சி. சி. இராமசாமி படையாட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "தமிழ்நாட்டு அமைச்சர்கள்" (using HotCat)
சிNo edit summary
வரிசை 1:
'''சிவ சிதம்பர ராமசாமி படையாச்சி''' (எஸ். எஸ். ராமசாமி படையாச்சி, [[செப்டம்பர் 16]], [[1918]] -[[ஏப்ரல் 3]], [[1992]]) ஒரு தமிழக அரசியல்வாதி. [[தமிழக அமைச்சரவை]]யில் உறுப்பினராகவும் [[மக்களவை (இந்தியா)|இந்திய மக்களவை]] உறுப்பினராகவும் இருந்தவர்.
 
1951ல் வன்னிய குல சத்திரிய சங்கம் ஒரு சாதி மாநாட்டைக் கூட்டி [[வன்னியர்|வன்னியருக்காக]] ஒரு மாநிலந்தழுவிய கட்சியினை உருவாக்க முயன்றது. ஆனால் தலைவர்களுக்குள் இருந்த வேறுபாடால் இம்முயற்சி வெற்றி பெறவில்லை. மாறாக [[வட ஆற்காடு மாவட்டம்|வட ஆற்காடு]] மற்றும் [[செங்கல்பட்டு மாவட்டம்|செங்கல்பட்டு]] மாவட்டங்களில் செல்வாக்கு பெற்றிருந்த [[எம். ஏ. மாணிக்கவேலு நாயக்கர்]] [[காமன்வீல் கட்சி]]யினைத் தொடங்கினார். தென்னாற்காடு மற்றும் சேலம் மாவட்ட வன்னியர்கள் ராமசாமி படையாச்சியின் தலைமையில் [[தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி]] என்ற மற்றொரு கட்சியைத் தொடங்கினர். இரு கட்சிகளும் [[சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1952|1952]] சட்டமன்றத் தேர்தலில் [[திராவிட முன்னேற்றக் கழகம்|திராவிட முன்னேற்றக் கழகத்தின்]] (திமுக) ஆதரவுடன் போட்டியிட்டன. இத்தேர்தலில் திமுக நேரடியாகப் போட்டியிடவில்லை. மாறாக [[திராவிட நாடு]] கோரிக்கையைப் பற்றி சட்டமன்றத்தில் பேசுவோம் என்று உறுதியளித்து ஒப்பந்ததில் கையெழுத்திட்ட கட்சிகளுக்கும் சுயேட்சை வேட்பாளர்களுக்கும் ஆதரவளித்தது. அவ்வாறு உறுதியளித்து போட்டியிட்ட கட்சிகளுள் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியும் ஒன்று.
 
ராம்சாமி படையாட்சி உட்பட 19 உழைப்பாளார் கட்சி வேட்பாளர்கள் 1952 தேர்தலில் வெற்றிபெற்று சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இக்கட்சி வேட்பாளார்கள் [[மக்களவை (இந்தியா) |மக்களவைக்கான]] [[சென்னை மாநிலத்தில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1952|தேர்தலில்]] நான்கு இடங்களில் வென்றனர். ஆரம்பத்தில் [[த. பிரகாசம்]] தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு காமன்வீல் கட்சி ஆதரவளித்தது. தேர்தலில் எக்கட்சிக்கும் பெரும்பான்மை கிட்டவில்லையெனினும் தனிப்பெரும் கட்சியான காங்கிரசுக்கு ஆட்சியமைக்க வாய்ப்பு கொடுக்கப்பட்டு [[சி. ராஜகோபாலாச்சாரி]] (ராஜாஜி) முதலமைச்சரானார். அவர் தனது பெரும்பான்மையை நிரூபிக்க எதிர்க்கட்சிக் கூட்டணியை உடைத்து பல கட்சிகளை தம்பக்கம் இழுத்தார். அவ்வாறு இழுக்கப்பட்ட கட்சிகளுள் ஒன்று உழைப்பாளார் கட்சி. அரசுக்கு ராமசாமி வெளியிலிருந்து ஆதரவளித்தார். 1954ல் [[காமராஜர்]] முதல்வரான பின்னர் ராமசாமி அவரது அமைச்சரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சரானார். 1954ல் அவர் தன் கட்சியை காங்கிரசுடன் இணைத்து விட்டார்.
"https://ta.wikipedia.org/wiki/சி._சி._இராமசாமி_படையாட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது