பழங்குடியினர் கலைவிழா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
''பழங்குடியினர் கலாச்சாரம்'' மற்றும் வாழ்க்கை முறையை வெளிக்காட்டும் நிகழ்ச்சியாக [[பழங்குடியினர்]] கலைவிழா 2011ம் ஆண்டு பெப்ரவரி 19, மற்றும் 20ம் ஆகிய தேதிகளில் [[பேச்சிப்பாறை]] வள்ளக்கடவு பகுதியில் நடக்கிறது. பேச்சிப்பாறை, [[கடையாலுமூடு]], [[பொன்மனை]] பேரூராட்சிகளுக்கு உட்பட்ட மலைப் பகுதிகளில் உள்ள பழங்குடி மக்கள் கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் ஆகியவற்றை நடத்துகின்றனர். [[கோத்தகிரி]], [[நீலகிரி]] மாவட்டங்களை சேர்ந்த [[தோடர்]]கள், [[குறும்பர்]]கள், [[போர்ட்டர்]]கள், [[ஒட்டர்]]கள், [[வடுகர்]] இன பழங்குடி இன மக்களும் இக் கலை நிகழ்வில் கலந்துகொள்கிறார்கள். இங்கு [[கணியான் கூத்து]], [[சேவையாட்டம்]], [[குறவன் குறத்தியாட்டம்]], [[மரவுரியாட்டம்]], [[விளக்குகெட்டு]], [[காட்டுப்புறப் பாட்டு]] ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. நிகழ்ச்சியின் முதல் நாள் [[தெப்ப போட்டி]], [[உறியடி]], [[ஈட்டி எறிதல்]], ஆகிய போட்டிகள் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் நாளன்று காலை [[கபடி]], [[வடம் இழுத்தல்]], [[வில் அம்பு போட்டி]]கள் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
[[பகுப்பு:தமிழர் விழாக்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பழங்குடியினர்_கலைவிழா" இலிருந்து மீள்விக்கப்பட்டது