பிரெட்டன் வுட்சு முறைமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தி
சி தி
வரிசை 3:
[[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போர்]] நடந்து கொண்டிருக்கும்போதே பன்னாட்டு பொருளாதார அமைப்புகளை வலுப்படுத்தி மீளமைக்க 44 [[நேச நாடுகள்|நேச நாடுகளைச்]] சேர்ந்த 730 பேராளர்கள் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்காவின்]] [[நியூ ஹாம்சயர்|நியூ ஹாம்சயரில்]] பிரெட்டன் வுட்சு நகரிலுள்ள மவுண்ட் வாஷிங்டன் தங்குவிடுதியில் ஐக்கிய நாடுகள் செலாவணி மற்றும் நிதி மாநாட்டில் பங்கேற்று உரையாடினர். 1944ஆம் ஆண்டு சூலை மாதத்தின் முதல் மூன்று வாரங்களில் இவர்களின் கலந்துரையாடலின் பயனாக கையெழுத்தானதே பிரெட்டன் வுட்சு உடன்பாடுகள்.
 
பன்னாட்டுச் செலாவணி அமைப்பை கட்டுப்படுத்த வேண்டிய விதிகள், அமைப்புகள் மற்றும் செயல்முறைகளை நிறுவிட பிரெட்டன் வுட்சு திட்டவியலாளர்கள், தற்போது [[உலக வங்கிவங்கிக் குழுமம்|உலக வங்கிக் குழுமத்தின்]] அங்கங்களாக உள்ள, [[பன்னாட்டு நாணய நிதியம்]] (IMF) மற்றும் [[பன்னாட்டு புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கி]] (IBRD) ஆகியவறை உருவாக்கினர். இவை தேவையான அளவில் நாடுகள் ஏற்புறுதி வழங்கிபின் 1945ஆம் ஆண்டிலிருந்து செயலாற்றத் தொடங்கின.
 
பிரெட்டன் வுட்சு முறைமையின் முதன்மை சிறப்புக்கூறுகளாக ஒவ்வொரு உடன்பட்ட நாடும் தங்கள் [[நாணயக் கொள்கை]]யை [[ஐக்கிய அமெரிக்க டாலர்|டாலருடன்]] இணைத்த நாணய மாற்று வீதம் இருக்குமாறு அமைத்துக் கொள்வதை கட்டாயமாக்குவதும் பன்னாட்டு நாணய நிதியம் தற்காலிக [[வரவுச்செலவு சமநிலை|கையிருப்புத் துண்டை]] சரிசெய்ய கடன் தருவதுமாகும்.
"https://ta.wikipedia.org/wiki/பிரெட்டன்_வுட்சு_முறைமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது