கலிலேயக் கடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சேர்க்கை
பகுதி தலைப்புகள் நீளச் சுருக்கம்
வரிசை 56:
[[Image:Petri Fischzug Raffael.jpg|thumb|left|இயேசுவும் சீடர்களும்: கலிலேயக் கடலில் அதிசய மீன்பாடு. ஓவியர்: ரஃபயேல் (1483-1520). காப்பிடம்: இலண்டன்.]]
 
==இயேசுவின் பணியோடு இணைந்தஇயேசுவும் கலிலேயக் கடல்கடலும்==
 
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் [[இயேசு]] பணிசெய்த காலத்திலேயே கலிலேயக் கடல் மிகவும் பேர்போன இடமாக இருந்தது. ''கடலோர நெடுஞ்சாலை'' (Via Maris) என்னும் பெயர்கொண்ட வணிகப் பாதை அவ்வழியே சென்று, எகிப்து நாட்டையும் வடக்கு அரசுகளையும் இணைத்தது. அந்த ஏரிக்கரையில் உரோமையர் பல நகர்களை நிறுவினர். கதாரா (Gadara), ஹிப்போஸ்(Hippos), திபேரியாஸ் (Tiberias) என்னும் அந்நகரங்களில் வாணிகம் செழித்தது.
வரிசை 66:
கலிலேயக் கடலருகில் அமைந்த ஒரு மலையில்தான் இயேசு ஒரு நீண்ட சொற்பொழிவு ஆற்றியதாக [[மத்தேயு|மத்தேயு நற்செய்தியாளர்]] குறித்துள்ளார் (காண்க: [[மத்தேயு|மத்தேயு 5:1-7:28]]). இது ''மலைப் பொழிவு'' (Sermon on the Mount) என்னும் பெயரால் அழைக்கப்படுகிறது.
 
==இயேசுவின் வல்லமையால் ஏரியில் =அதிசய மீன்பாடு நிகழ்தல்புதுமை===
 
[[இயேசு]] தம் அதிசய வல்லமையைப் பயன்படுத்தி இருமுறை பெருமளவில் மீன்பாடு நிகழச் செய்தார் என்று [[நற்செய்தி|நூல்கள்]] கூறுகின்றன. முதல் [[இயேசுவின் புதுமைகள்|புதுமையை]] [[லூக்கா|லூக்காவும்]] இரண்டாம் புதுமையை [[யோவான்|யோவானும்]] குறித்துள்ளனர்.
வரிசை 76:
[[இயேசுவின் புதுமைகள்|அதிசய மீன்பாடு]] நிகழ்ந்தது இரு தடவை குறிப்பிடப்பட்டாலும் ஒரே நிகழ்ச்சியைத்தான் விவரிக்கின்றன என்று விவிலிய அறிஞர் கருதுகின்றனர். இயேசுவின் பணிக்காலத்தின் தொடக்கத்திலும் அவர் [[இயேசுவின் உயிர்த்தெழுதல்|உயிர்த்தெழுந்த]] பின்னும் இந்நிகழ்ச்சியைக் குறிப்பிடுவதன் வழியாக [[இயேசு]]விடம் கடவுளின் வல்லமை துலங்கியது என்றும், இயேசுவின் பணியை அவர்தம் சீடர்கள் தொடர்ந்து ஆற்றி, உலக மக்கள் எல்லாரையும் (''153 மீன்கள்'') கடவுளின் ஆட்சியில் கொண்டுசேர்க்க வேண்டும் என்றும் இயேசு அப்பொறுப்பைச் சீடர்களுக்கு அளித்தார் என்றும் [[புதிய ஏற்பாடு]] கூறுகின்றது. இதையே [[லூக்கா|லூக்காவும்]] [[யோவான்|யோவானும்]] வெவ்வேறு விதங்களில் பதிவுசெய்துள்ளதாகத் தெரிகிறது.
 
==கலிலேயக் கடலருகே இயேசு புரிந்த =பிற புதுமைகள்===
 
இயேசு கலிலேயக் கடல்மீது நடந்தார் என்னும் செய்தியை நற்செய்தியாளர் பதிவுசெய்துள்ளனர் (காண்க: [[மத்தேயு|மத்தேயு 14:26-33]], [[மாற்கு|மாற்கு 4:45-52]], [[யோவான்|யோவான் 6:16-21]]).
வரிசை 87:
கலிலேயக் கடலருகில் பாலைநிலத்தில் இயேசு ஐயாயிரம் பேருக்கு அதிசயமான விதத்தில் உணவளித்தார் என்னும் செய்தியையும் [[நற்செய்தி|நற்செய்தியில்]] காண்கின்றோம் (காண்க: [[மத்தேயு|மத்தேயு 14:13-21]], [[மாற்கு|மாற்கு 6:30-44]], [[லூக்கா|லூக்கா 9:10-17]], [[யோவான்|யோவான் 6:1-14]]).
 
==இயேசுவின் காலத்திற்குப் பிந்திய வரலாற்றில் கலிலேயக் கடல்வரலாறு==
 
கி.பி. 153இல் யூதர்கள் உரோமை ஆட்சியை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தபோது உரோமையர் எருசலேமைத் தாக்கினர். யூத சமய வழிபாடுகள் அங்கே தடைசெய்யப்பட்டன. எனவே, யூத மக்கள் எருசலேமை விட்டு கலிலேயப் பகுதிகளுக்குச் சென்றனர். இவ்வாறு கலிலேலயக் கடலும் கடற்பகுதியும், குறிப்பாக ''திபேரியாஸ்'' நகரும் முதன்மை பெறலாயின. அக்காலத்தில் யூத சமய இலக்கியங்கள் பல திபேரியாசில் உருவாக்கப்பட்டன.
"https://ta.wikipedia.org/wiki/கலிலேயக்_கடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது