சி. ஜேசுதாசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 11:
 
கோட்டாறு குமாரசாமிபிள்ளை இவரது தமிழாசிரியர். அண்ணாமலைபல்கலையில் கா.சு.பிள்ளையிடம் தமிழ்கற்றார்
 
 
 
== பங்களிப்பு ==
கல்லூரி ஆசிரியராக பேராசிரியர் ஜேசுதாசன் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளையின் வழி வந்தவர் எனலாம். பொதுவாக அன்றைய தமிழ் பேராசிரியர்களின் குணம் நவீன இலக்கியம் மீதான் உதாசீனமாகும். பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை எந்த அளவுக்கு பழந்தமிழ் பயிற்சியும் ஈடுபாடும் கொண்டிருந்தாரோ அந்த அளவுக்கு நவீன இலக்கிய ஆர்வமும் ரசனையும் உடையவராக இருந்தார். [[புதுமைப்பித்தன்|புதுமைப்பித்தனை]] அங்கீகரித்த ஒரே மரபுவழி தமிழறிஞர் அன்று வையாபுரிப்பிள்ளை மட்டுமே. அவர் தமிழ் பற்று மிக்கவர், அதே சமயம் வெறி இல்லாதவர். சம்ஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பாண்டித்தியம் உள்ளவர். அறிவியல் பூர்வமான ஆய்வில் நம்பிக்கை கொண்டவர். இக்காரணங்களால் அவர் அன்றைய தமிழ்வெறி அலையில் தாக்குபிடிக்க முடியாமல் திருவனந்தபுரம் வர நேர்ந்தது.
 
கல்லூரி ஆசிரியராக பேராசிரியர் ஜேசுதாசன் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளையின் வழி வந்தவர் எனலாம். பொதுவாக அன்றைய தமிழ் பேராசிரியர்களின் குணம் நவீன இலக்கியம் மீதான் உதாசீனமாகும். பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை எந்த அளவுக்கு பழந்தமிழ் பயிற்சியும் ஈடுபாடும் கொண்டிருந்தாரோ அந்த அளவுக்கு நவீன இலக்கிய ஆர்வமும் ரசனையும் உடையவராக இருந்தார். [[புதுமைப்பித்தன்|புதுமைப்பித்தனை]] அங்கீகரித்த ஒரே மரபுவழி தமிழறிஞர் அன்று வையாபுரிப்பிள்ளை மட்டுமே. அவர் தமிழ் பற்று மிக்கவர், அதே சமயம் வெறி இல்லாதவர். சம்ஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பாண்டித்தியம் உள்ளவர். அறிவியல் பூர்வமான ஆய்வில் நம்பிக்கை கொண்டவர். இக்காரணங்களால் அவர் அன்றைய தமிழ்வெறி அலையில் தாக்குபிடிக்க முடியாமல் திருவனந்தபுரம் வர நேர்ந்தது.
 
பேராசிரியர் அடிப்படையில் [[கம்பராமாயணம்]] மீது ஆழமான பிடிப்பு கொண்ட மரபார்ந்த தமிழறிஞர். அவரது வாழ்க்கையின் தொடக்கம் முதல் இறுதிக்கணம் வரை கம்பராமாயணம் அவருடன் இருந்தது. அதன் செவ்வியல் குணமும் கவித்துவ வீச்சும் அவரை கவர்ந்தன. அவரது மனநிலை பொதுவாக செவ்வியலுக்கு சாதகமானது. ஆனால் அவர் நவீன இலக்கியத்தை ரசித்தார், அதன் முக்கியத்துவத்தை கல்வி நிலையங்கள் ஏற்கச் செய்ய கடுமையாக போராடினார். இதற்கு காரணம் அவரது பரந்துபட்ட ரசனை மட்டுமல்ல, அதற்கு சாதகமான ஒரு சூழலும் அன்று திருவனந்தபுரத்தில் இருந்தது. [[நகுலன்]], [[மாதவன்]], [[நீலபத்மநாபன்]], [[காஸ்யபன்]], [[தட்சணாமூர்த்தி]] போன்ற தமிழ் எழுத்தாளர்களும் [[அய்யப்ப பணிக்கர்]], [[கே எஸ் நாராயணபிள்ளை]] போன்ற [[மலையாளம்|மலையாள]] எழுத்தாளர்களும் அன்று ஒரு கூட்டாக இயங்கினார்கள். நவீன தமிழிலக்கியத்தின் திருப்பு முனையாக கணிக்கப்படும் [[குருஷேத்ரம்]] என்ற தொகை நூல் (நகுலன் தொகுத்தது) அப்போது வெளியானது. அதில் பேராசிரியருக்கும் பங்கு உண்டு.
 
 
கல்வித்துறையில் நவீன இலக்கியத்தை அறிமுகம் செய்ய அமைப்பு ரீதியாக போராடியவர் பேராசிரியர். புதுமைப்பித்தனைப் பற்றிய முதல் முனைவர் பட்ட ஆய்வு அவரது மாணவரால் [முனைவர் ஏ சுப்ரமணியபிள்ளை]] அவரது வழிகாட்டலில் நடத்தப்பட்டது. புதுமைப்பித்தன், ஆர். சண்முக சுந்தரம் ஆகியோரின் படைப்புகள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படவும் அவரே காரணமாக அமைந்தார்.
 
