மானங்கெட்ட வாழ்விலிருந்து முழு விடுதலை வேண்டியும் பிரிந்து செல்வதற்கு தமிழ் மக்கள் தயாராயினர். இதுவும் பிரிவினைக்கு இரண்டாவது காரணமாக அமைந்தது.
 
===மூன்றாம் காரணம்===
தமிழ் மக்கள் குறிப்பாக நாடார் சமுதாய மக்கள், மலையாளி [[நாயர்]]கள் மற்றும் அவர்களைச் சாரந்தப் பிரிவு மக்களுக்கு எதிராக விடுதலைப் போர் புரிந்தனர். 1948 ல் இப் போர் தீவிரமடைந்தது. திரு பட்டம் தாணுபிள்ளை சுதந்திர திருவிதாங்கூரின் பிரதமராக அன்று செயலாற்றி வந்தார். இவர் இழிவு சமூகத்தாரின் பல்வேறு சமுதாய மறுமலர்ச்சியால் பொறாமைத் தீயை நாடார் சமுதாயத்திற்கு எதிராக வளர்த்துக் கொண்டு இவர்களின் மேல் அடக்குமுறைக் கொடுமைகளை அவிழ்த்துவிட்டார். மங்காட்டில் திரு தேவசகாயம் நாடாரையும், கீழ்குளத்தில் திரு செல்லையன் நாடாரையும் மலையாளிக் காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். இதனைத் தொடர்ந்து நாடார் சமுதாயத்திற்கும் நாடார் சமுதாயத்திற்கும் முட்டலும், மோதலும் ஏற்பட்டது. நாயர்களுக்கு திரு பட்டம் தாணுபிள்ளை அவர்களின் அரசு இயந்திரங்களும் ஆதரவுக் கரம் அளித்தது. இந்த சூழ்நிலையில் 1954 ம் ஆண்டு ஆகத்து 11 ம் நாள் திருவிதாங்கூர் தமிழ் பகுதிகள் முழுவதிலும் '''விடுதலை தினம்''' கடைபிடிக்கப்பட்டது. இத் தருணத்தில் திரு பட்டம் தாணுபிள்ளை திருவிதாங்கூரில் இரண்டாவது முறையாக முதலமைச்சராக இருந்தார். இவரது ஆணையின் படி தமிழர்களான நாடார் மக்கள் மீது இரண்டாவது முறையாக துப்பாக்கிச் சூடு நடத்தினர் மலையாள காவல்துறையினர். இதனால் மார்த்தாண்டத்தில் ஆறுபேரும், [[புதுக்கடை]]யில் ஐவரும் குண்டடிப்பட்டு உயிர் நீத்தனர். இவர்களில் ஐந்துபேர் நாடார் சமுதாயத்தை சார்ந்தவராவார். துப்பாக்கி சூடு முடிந்தவுடன் போராட்டக்காரர்களை அடக்க பட்டம் தாணுபிள்ளை அரசு தீவிர நடவடிக்கை எடுத்தது. அதுமுதல் (11-08-1954) திரு பட்டம் தாணுபிள்ளை பதவியிலிருந்து விலகும் வரை (14-02-1955) அதாவது 188 நாட்கள் விளவங்கோடு மற்றும் கல்குளம் தாலுக்காக்களில் நாடார் மக்கள் மீது காவல்காரர்கள் மிகக் கடுமையான அடக்குமுறைகளைக் கையாண்டனர். பலர் சிறைகளில் அடைக்கப்பட்டு சித்திரவதைக்கு ஆளாகினர். இதுவும் பிரிவினைக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
"https://ta.wikipedia.org/wiki/குமரி_விடுதலைப்_போராட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது