வார்ப்புரு:Shortcut: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
76.28.186.133 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 586459 இல்லாது செய்யப்பட்டது
No edit summary
வரிசை 1:
<table class="noprint Template-Shortcut" style="border:1px solid #999; background:#fff; margin: .3em .3em .3em 1em; padding:3px; float:right"><th class="noprint" align="center" valign="top"><small>[[விக்கிபீடியா:குறுக்கு வழி|குறுக்கு வழி{{#if:{{{2|}}}|கள்}}]]:<br />{{#ifexist:{{{1|}}}|[[{{{1}}}]]|{{{1|}}} }}{{#if:{{{2|}}}|<br />[[{{{2}}}]]}}{{#if:{{{3|}}}|<br />[[{{{3}}}]]}}{{#if:{{{4|}}}|<br />[[{{{4}}}]]}}{{#if:{{{5|}}}|<br />[[{{{5}}}]]}}</small></th></table>
'''சற்றம் இல்ல விதி - The Chatham House Rule'''
 
„கருத்தரங்கம் ஒன்று அல்லது அதன் ஒரு பகுதி " சற்றம் இல்ல விதிமுறையில் " நடைபெறும் என்று அறிவிக்கப்படும்போது, அக் கருத்தரங்கில் பங்குகொள்ளும் ஒருவர் மேற்படி கருத்தரங்கில் கருத்துரை வழங்கும் பேச்சாளரினதோ அல்லது அக் கருத்தரங்கில் பங்குகொள்ளும் ஏனையவர்களினதோ பெயர், அவர் சார்ந்த அமைப்பு போன்ற அடையாளங்கள் எவற்றையும் குறிப்பிடாமல் அக் கருத்தரங்கில் தாம் பெறும் தகவல்களை சுதந்திரமாகப் பயன் படுத்தலாம்.”
 
மேலதிக விளக்கங்கள்:
 
கருத்தரங்கொன்றில் பரிமாறப்படும் கருத்துக்கள் பற்றிய செய்தி அறிவிப்பில் " சற்றம் இல்ல விதிமுறை " கடைப்பிடிக்கப்படுவது மிகச் சாதாரணமானது. கருத்தரங்கொன்றில் வெளிப்படுத்தப்பட்ட செய்திகள் புகழ்பெற்ற இவ் விதிக்கமைவாக ஊடகங்களில் பரம்பலடைவது ஒருவர் தனது கருத்தை வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்வதை நோக்கமாகக் கொண்டதுடன் அவ்வாறான கருத்துப் பரிமாற்றத்தினை துணிச்சலாக முன்வைப்பதை ஊக்குவிக்கின்றது. இன்று உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படும் இவ் விதி சுதந்திரமான , பகிரங்கமான கருத்துப் பரிமாற்றத்திற்கும் பேச்சாளரின் அடையாளங் காட்டமைக்கும் வழிசமைக்கின்றது.
 
இவ் விதி பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்:
 
கேள்வி: இவ் விதி கடைப்பிடிக்கப்படுவதால் ஏற்படும் நன்மைகள் எவை?
 
பதில்: மனிதர்கள் தமது கருத்துக்களை வெளிப்படையாகக் கூறமுடிகிறது. தமது கருத்து வெளியில் பகிரங்கமாகச் சொல்லப்படும் என்று தெரிந்தால், சொல்லாதிருப்பதே மேல் என்று நினைப்பவர்களும் தாம் கருதுவதை வெளிப்படையாகப் பேசுவதற்கும் " சற்றம் இல்ல விதிமுறை" துணை செய்கின்றது. அன்றியும் அங்கீகாரத்திற்கோ அல்லது உறுதிப்படுத்தலுக்கோ அவசியமின்றி, பகிரப்பட்ட ஆலோசனைகள், கருத்துக்கள் , பரிந்துரைகள் விரும்பியவர்களால் உடனடியாகவே எடுத்துக் கொள்ளப்படலாம்: மேலும் பரிசீலிக்கப்படலாம்.
 
கேள்வி: இவ் விதிமுறையின் கீழ் நடைபெறும் கருத்தரங்கொன்றில் பேச்சாளரின் பெயர் பகிரங்கமாக அறிவிக்கபடலாமா?
 
பதில்: ஆம், கருத்தரங்கில் சொல்லப்பட்ட விடயம் அப் பேச்சாளருக்குப் பிறிதொரு காலத்தில் ஆபத்தாக வந்துவிடப்போவதில்லை என்பதை உறுதிசெய்வது என்ற இவ் விதியின் ஆத்மவுள்ளடக்கத்தினைப் புரிந்துகொண்டிருப்பது மிகமுக்கியம் என்றாலும், பேச்சாளரின் பெயர் கருத்தரங்கில் பிரஸ்தாபிக்கப்படலாம்.உதாரணமாக ஒரு நிகழ்வில் கருத்துரை வழங்கவிருக்கு பேச்சாளரின் பெயர் பிரச்சார நோக்கத்திற்காகப் பகிரங்கமாக அறிவிக்கப்படலாம். அதன்பின்னர் கருத்தரங்கில் விவாதிக்கப்பட்ட கருத்துக்களின் சுருக்கமான தொகுப்புரை வழங்கப்படலாம். ஆனால் அச் சுருக்கத் தொகுப்புரை யார் என்ன சொன்னார்கள் என்ற விபரங்களை வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ கொண்டிருக்கக்கூடாது.
 
கேள்வி: ஊடக அறிவிப்புக்கள் " சற்றம் இல்ல விதிமுறை" யின் கீழ் நடைபெற வேண்டும் என்று அறிவிக்கப்பட கருத்தரங்கின் செய்திஅறிக்கையினை face book, twitter போன்ற இணைய சமூக வலைபின்னல்களில் நான் வெளியிடலாமா?
 
பதில்: face book, twitter போன்ற இணைய சமூக வலைபின்னல்களில் தாரளமாக செய்திஅறிக்கை வெளியிடப்படலாம். ஆனால் கருத்தரங்கில் சொல்லப்பட்ட விடயங்களைக் கொண்டிருக்கவேண்டுமே தவிர கருத்துரை வழங்கிய பேச்சாளர்களின் பெயர்களையோ அல்லது கலந்து கொண்டவர்களின் பெயர்களையோ அவ்வறிக்கை நேரடியாகவோ மறைமுகமாகவோ கொண்டிருக்கக்கூடாது.
 
கேள்வி: சற்றம் இல்ல விதி யாரால் எங்கே அதிகம் கடைப்பிடிக்கப்படுகின்றது?
 
பதில்: சர்வதேச ரீதியாக இது எல்லாவகைக் கருத்தரங்குகளிலும் தனிமனிதர்களாலும் நிறுவனங்களாலும் கடைப்பிடிக்கப்பபடுகின்றது, அரச, நிர்வாக, சமூக, தொழில்துறைசார்ந்த , பல்கலைக்கழக, ஊடக, புத்திஜீவித மற்றும் பல அமைப்புக்களால் இவ்விதி பெருமளவில் கடைப்பிடிக்கப்படுகின்றது. தகவல் தொழிநுட்ப மற்றும் கருத்துப் பரிவர்த்தனை உலகில் இவ்விதி மிகவும் அவசியமானதாகக் கருதப்படுகின்றது.
 
கேள்வி: கருத்தரங்கில் பங்கேற்பவர்களின் பெயர்ப்பட்டியல் பொதுவில் வெளியிடப்படலாமா?
 
பதில்: கருத்தரங்கில் பங்கேற்பவர்களுக்கிடையில் மட்டுமே மேற்படி பட்டியல் பரவலடையலாம். அதற்கப்பால் விநியோகிக்கப்படுவதில்லை.
 
கேள்வி: இவ் விதி எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றது?
 
பதில்: சற்றம் இல்ல விதி என்பது ஒரு பண்பாகவே கடைபிடிக்கப்படுகின்றது.
 
கருத்தரங்கில் பங்கேற்கும் தனிநபர் ஒருவர் இவ்விதியை மீறி நடந்தால் எதிர்காலத்தில் ஒழுங்குசெய்யப்படும் இது போன்ற கருத்தரங்கங்களுக்கு அவரை அழைக்காது விடலாம்.
 
கேள்வி: சற்றம் இல்ல விதி மாற்றப்படக்கூட்டாத ஒன்றாக இருந்து வருகின்றதா அல்லது காலத்திற்கு ஏற்ற வகையில் இது மாற்றப்பட்டிருகின்றதா?
 
பதில்: சற்றம் இல்ல விதி முதலில் 1927ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. பின்னர் 1992, 2002 ஆகிய ஆண்டுகளில் மீள்வரைவு செய்யப்பட்டுள்ளது.
 
கேள்வி: பெரிய பிரித்தானியாவில் இருக்கும் சற்றம் இல்லத்தில் நடைபெறும் கருத்தரங்குகள், கூட்டங்கள் அனைத்திலும் இந்த விதி கடைபிடிக்கப்படுகின்றதா?
 
பதில்: சற்றம் இல்லத்தில் நடைபெறும் அதிகமான கருத்தரங்குகள், கூட்டங்களில் இவ்விதி கடைப்பிடிக்கப்படுகின்றது. முக்கியமாக ஆய்வாளர்களின் சந்திப்பு மற்றும் அரசியல் ரீதியில் மிகவும் எளிதில் எரிச்சலூட்டக்கூடிய, மென்னுணர்வான, பிறர் மனதைக் காயப்படுத்தக்கூடிய விடயங்கள் பேசப்படும் கருத்தரங்குகள், கூட்டங்கள் போன்றவற்றில் இவ்விதி கடைப்பிடிக்கப்படுகின்றது.
 
கேள்வி: நடைபெறுகின்ற கருத்தரங்கு அல்லது கூட்டம் சற்றம் இல்ல விதிமுறையில் நடத்தப்படுகின்றது என்று அறிவிக்கப்பட்டால் மட்டுமே அதில் கலந்து கொள்ளும் தனிநபர் ஒருவர் இவ்விதியைக் கடைப்பிடிக்கப்பட வேண்டுமா?
 
பதில்: கருத்தரங்கு, கூட்டம் போன்றவை சற்றம் இல்ல விதிமுறையில் நடத்தப்படுகின்றது என்று அறிவிக்கப்படின் அதில் கலந்து கொள்ளும் தனிநபர் ஒருவர் இவ்விதியை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறு அறிவிக்கப்படாமல் நடைபெறும் கருத்தரங்கு, கூட்டம் போன்றவற்றில் கலந்து கொள்ளும் ஒருவர் அவைபற்றிய சுய மதிப்பீட்டில் இவ்விதியினை கடைப்பிடிப்பது மிகவும் வரவேற்கத்தக்கது.
"https://ta.wikipedia.org/wiki/வார்ப்புரு:Shortcut" இலிருந்து மீள்விக்கப்பட்டது