'''கம்பஹா''' என்பது [[இலங்கை]], [[மேல் மாகாணம், இலங்கை|மேல் மாகாணத்தின்]] மூன்று மாவட்டங்களில் ஒன்றான [[கம்பகா மாவட்டம்|கம்பகா மாவட்டத்தில்]], அமைந்துள்ளது. இது [[கொழும்பு|கொழும்பிற்கு]] வடக்கே 40 கிலேமீற்றர் தூரத்தில், கொழும்பு-கண்டி பெருந்தெருவிலிருந்து மூன்று கிலோமீற்றர் உள்ளாக அமைந்த ஒரு பெருநகராகும். முற்று முழுதும் சிங்கள மக்களே வாழும் அந்நகரில் ஏனைய இனத்தவர்களைக் காண்பது மிக அரிது. கம்பகா நகரத்தைத் தலைநகராகக் கொண்டு கொழும்பு மாவட்டத்திலிருந்து [[களனி ஆறு|களனி ஆற்றால்]] பிரிக்கப்பட்ட மாவட்டம் கம்பகா மாவட்டம் ஆகும். ''கம்'' அல்லது ''கம'' என்ற சிங்களச் சொல்லின் பொருள் கிராமம் என்பதாகும். ''பஹ'' என்பது சிங்களத்தில் ஐந்து எனப் பொருள்படும். எனவே ''கம்பஹா'' என்பதன் பொருள் ''ஐந்து கிராமங்கள்'' என்பதாகும்.