51,759
தொகுப்புகள்
{{Infobox military conflict
|conflict=முதலாம் எல்
|partof=[[மேற்குப் பாலைவனப் போர்த்தொடர்|மேற்குப் பாலைவனப் போர்த்தொடரின்]]
|image=[[File:1stAlameinBritDefense.jpg|250px]]
|caption=எல் அலாமீனில் பிரிட்டானிய அரண்நிலை (ஜூலை 17, 1942).
|date=ஜூலை 1-27, 1942
|place=[[எல்
|result=[[கீழ்நிலை உத்தி]]யளவில் யாருக்கும் வெற்றியில்லை<br/>[[மேல்நிலை உத்தி]]யளவில் நேசநாட்டு வெற்றி
|combatant1= {{flag|ஐக்கிய இராச்சியம்}}<br/>{{flag|ஆஸ்திரேலியா}}<br/>{{flag|நியூசிலாந்து}}<br/>{{flagcountry|தென்னாப்பிரிக்கா}}<br/>{{flag|British Raj}}
{{வார்ப்புரு:போர்த்தகவல்சட்டம் மேற்குப் பாலைவனப் போர்த்தொடர்}}
'''முதலாம் எல்
1940-42ல் வடக்கு ஆப்பிரிக்காவில் அச்சுநாட்டுப் படைகளுக்கும் நேச நாட்டுப் படைகளுக்கும் கடும் சண்டை நடந்து கொண்டிருந்தது. இரு தரப்பினருக்கும் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி ஏற்பட்டன. 1942 மே மாதம் நடந்த [[கசாலா சண்டை]]யில் அச்சுப் படைகளுக்கு கிடைத்த பெரும் வெற்றியால் நிலைகுலைந்த நேச நாட்டுப் படைகள் கசாலா அரண்நிலைகளில் இருந்து மெர்சா மாத்ரூ அரண்நிலைகளுக்குப் பின்வாங்கின. [[லிபியா|லிபிய]]-[[எகிப்து]] எல்லையிலிருந்து எகிப்து நாட்டுப்பகுதிக்குள் 100 கிமீ தொலைவில் இந்த அரண்கோடு அமைந்திருந்தது. முதலில் இந்த அரண்நிலையில் ரோம்மலின் படைகளை எதிர்கொள்ள நேச நாட்டுப் படைகள் திட்டமிட்டிருந்தனர். மெர்சா மாத்ரூவில் தாக்கும் படைகள் எளிதாக சுற்றி வளைத்து பாதுகாவல் படைகளை பக்கவாட்டில் இருந்து தாக்குவதற்கு வசதியாக புவியியல் அமைப்பு அமைந்திருந்தது. ரோம்மல் இத்தகைய சுற்றி வளைத்துத் தாக்கும் போர் உத்திகளை விரும்பி கையாள்பவராகையால், அவரது தாக்குதலில் இருந்து மெர்சா மாத்ரூவைப் பாதுகாக்க முடியாது என்று நேச நாட்டுத் தளபதிகள் உணர்ந்தனர். எனவே இந்த அரண்நிலையிலிருந்தும் பின்வாங்கி கிழக்கே 100 கிமீ தொலைவிலுள்ள எல்
[[File:WesternDesertBattle Area1941 en.svg|left|thumb|250px|மேற்குப் பாலைவனப் போர்முனை]]
அடுத்த இருபது நாட்கள் இரு தரப்பினரும் அலாமீனில் அமைந்துள்ள பல மணல் முகடுகளைக் கைப்பற்ற கடுமையாக மோதிக் கொண்டனர். டெல் எல் ஐசா, ருவைசாத், மித்தெயிர்யா ஆகிய முகடுகளைக் கைப்பற்ற மீண்டும் மீண்டும் பல சண்டைகள் நிகழ்ந்தன. இத்தொடர் மோதல்களால் ஜூலை இறுதியில் இரு தரப்பு படைப்பிரிவுகளும் பலத்த சேதங்களுக்கு ஆளாகி இருந்தன. பிரிட்டானிய 8வது [[ஆர்மி (படைப்பிரிவு)|ஆர்மி]]யும், ரோம்மலின் [[ஆப்பிரிக்கா கோர்|ஆப்பிரிக்கா கோரும்]] தொடர்ந்து சண்டையிட இயலாத அளவுக்கு பலவீனமடைந்திருந்தன. யாருக்கும் வெற்றி தோல்வியின்றி இச்சண்டை முடிவடைந்தாலும், [[அலெக்சாந்திரியா]] நோக்கியான ரோம்மலின் முன்னேற்றம் தடைபட்டுப் போனது. பிரிட்டானியத் தளபதி ஆச்சின்லெக்கின் மீது நம்பிக்கை இழந்த பிரிட்டானிய பிரதமர் [[வின்ஸ்டன் சர்ச்சில்]] அவருக்கு பதிலாக லெப்டினன்ட் ஜெனரல் வில்லியம் கோட் என்பவரை 8வது ஆர்மியின் தளபதியாக நியமித்தார். ஆனால் வடக்கு ஆப்பிரிக்காவுக்கு கோட் சென்ற வானூர்தி மீது ஜெர்மானிய வான்படை நடத்திய தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார். அவருக்கு பதிலாக [[பெர்னார்ட் மோண்ட்கோமரி]] புதிய பிரிட்டானிய தளபதியாக நியமிக்கப்பட்டார்.
|