அந்தியோக்கியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி திருத்தம்
சி சேர்க்கை
வரிசை 1:
{{underconstruction}}
'''அந்தியோக்கியா''' (''Antioch'') என்னும் பழங்கால நகர் இன்றைய துருக்கி நாட்டின் தென் கிழக்குப் பகுதியில், சிரியாவின் வடகிழக்கு எல்லையிலிருந்து 12 மைல் தொலையில் அமைந்த நகரம் ஆகும்<ref>[http://en.wikipedia.org/wiki/Antioch அந்தியோக்கியா]</ref>. இந்நகருக்கு மேற்குப்பக்கத்தில் ஒரோண்டெஸ் (Orontes) என்னும் பேராறு ஓடுவதால் அதற்கு "ஒரோண்டெஸ் அருகில் அமைந்த அந்தியோக்கியா" (Antioch on the Orontes) என்னும் பெயரும் உண்டு.
 
பிற மொழிகளில் இந்நகரத்தின் பெயர்: கிரேக்கம்: Ἀντιόχεια ἡ ἐπὶ Δάφνῃ, Ἀντιόχεια ἡ ἐπὶ Ὀρόντου அல்லது Ἀντιόχεια ἡ Μεγάλη; இலத்தீன்: Antiochia ad Orontem; அரபி: انطاکیه (Antakya).
 
பழைய நகரான அந்தியோக்கியா புது நகரான "அந்தாக்கியா" (Antakya) அருகே துருக்கியில்இன்றைய துருக்கி நாட்டில் அமைந்துள்ளது.
 
==அந்தியோக்கியா உருவான வரலாறு==
வரி 36 ⟶ 35:
 
கான்ஸ்தாந்திநோபுள் நகரம் வளர்ந்து, [[எருசலேம்]] முது ஆயர் மையமாக மாறியபோது அந்தியோக்கியாவின் முதன்மை மங்கலாயிற்று. மேலும் கிறித்தவத்துக்குப் புறம்பான கொள்கைகள் அந்தியோக்கிய சபையில் நுழைந்ததும் அதன் வீழ்ச்சிக்குக் காரணமாயிற்று. ஆயினும் கி.பி. 4-5 நூற்றாண்டுகளில் அந்தியோக்கியா கிறித்தவ விவிலிய ஆய்வுக்குப் பெரும் உந்துதல் அளித்தது.
 
உரோமைப் பேரரசன் ஜூலியன் கி.பி. 362இல் அந்தியோக்கியாவுக்கு வருகை தந்த சமயத்தில் ஒரு புலம்பல் விழா நடந்துகொண்டிருந்தது. அதை ஜூலியன் விரும்பவில்லை. அதுபோலவே கிறித்தவர்களும் ஜுலியன் தங்களுக்கு எதிராகச் செயல்பட்டதாக உணர்ந்தார்கள். யூதர்களின் சமயச் சடங்குகள் மற்றும் புராதன சமயச் சடங்குகள் ஆகியவற்றை ஆதரித்த ஜூலியன் அந்தியோக்கியாவில் இருந்த கிறித்தவப் பெருங்கோவிலை மூடியது கிறித்தவர் நடுவே பெரும் எதிர்ப்பைக் கிளப்பியது. இது தவிர, ஜூலியனின் இராணுவத்தினர் கோவிலில் பலிகொடுக்கப்பட்ட விலங்குகளின் இறைச்சியை உண்டு, மதுவருந்தி நகரத் தெருக்களில் தொந்தரவு கொடுத்தனர்; அதே நேரத்தில் நகர மக்கள் பசியால் வாடினர். எனவே மக்கள் ஜூலியனை வெறுத்தனர். அவரது தாடி பற்றிக் கேலிச் சித்திரங்களும் வெளியாயின.
 
526இல் நிகழ்ந்த பயங்கர நிலநடுக்கத்தின்போது அந்தியோக்கியாவும் அதன் துறைமுக நகரான செலூக்கியாவும் பெரும் அழிவைச் சந்தித்தன. முதலாம் ஜஸ்டீனியன் மன்னன் அந்தியோக்கியாவுக்குக் "கடவுளின் நகர்" என்று பொருள்படும் "தியோப்பொலிஸ்" (Theopolis) என்னும் பெயரைக் கொடுத்தார். அவர் காலத்தில் பல கட்டடங்கள் சீரமைக்கப்பட்டன. கி.பி. 531இலிருந்து 579 வரை ஆட்சிசெய்த முதலாம் கொஸ்ரோ (Khosrau I) அந்தியோக்கியாவைத் தாக்கியதோடு அங்கு சுமார் 3 இலட்சம் மக்களைக் கொன்றார். அந்தியோக்கியாவின் புகழும் மங்கத் தொடங்கியது.
{{விவிலிய இடங்கள்}}
 
==அந்தியோக்கியாவில் கிறித்தவ இறையியல் வளர்ச்சி==
 
கிறித்தவ இறையிலுக்கு அந்தியோக்கியா அளித்த பங்கு சிறப்பானது. விவிலியத்தை வாசித்து விளக்குவதற்கு அந்தியோக்கிய அறிஞர்கள் "சொல் பொருள் விளக்கம்" (literal interpretation) என்னும் முறையைக் கடைப்பிடித்தனர். அதே சமயம் அலக்சாந்திரிய அறிஞர்கள் "உருவக விளக்கம்" (allegorical interpretation) என்னும் முறையைக் கையாண்டனர். அந்தியோக்கிய இறையியலாருள் தர்சு நகர் தியொதோர் (இறப்பு: கி.மி. சுமார் 390) என்பவரும் மொப்சுவேத்சிய தியொதோர் (கி.பி. சுமார் 350-428)என்பவரும் குறிப்பிடத்தக்கோர் ஆவர். அந்தியோக்கியாவில் புனித சீமோன் என்பவருக்கு வணக்கம் செலுத்தப்பட்டது. அவர் தவ வாழ்க்கை மேற்கொண்டார்; அந்தியோக்கியாவிலிருந்து 60 கி.மீ. தொலயில் ஒரு தூண் உச்சியில் 40 ஆண்டுகள் தனியாக வாழ்ந்து தவம் செய்தார். அவரது இறப்புக்குப் பின் அவர்தம் உடல் அந்தியோக்கியாவுக்குக் கொண்டுவரப்பட்டு, பேரரசர் லியோ ஏற்பாடு செய்த ஒரு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது.
 
==ஆதாரங்கள்==
{{reflist}}
[[பகுப்பு:விவிலிய இடங்கள்]]
[[en:Antioch]]
"https://ta.wikipedia.org/wiki/அந்தியோக்கியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது