யாழ்ப்பாணக் கோட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''யாழ்ப்பாணக் கோட்டை''' யாழ்ப்பாண நகருக்கு அண்மையில் பண்ணைப் பாலத்தருகே சிதைவடைந்த நிலையில் காணப்படும் கோட்டையாகும்.
'''யாழ்ப்பாணக் கோட்டை''' யாழ்ப்பாண நகருக்கு அண்மையில் பண்ணைப் பாலத்தருகே சிதைவடைந்த நிலையில் காணப்படும் கோட்டையாகும். [[யாழ்ப்பாண அரசு]] [[1619]] இல் [[போர்த்துக்கல்|போத்துக்கீசரின்]] நேரடி ஆட்சியின் கீழ் வந்ததும், தலைநகரத்தை [[நல்லூர்|நல்லூரி]]லிருந்து அவர்கள் [[யாழ்ப்பாண நகரம்|யாழ்ப்பாண]]த்துக்கு மாற்றினர். அங்கே யாழ்ப்பாணக் குடாக்கடலை அண்டி ஒரு [[கோட்டை]]யையும் கட்டினார்கள். 1619 [[ஆகஸ்ட்]] மாதத்தில் பாதுகாப்புக்காகக் கோட்டையொன்றைக் கட்டிக்கொள்ள [[கோவா]]விலிருந்த தலைமையகத்திலிருந்து [[பிலிப்பே டி ஒலிவேரா]]வுக்கு அனுமதி கிடைத்திருந்தது எனினும் பொருத்தமான இடமொன்றைத் தெரிவுசெய்து கோட்டையின் கட்டிடவேலை [[1625]] ஆம் ஆண்டிலேயே ஆரம்பமானது. [[1629]]இல் இது உபயோகத்திலிருந்ததெனினும், [[1637]]இல் கூட இது முற்றாகக் கட்டிமுடிக்கப்படவில்லையென்றே தெரிகிறது. இது கிட்டத்தட்டச் சதுர வடிவமானது. நான்கு மூலைகளிலும் அமைந்த காவலரண்களுடன், ஒவ்வொரு பக்கச் சுவர்களின் மத்தியிலும் அரைவட்ட வடிவிலமைந்த அரண்களும் இருந்தன. கோட்டைக்குள்ளே [[கத்தோலிக்கம்|கத்தோலிக்க]]த் தேவாலயமொன்றும், கப்டன் மேஜரின் வீடும், [[வைத்தியசாலை]]யொன்றும் மேலும் சில முக்கியமான கட்டிடங்களும் இருந்தன. போத்துக்கீசரின் [[யாழ்ப்பாண நகரம்]] கோட்டைக்கு வெளியிலேயே இருந்தது.
 
 
==போத்துக்கீசர் காலம்==
'''யாழ்ப்பாணக் கோட்டை''' யாழ்ப்பாண நகருக்கு அண்மையில் பண்ணைப் பாலத்தருகே சிதைவடைந்த நிலையில் காணப்படும் கோட்டையாகும். [[யாழ்ப்பாண அரசு]] [[1619]] இல் [[போர்த்துக்கல்|போத்துக்கீசரின்]] நேரடி ஆட்சியின் கீழ் வந்ததும், தலைநகரத்தை [[நல்லூர்|நல்லூரி]]லிருந்து அவர்கள் [[யாழ்ப்பாண நகரம்|யாழ்ப்பாண]]த்துக்கு மாற்றினர். அங்கே யாழ்ப்பாணக் குடாக்கடலை அண்டி ஒரு [[கோட்டை]]யையும் கட்டினார்கள். 1619 [[ஆகஸ்ட்]] மாதத்தில் பாதுகாப்புக்காகக் கோட்டையொன்றைக் கட்டிக்கொள்ள [[கோவா]]விலிருந்த தலைமையகத்திலிருந்து [[பிலிப்பே டி ஒலிவேரா]]வுக்கு அனுமதி கிடைத்திருந்தது எனினும் பொருத்தமான இடமொன்றைத் தெரிவுசெய்து கோட்டையின் கட்டிடவேலை [[1625]] ஆம் ஆண்டிலேயே ஆரம்பமானது. [[1629]]இல் இது உபயோகத்திலிருந்ததெனினும், [[1637]]இல் கூட இது முற்றாகக் கட்டிமுடிக்கப்படவில்லையென்றே தெரிகிறது. இது கிட்டத்தட்டச் சதுர வடிவமானது. நான்கு மூலைகளிலும் அமைந்த காவலரண்களுடன், ஒவ்வொரு பக்கச் சுவர்களின் மத்தியிலும் அரைவட்ட வடிவிலமைந்த அரண்களும் இருந்தன. கோட்டைக்குள்ளே [[கத்தோலிக்கம்|கத்தோலிக்க]]த் தேவாலயமொன்றும், கப்டன் மேஜரின் வீடும், [[வைத்தியசாலை]]யொன்றும் மேலும் சில முக்கியமான கட்டிடங்களும் இருந்தன. போத்துக்கீசரின் [[யாழ்ப்பாண நகரம்]] கோட்டைக்கு வெளியிலேயே இருந்தது.
 
==ஒல்லாந்தர் காலம்==
யாழ்ப்பாணத்தை [[ஒல்லாந்தர்]] [[1658]] [[ஜூன் 22]]இல் கைப்பற்றிய அடுத்த நாள் [[ஜூன் 23]] 1658இல், மேற்படி கோட்டையை அவர்கள் கைப்பற்றி அதனை இடித்துவிட்டு ஐங்கோண வடிவிலமைந்த புதிய கோட்டையைக் கட்டினார்கள்.
 
==தற்காலம்==
[[1984]]-[[1987]] காலப்பகுதியில் [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தின்]] பெரும்பகுதி தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோதும், யாழ்ப்பாணக் கோட்டை [[இலங்கை இராணுவம்|இராணுவத்தின்]] வசமே இருந்து வந்தது. [[1989]] ஆம் ஆண்டில் [[இந்திய அமைதிகாக்கும் படை]] யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேறிய பின்னர் கோட்டையை முற்றுகையிட்ட [[தமிழீழ விடுதலைப் புலிகள்|புலிகள்]] பல மாதங்களின்பின் அதனைக் கைப்பற்றிக்கொண்டனர். கைப்பற்றிய சிறிது காலத்தில் மீண்டும் இவ்வாறான நிகழ்வைத் தடுக்க கோட்டையின் பெரும்பகுதி புலிகளின் ஆலோசனையின் கீழ் அழிக்கப்பட்டது. [[1995]] ல் யாழ்ப்பாணத்தை இலங்கை இராணுவம் மீண்டும் கைப்பற்றியபோது இக்கோட்டையின் எச்சங்கள் இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசத்தினுள் வந்தன.
 
"https://ta.wikipedia.org/wiki/யாழ்ப்பாணக்_கோட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது