சேந்தனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
'''சேந்தனார்''' [[சைவத் திருமுறைகள் | பன்னிரு திருமுறை]]களில் [[ஒன்பதாம் திருமுறை]]யில் அடங்கும் [[திருப்பல்லாண்டு]] பாடிய அருளாளர் ஆவார். இவர் திருவெண்காட்டிற்கு அருகில் நாங்கூர் என்னும் ஊரில் தேன்றியவர். பட்டினத்து அடிகளின் தலைமைக் கணக்காளராக இருந்த சமயம் அவரின் கட்டளைப்படி அவரது கருவூலத்தைத் திறந்து எல்லோரும் அதில் உள்ள பொருள்களை எடுத்துச்செல்லுமாறு செய்தார். இதை அறிந்த பட்டினத்தாரின் சுற்றத்தவர்கள் சோழ மன்னனிடம் முறையிடவே மன்னன் சேந்தனாரை சிறையில் அடைந்தான். சேந்தனார் பட்டினத்தாரின் அருளால் சிறையிலிருந்து விடுதலை பெற்றார்.
==தில்லையில் சேந்தனார்==
சேந்தனார் தனது மனைவி மக்களுடன் தில்லைக்குச் சென்று விறகு வெட்டி விற்று வாழ்வு நடத்தினார். நாள்தோறும் விறகுவிற்றுப் பெற்ற பொருளிலிருந்து ஒரு சிவனடியார்க்கு உணவு அளித்து சிவத்தொண்டாற்றி வந்தார். ஒருநாள் நடராசப்பெருமானே சிவனடியாராக அவர் வீட்டிற்கு வந்து சேந்தனார் அளித்த களியை உணவாக ஏற்று அதன் ஒரு பகுதியைத் தமது திருமேனியில் காட்டிச் சேந்தனாரின் சிறந்த சிவபக்தியை உலகம் உணரும்படி செய்தருளினார்.
==திருப்பல்லாண்டு பாடுதல்==
|