'''தொண்டேசுவரம்''' என்பது [[இலங்கை]]யின் தெற்கில் [[தெவிநுவர]] எனும் பகுதியில் இருந்த ஒரு வரலாற்று சிறப்பு மிக்க சிவன் கோயிலாகும். இக்கோயில் [[போத்துக்கீசர்]] ஆட்சியின் போது போத்துக்கீசரால் உடைக்கப்பட்டதாக அறியமுடிகிறது. <ref>http://www.youtube.com/watch?v=Bswem8ecUr8&NR=1</ref>
'''தொண்டீசுவரம்''' (அல்லது ''தொண்டேஸ்வரம்'') [[இலங்கை|இலங்கையில்]] [[மாத்தறை]] மாவட்டத்தில் [[தேவேந்திரமுனை]]யில் அமைந்துள்ளது.
பஞ்சஈஸ்வரங்கள் (ஐந்து ஈஸ்வரங்கள்) என்று குறிப்பிடப்படும் ஐந்து சிவாலயங்களில் [[நகுலேஸ்வரம்]], [[திருக்கோணேஸ்வரம்]], [[திருக்கேதீஸ்வரம்]], [[முன்னேஸ்வரம்]] ஆகிய நான்கும் பல்வேறு இடர்பாடுகள் மத்தியில் இன்றும் சிவாலயங்களாகத் திகழ்கின்றன. அதேவேளை தெற்கிலிருந்த '''தொண்டீஸ்வரம்''' இலங்கையை ஆக்கிரமித்த போத்துக்கீசியரால் சிதைவடைக்கப்பட்ட பின்னர் இன்று [[விஷ்ணு]] கோயிலாக மாற்றப்பட்டு தென்னிலங்கையிலுள்ள பிரசித்திபெற்ற விஷ்ணு ஆலயமாகவிளங்குகின்றது. அழிக்கப்பட்ட ஆலயத்தை அவ்விடத்தைச் சேர்ந்த சிங்கள பௌத்த மக்கள் விஷ்ணு ஆலயமாக மாற்றியுள்ளனர்.