ஒரு விமரிசகராக மிகக் குறைவாகவே பேராசிரியர் எழுதியுள்ளார். அதற்கு அன்றைய பிரசுரச் சூழலும் ஒரு காரணம். நீலபத்மநாபன், ஆர் ஷண்முக சுந்தரம், க நா சு ஆகியோர் குறித்து அவர் ஆக்கிய விமரிசனங்கள் முக்கியமானவை. நீல பத்மநாபனை கண்டைடைந்ததே அவர்தான் எனலாம்.
 
 
பிற்பாடு வெளியீட்டு வாய்ப்பு கிடைத்தபோது அவர் தன் மனைவியை வழிகாட்டி மனைவி பேரில் மூன்று பகுதிகளாக ஆக்கிய 'தமிழிலக்கிய வரலாறு ' (ஆங்கிலம்: ''Count Down from Salamon'', ''Hepsipaa Jeesuthaasan'') ஒரு சாதனை படைப்பு. தமிழில் இருந்த பல ஆழமான முன்முடிவுகளை மென்மையாகவும் உறுதியாகவும் நிராகரிக்கிறார் பேராசிரியர். குறிப்பாக சனாதன மதம் சார்ந்த திரிபுகளை, குறுக்கல் போக்குகளை சற்றும் எதிர்மறைப் பார்வை இல்லாமல், ஆய்வுபலத்துடன், மெல்லிய திடமான குரலில் அவர் மறுப்பது மிகவும் முக்கியமானது. இக்காரணத்தினாலேயெ இப்படைப்பு இங்கு அதிகமாக கவனிக்கப்படவில்லை.
 
 
ஆயினும் பேராசிரியரின் முக்கிய பங்களிப்பு அவரது வகுப்புகள் தான். நகைச்சுவை உணர்வும், நுட்பமான விமரிசனப் பாணியும், ஆழமான தகவலறிவும் நிரம்பியவை அவரது வகுப்பு உரைகள். அவரது மாணவர்கள் மூலம் மெல்ல மெல்ல ஒரு கருத்தியல் பாதிப்பை உருவாக்கவும் அவரால் முடிந்தது. பேரா பத்மநாபன், [[அ. கா.பெருமாள்]], ராஜமார்த்தாண்டன்(விமரிசகர்,இதழாளர்), வேதசகாயகுமார் (விமரிசகர்), ப கிருஷ்ணசாமி (விமரிசகர்) ஆகியோர் அவர்களில் முக்கியமான சிலர்.
வரி 36 ⟶ 27:
 
பேராசிரியர் இசைப்பயிற்சி உடையவர். இசைச்செல்வர் லட்சுமணபிள்ளையின் மாணவரான கிருஷ்ணசாமியிடம் இசை பயின்றவர். தமிழிசையார்வம் உண்டு. அழகிய இசைப்ப்பாடல்கள் பல எழுதியுள்ளார். அவரே நன்றாக பாடவும் செய்வார். வீணை வாசிப்பார் .
 
ஆழமான மதபக்தி உடையவர் பேராசிரியர். கிறிஸ்து அவருக்கு ஜீவனுள்ள தேவனாகவே இருந்தார். அதேசமயம் அந்த பக்தி அவரை நம் மரபின் பேரிலக்கியங்களுக்குள் போக தடையாக அமையவுமில்லை. சொல்லப்போனால் கிறிஸ்து மூலமே அவர் ராமனை மேலும் நன்றாக புரிந்து கொண்டார். அதே சமயம் ஒவ்வொரு வரியுடனும் மத ரீதியாக ஒத்துப்போனாலும் கூட தேம்பாவணியும் இரட்சணிய யாத்ரீகமும் கவித்துவ வெற்றி அடையவில்லை என்று சொல்லவும் தயங்கியவரல்ல. தன் குழந்தைகளுக்கு முழுக்க ராமாயண கதாபாத்திரங்களின் பெயர்களை மத மரபை மீறி சூட்டியவர் அவர்.
 
 
பேராசிரியரின் விரிவான பேட்டி ''[[சொல்புதிது]]'' ஜனவரி 2002 இதழில் வெளிவந்தது. 'ஒரு மகத்தான விரிவான வகுப்பு அது. பேட்டி எடுத்தவர்களும் கொடுத்தவரும் மிக உயர்ந்த அறிவார்ந்த தளத்தில் இருக்கும்போது நடந்துள்ளது..'' என்று [[அசோகமித்திரன்]] விருட்சம் பிப்ரவரி 2002 இதழில் அதைப்பற்றி சொல்கிறார்.
 
==வெளி இணைப்புகள்==
இணைப்பு
*[http://www.jeyamohan.in/?p=12035 ,http://www.jeyamohan.in/?p=12085 ஜெயமோகன் கதை மத்துறு தயிர்]
 
ஜெயமோகன் கதை மத்துறு தயிர் http://www.jeyamohan.in/?p=12035 ,http://www.jeyamohan.in/?p=12085
 
 
"https://ta.wikipedia.org/wiki/சி._ஜேசுதாசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது