'''திருக்கடவூர் பிரமபுரீசுவரர் கோயில்''' [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]](இடங்களில்) ஒன்றாகும். இத்தலமே கடவூர் மயானம் எனப்படுகிறது. சிவனின் ஐந்து மயானத் தலங்களில் ஒன்றாகும். ஆதி திருக்கடையூர் என்பதும் இத்தலமே. [[சம்பந்தர்]], [[அப்பர்]], [[சுந்தரர்]] மூவரதும் பாடல் பெற்ற இத்தலம் [[நாகப்பட்டிணம் மாவட்டம்|நாகப்பட்டிணம் மாவட்டத்தில்]] [[மயிலாடுதுறை | மயிலாடுதுறை வட்டத்தில்]] திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தின் கிழக்கு கோபுர வாயிலில் இருந்து 2 கி.மி. தொலைவில் அமைந்துள்ளது. இத்தலத்தில் சிவன் பிரம்மனை நீறாக்கி மீண்டும் உயிர்ப்பித்து அவருக்குப் படைப்புத் தொழிலை அருளினார் என்பது தொன்நம்பிக்கை.