சித்ரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 19:
[[திருவனந்தபுரம்|திருவனந்தபுரத்தில்]]
சித்ரா என்றாலே அவரது புன்னகை சிந்தும் முகமே ரசிகர்களின் கண் முன் தோன்றுகிறது. வாடாத மலரைப் போன்று மாறாத புன்னகை அவரின் தனித்த முத்திரையாகì காண்பவரை வசீகரிக்கிறது. குழந்தை சித்ரா வானொலியில் [[ஒலி|ஒலிபரப்பட்ட]] [[பி.சுசீலா]] அம்மாவின் 'பிரியதமா பிரியதமா' என்ற பாடலைத் தன் பட்டு உதடுகளை அசைத்துப் பாட முயற்சித்த பொழுதே அவருடைய எதிர் காலம் [[இசை]] என்று எழுதப்பட்டு விட்டதாகத் தோன்றுகிறது.
வரிசை 28:
பள்ளியில் பயின்ற நாட்களிலும் கையில் புத்தகத்துடன் தேர்விற்குô படிக்கும் வேளையிலும அவருடைய கவனம் படிப்பின் பால் செல்லாமல் பக்கத்து கோவிலிருந்து ஒலிக்கும் பாடலின் ஸ்வரங்களிலேயே லயித்து வந்தது. இதை கண்ட அவர் தந்தையார் தம் மகள் சார்பாக National Talent Search Scholarship க்கு பதிவு செய்தார். நேர்முகத் தேர்வுக்குî சென்றபொழுது இரண்டு வருடம் சங்கீதம் கற்றிருக்க வேண்டும் என்று குழுவினர் வலியுறுத்தியபோதும் பதிமூன்று வயது சித்ரா தோடி ராகத்தின் சிக்கலான ஸ்வரங்களை நிரவல் செய்து தம் தகுதியை நிரூபித்து ஏழு வருட scholarship ஐப் பெற்றார். பின்னர் இசை பட்டப்படிப்பில் பல்கலைக் கழகத்தில் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றார்.
== திரைப்பட அறிமுகம் ==
வரிசை 37:
== இளையராஜா அறிமுகம் ==
▲1985 ஆம் ஆண்டில் இளையராஜாவின் இசையமைப்பில் சித்ரா பாடிய பல பாடல்கள் ('[[கீதாஞ்சலி]] ' திரைப்படத்தில் ' துள்ளி எழுந்தது பாட்டு சின்னக்குயிலிசை கேட்டு' , வைரமுத்துவின் 'ஒரு ஜீவன் அழைத்தது ') சித்ராவின் இனிய குரலில் உயிர் பெற்றெழுந்தன. தமிழ் சேவையால் சூட்டப்பட்ட '[[சின்னக்குயில்]] சித்ரா' என்ற பெயர் நிலைத்தது. அறிமுகப்படுத்தப்பட்ட அதே ஆண்டு ரசிகர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட 'நானொரு சிந்து காவடிச்சிந்து' , 'பாடறியேன் படிப்பறியேன்' போன்ற பாடல்களை சிந்து பைரவியில் மிகச் சிறப்பாகப் பாடி [[தேசிய விருதைப்]] பெற்றார். தன்னுள் ஒளிந்திருந்த திறமையை உலகிற்கு வெளிக்கொணர்ந்து புடமிட்ட பொன்னாக ஒளிரச் செய்ததில் தான் திரு.இளையராஜா அவர்களுக்கு பெரிதும் கடமைப் பட்டிருப்பதாக சித்ரா அவர்கள் கூறுகிறார்.
அடுத்து 1985-1986ஆம் ஆண்டில் இளையராஜாவின் இசையமைப்பில் சித்ரா பாடிய பல பாடல்கள் பல்சுவையாக சுவைக்கக் கிடைத்தன. இதைத் தொடர்ந்து. இசையமைப்பாளர்கள் பலரும் தம் பாடல்களுக்கு உயிரூட்ட சித்ராவின் குரலைப் பயன் படுத்தி தீஞ்சுவை விருந்தை படைக்கத் துவங்கினார்கள். சித்ராவுடன் தமிழில் முதலில் பாடிய திரு.[[கங்கை அமரன்]], மெல்லிசை மன்னர் [[விஸ்வநாதன்]], ஷங்கர் - கணேஷ் ஆகியோர் இசையமைப்பிலும் அநேக பாடல்கள் பாடியிருக்கிறார் சித்ரா
வரி 44 ⟶ 43:
== மற்ற இசையமைப்பாளர் அறிமுகம் ==
எண்பதுகளின் பிற்பகுதியில் திரு.சந்திரபோஸின் இசைக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு இருந்தது. அவருடைய இசையமைப்பில் திருமதி.சித்ராவிற்கு 'மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு', சின்னக்கண்ணா செல்லக்கண்ணா, 'பூ முடிக்கணும் ', 'வண்ணாத்திப்பூச்சி வயசென்னாச்சு போன்ற அரிய பாடல்களைப் பாடும் வாய்ப்புகள் கிடைத்தன.
8WEYIWY WUYDUYHDIIEUER
மேலும் வி.குமாரின் இசையமைப்பில் திரு எஸ்.பி.பியுடன் இணைந்து 'பட்டுப்பூச்சி பட்டுப்பூச்சி பூவெல்லாம் ' பாடிய சித்ரா அவர்கள் [[குன்னக்குடி வைத்யநாதனின்]] 'உலா வந்த நிலா ' திரைப்படத்தில் சில அரிய பாடல்களையும், [[டி.ராஜேந்திரனின்]] இசையில் சில' பாடல்களையும் பாடி அசத்தினார்.
|