அலிய ராம ராயன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 13:
இவனுடைய ஆட்சிக் காலத்தில் தக்காணத்துச் சுல்தான்கள் தங்களிடையே சண்டையில் ஈடுபட்டிருந்தனர். ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகளில் இவர்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ராம ராயனை நடுவராக அழைத்ததும் உண்டு. இச் சுல்தான்களின் ஒற்றுமை இன்மையைப் பயன்படுத்தி, [[கிருஷ்ணா ஆறு|கிருஷ்ணா ஆற்றுக்கு]] வடக்கேயும் பேரரசை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்பு ராமராயனுக்குக் கிடைத்தது. சில அறிஞர்கள், சுல்தானகங்களின் அலுவல்களில் அளவு மீறித் தலையிட்டதாக ராமராயனை விமர்சிப்பது உண்டு. எனினும், சுல்தான்கள் ஒருவரைவிட இன்னொருவர் வளர்ச்சியடையாமல் பார்த்துக் கொண்டது மூலம், விஜயநகரத்துக்கு அவர்களால் ஆபத்து ஏற்படாதபடி செய்தான் என்றும், விஜயநகரத்தின் பெருமையைக் கட்டிக் காப்பதற்குத் தன்னாலியன்ற அனைத்தையும் ராம ராயன் செய்தானென்றும் முனைவர் பி. பி தேசாய் போன்ற வேறு சிலர் வாதிடுகின்றனர்.
 
==தலிக்கோட்டாப்தலைக்கோட்டைப் போர்==
ராம ராயன், கடைசி வரையில், ஆட்சியிலிருந்த அரச மரபினருக்கு விசுவாசமாகவே நடந்து கொண்டான் எனப்படுகின்றது. 1565 ஆம் ஆண்டில், பேரரசின் முக்கிய தளபதி என்ற வகையில் தக்காணத்துச் சுல்தான்களான [[ஹுசேன் நிசாம் ஷா]], [[அலி ஆதில் ஷா]], [[இப்ராகிம் குதுப் ஷா]] ஆகியோரின் கூட்டுப் படைகளின் ஆக்கிரமிப்புக்கு எதிராகத் [[தலிக்கோட்டாப்தலைக்கோட்டைப் போர்|தலிக்கோட்டாப்தலைக்கோட்டைப் போரில்]] தானே தலைமை தாங்கினான். மிகப் பெரிய படை பலத்தைக் கொண்ட விஜயநகரப் பேரரசுக்கு இலகுவாக வெற்றி கிடைக்கும்போல் தோற்றிய இப் போர், எதிர்பாராத விதமாக, [[அலிய ராம ராயன்|ராம ராயன்]] பிடிபட்டுக் கொல்லப்பட்டபோது, அவர்களுக்குப் பேரழிவாக முடிந்தது. இந்தத் தாக்கத்திலிருந்து [[விஜயநகரப் பேரரசு]] ஒருபோதும் மீளவே இல்லை. [[விஜயநகரம்]] எதிரிப் படைகளினால் பெரும் அழிவுக்குள்ளானது. நகர மக்கள் பெருமளவில் கொல்லப்பட்டனர். அரச குடும்பத்தினரும் அழிக்கப்பட்டனர்.
 
==அரவிடு மரபிடம் ஆட்சியுரிமை==
"https://ta.wikipedia.org/wiki/அலிய_ராம_ராயன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது