இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சேர்க்கை
சி சேர்க்கை
வரிசை 60:
 
[[இருபத்திமூன்றாம் யோவான் (திருத்தந்தை)|திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான்]] கூட்டிய இச்சங்கத்தில் பங்கேற்ற நால்வர் பிற்காலத்தில் திருத்தந்தையராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களது பெயர்கள் வருமாறு:
*[[ஆறாம் பவுல் (திருத்தந்தை)|ஆறாம் பவுல்]] (ஆட்சி: 1963-1978]]) - (முன்னாளில் கர்தினால் ஜோவான்னி பத்தீஸ்தா மொந்தீனி)
*[[முதலாம் யோவான் பவுல் (திருத்தந்தை)|முதலாம் யோவான் பவுல்]] (ஆட்சி: 1978]]) - (முன்னாளில் ஆயர் அல்பீனோ லூச்சியானி)
*[[இரண்டாம் யோவான் பவுல் (திருத்தந்தை)|இரண்டாம் யோவான் பவுல்]] (ஆட்சி: 1978-2004]]) - (முன்னாளில் ஆயர் கரோல் வொய்த்தீவா)
*[[பதினாறாம் பெனடிக்ட் (திருத்தந்தை)|பதினாறாம் பெனடிக்ட்]] [[(ஆட்சி: 2004- ]]) - (முன்னாளில் இறையியல் ஆலோசராகப் பங்கேற்ற அருள்திரு யோசப் ராட்சிங்கர்)
 
==திருச்சபை வாழ்வில் ''பொதுச்சங்கம்''==
வரிசை 73:
==வரலாற்றில் நிகழ்ந்த பொதுச்சங்கங்களின் பட்டியல்==
 
கத்தோலிக்க திருச்சபையில் இதுவரை 21 பொதுச்சங்கங்கள் நிகழ்ந்ததாக வரலாற்றாசிரியர்கள் கணிக்கின்றனர். அவற்றின்இறுதியாக பெயர்களும்நடைபெற்ற இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தில் கலந்துகொள்ள உலகம் எங்கும் பரவியிருக்கின்ற கத்தோலிக்க திருச்சபையின் ஆயர்களும் அனைவரும் வத்திக்கான் நகருக்கு அழைக்கப்பட்டனர். நோய், அவைமுதுவயது, நடைபெற்றஅரசியல் காலமும்தடை இடமும்போன்ற அவற்றில்காரணங்களால் விவாதிக்கப்பட்டசிலரால் முக்கியபங்கேற்க பொருள்களும்முடியாமற் எடுக்கப்பட்டபோயினும், சில2600க்கும் முடிவுகளும்மேலான கீழேஆயர்கள் பட்டியலாகத்சங்கத்தில் தரப்படுகின்றனகலந்துகொண்டனர்.
 
சங்கத்தைக் கூட்டப்போவதாக [[இருபத்திமூன்றாம் யோவான் (திருத்தந்தை)|திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான்]] 1959ஆம் ஆண்டு, சனவரி மாதம் 25ஆம் நாள் உரோமையில் அமைந்த [[புனித பவுல் பெருங்கோவில்|புனித பவுல் பெருங்கோவிலில்]] ஆற்றிய உரையின்போது அறிவித்தார். அந்நாள் [[புனித பவுல்]] மனமாற்றம் அடைந்த நினைவுப் பெருவிழாவும், கிறித்தவர் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்படுவதற்காக மன்றாடுகின்ற நாளுமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. இருபதாம் நூற்றாண்டு உலகில் திருச்சபையின் வாழ்வும் பணியும் எவ்வாறு அமையவேண்டும் என்பதைக் குறித்து ஆய்ந்து, முடிவுகள் எடுத்து அவற்றைச் செயல்படுத்த வேண்டும் என்னும் நோக்கத்தோடு திருத்தந்தை பொதுச்சங்கம் கூடப்போவதாக அறிவித்தார். அவர் திருத்தந்தையாகப் பொறுப்பேற்ற மூன்றே மாதங்களில் இந்த அறிவிப்பை வெளியிட்டதும் கருதத்தக்கதாகும்.
 
இரண்டாம் வத்திக்கான் சங்கம் கத்தோலிக்க திருச்சபையின் நீண்ட கால வரலாற்றில் மிகப் பெரியதாக அமைந்ததில் வியப்பில்லை. முதன்முறையாக, உலக நாடுகள் அனைத்திலுமிருந்து திருச்சபைத் தலைவர்கள் சங்கத்தில் பங்கேற்றனர். கத்தோலிக்க ஆயர்கள் மட்டுமே வாக்களிக்கும் உரிமை கொண்டிருந்தாலும் பார்வையாளர்களாக பிற கிறித்தவ சபைகளிலிருந்தும் சில தலைவர்கள் அழைக்கப்பட்டனர்.
 
கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான கிறித்தவ வரலாற்றில் நிகழ்ந்த பொதுச்சங்கங்களின் பெயர்களும், அவை நடைபெற்ற காலமும் இடமும் அவற்றில் விவாதிக்கப்பட்ட முக்கிய பொருள்களும் எடுக்கப்பட்ட சில முடிவுகளும் கீழே பட்டியலாகத் தரப்படுகின்றன.
 
{| class="wikitable"
வரி 127 ⟶ 133:
| நாட்டு அதிகாரிகள் திருச்சபை ஆயர்களை நியமித்தல் தடைசெய்யப்பட்டது. குருக்களின் வாழ்க்கைமுறையில் சீர்திருத்தம் கொணரப்பட்டது.
|-
|10.
| [[இரண்டாம் இலாத்தரன் பொதுச்சங்கம்|இலாத்தரன் 2]]
| 1139
| இறைவழிபாடு சார்ந்த ஆன்மிக நலன்கள் விலைபேசுதலும், அநியாய வட்டி வாங்கலும் கண்டிக்கப்பட்டன.
|-
|11.
| [[மூன்றாம் இலாத்தரன் பொதுச்சங்கம்|இலாத்தரன் 3]]
| 1179
| திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்க மூன்றில் இரு பகுதி கர்தினால்மாரின் வாக்குகள் தேவை என்னும் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
|-
|12.
|[[நான்காம் இலாத்தரன் பொதுச்சங்கம்|இலாத்தரன் 4]]
| 1215
| திருத்தந்தையின் உலகுசார் அதிகாரத்தின் உச்சக்கட்டத்தில் பல சீர்திருத்தங்கள் கொணரப்பட்டன.
|-
|13.
|[[முதலாம் இலயன்ஸ் பொதுச்சங்கம்|இலயன்ஸ் 1]]
|1245
|திருச்சபையின் உள்ளாட்சியில் தலையிட்ட மன்னர் 2ஆம் பிரடெரிக் பதவி நீக்கப்பட்டார்.
|-
|14.
|[[இரண்டாம் இலயன்ஸ் பொதுச்சங்கம்|இலயன்ஸ் 2]]
| 1274
| மேற்கு சபையும் கிழக்கு சபையும் ஒன்றிக்க முயற்சி.
|-
|15.
|[[வியேன் பொதுச்சங்கம்]]
| 1311-1312
| [[ஐந்தாம் கிளமெண்ட் (திருத்தந்தை)|திருத்தந்தை ஐந்தாம் கிளமெண்ட்]] உரோமை நகரை விட்டுத் திருச்சபைத் தலைமையகத்தை அவிஞ்ஞோன் என்னும் நகருக்கு மாற்றியதோடு பிரான்சில் உள்ள வியேன் நகரில் பொதுச்சங்கத்தைக் கூட்டினார். சிலுவைப் போர்ச் செலவுக்காக வரிவிதிக்கப்பட்டது. குழந்தைகளுக்குத் திருமுழுக்கு அளிப்பதன் தேவை வலியுறுத்தப்பட்டது.
|-
|16.
| [[கான்ஸ்தான்சு பொதுச்சங்கம்]]
| 1414-1418
|மேற்குத் திருச்சபையில் ஏற்பட்ட பெரும் பிளவை (1378-1417) நீக்க இச்சங்கம் கூட்டப்பட்டது. இதைக் கூட்டிய [[இருபத்திமூன்றாம் யோவான் (எதிர்-திருத்தந்தை)|எதிர்-திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான்]] உட்பட திருத்தந்தையாக உரிமை பாராட்டிய வேறு இருவரும் பதவியிறக்கப்பட்டனர். இச்சங்கம் ஜான் விக்ளிஃப், ஜான் ஹுஸ் என்னும் கிறித்தவ சீர்திருத்தவாதிகளைக் கண்டனம் செய்தது. சில தப்பறைக் கொள்கைகளை எதிர்த்து, இயேசு கிறித்து அப்ப இரச வடிவங்களில் உண்மையாகவே உடனிருக்கின்றார் என்னும் கிறித்தவக் கொள்கை உறுதிப்படுத்தப்பட்டு, அறிக்கையிடப்பட்டது.
|-
|17.
| [[பெர்ராரா-புளோரன்சு பொதுச்சங்கம்]]
| 1438-1445
|இச்சங்கம் முதலில் பெர்ராரா நகரிலும், பின்னர் புளோரன்சு நகரிலும் அதன்பின் உரோமையிலும் கூடியது. கிரேக்க சபை உட்பட கீழைச் சபைகள் பலவற்றோடு உரோமைச் சபை ஒன்றிப்பு ஏற்படுத்தியது. திருத்தந்தை அதிகாரப்பூர்வமாகக் கற்பிக்கும்போது வழுவாவரம் கொண்டுள்ளார் என்னும் கொள்கை பொதுவான முறையில் அறிவிக்கப்பட்டது.
|-
|18.
| [[ஐந்தாம் இலாத்தரன் பொதுச்சங்கம்|இலாத்தரன் 5]]
| 1512-1517
| அறிவிக்கப்பட்ட சீர்திருத்தங்கள் பெரும்பாலும் நடைமுறையில் வரவில்லை. 1517இல் மார்ட்டின் லூதர் திருச்சபையில் சீர்திருத்தம் வேண்டும் என்று குரல் எழுப்பினார்.
|-
|19.
| [[திரெந்து பொதுச்சங்கம்]]
| 1545-1563
| மார்ட்டின் லூதர் போன்ற சீர்திருத்தவாதிகள் எழுப்பிய கேள்விகளுக்கு இப்பொதுச்சங்கம் பதில் வழங்கியது. திருச்சபையில் சீர்திருத்தம் கொணர்ந்தது. சங்கம் மூன்று அமர்வுகளாக (1545-47; 1551-52; 1562-63) நிகழ்ந்தது. இச்சங்கம் கொணர்ந்த சீர்திருத்தம் பல நூற்றாண்டுகள் பலனளித்தது.
|-
|20.
| [[முதலாம் வத்திக்கான் பொதுச்சங்கம்|வத்திக்கான் 1]]
| 1869-1870
| இச்சங்கத்தை [[ஒன்பதாம் பயஸ் (திருத்தந்தை)|திருத்தந்தை ஒன்பதாம் பயஸ்]] கூட்டினார். இத்தாலிய இராணுவம் உரோமை நகரைக் கைப்பற்றியதால் சங்கம் ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் கூடவில்லை. மனிதர் கண்களால் காண்கின்ற படைப்பிலிருந்து படைத்தவர் ஒருவர் உண்டு எனும் உண்மையை அறிந்துகொள்ள இயலும் என்று இச்சங்கம் கற்பித்தது. இறைநம்பிக்கை என்பது பகுத்தறிவுக்கு எதிரானதல்ல என்றும், பகுத்தறிவின் வழியாக மனிதர் கடவுள் பற்றி ஓரளவாவது அறிய முடியும் என்றும் அறிக்கையிட்டது. திருத்தந்தை இறைநம்பிக்கை பற்றியும் ஒழுக்கம் பற்றியும் அதிகாரப்பூர்வமாகக் கற்பிக்கும்போது வழுவாவரம் கொண்டுள்ளார் என்பது அதிகாரப்பூர்வமாக அறிக்கையிடப்பட்டது. இச்சங்கம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளாமல் விடுத்த பொருள்கள் சுமார் நூறு ஆண்டுகளுக்குப் பின் இரண்டாம் வத்திக்கான் சங்கத்தில் ஆய்வு செய்யப்பட்டன.
|-
|21.
| [[இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம்|வத்திக்கான் 2]]
| 1962 அக்டோபர் 11 முதல் 1965 டிசம்பர் 8 வரை
| இருபதாம் நூற்றாண்டுத் திருச்சபை உலகோடு உரையாடலில் ஈடுபட வேண்டும் என்றும், பிளவுபட்டுக் கிடக்கின்ற கிறித்தவ சபைகளுக்கிடையே ஒற்றுமை வளர வேண்டும் என்றும், சமயங்களோடு நல்லுறவு ஏற்படுத்த வேண்டும் என்றும், திருச்சபையில் புத்துணர்ச்சி கொணரவேண்டும் என்றும் இச்சங்கம் ஆய்ந்து பல முடிவுகளை அறிவித்தது.
|}
 
{{underconstruction}}
==ஆதாரங்கள்==
{{reflist}}