[[தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்|தமுமுக]] அமைப்புடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக அதன் நிறுவனர்களில் ஒரு பிரிவினரான [[ஜெய்னுல் ஆபிதீன்|பி. ஜெய்னுல் ஆபிதீன்]], [[பாக்கர்|எஸ்.எம். பாக்கர்]] மற்றும் சிலர் தனியாக பிரிந்து 16-05-2004 அன்று [[தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்]] என்கிற பெயரில் ஓர் அமைப்பைத் தொடங்கினர். பின்னர் [[பாக்கர்|எஸ்.எம். பாக்கர்]] மற்றும் சிலர் [[தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்]] அமைப்பில் இருந்து நீக்கப்பட்டு 16-01-2009 அன்று இந்திய தவ்ஹித் ஜமாத் என்கிற பெயரில் இந்த அமைப்பைத் துவங்கியுள்ளனர்.
==அமைப்பின் கொள்கைள்==
1. இறைவேதம் திருக்குர்ஆனையும் இறுதித்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களின் வழிமுறையான சுன்னத்தையும் தனது வாழ்வில் வழி காட்டியாகவும் ஜீவ நாடியாகவும் ஏற்று செயல் படுவதன் மூலமே ஒருவன் ஈடேற்றம் பெற முடியும்.
2. மனிதக்குலம் உயர்வதற்கு திருக்குர்ஆனும் நபி(ஸல்) அவர்கள் சுன்னத்தும் மாத்திரமே போதும் அவற்றுடன் வேறெதுவும் தேவையில்லை.
3. எந்தக் கருத்தாவது திருக்குர்ஆனின் ஏதேனுமொரு வசனத்திற்கோ, நம்பத்தகுந்த ஏதேனுமொரு நபி மொழிக்கோ முரணாக இருந்தால் அது எவரது கூற்றாக இருந்தாலும் புறக்கணிக்கப்படும்.
4. உள்ளாட்சி சட்டமன்றம், நாடாளுமன்றம் ஆகிய எந்த தேர்தலிலும் போட்டியிடுவதில்லை. சூழ்நிலைக்கு ஏற்றவாறு தேர்தலின் எந்த கட்சிக்கு வாக்களிப்பது என்பதைப் பற்றி மட்டும் கருத்து கூறப்படும்
5. ஓரிறை கொள்கையில் நம்பிக்கை கொண்டவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் எங்கள் அமைப்பில் சேரலாம். இஸ்லாம் முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமான மார்க்கம் அல்ல. எல்லோருக்கும் இஸ்லாத்தை கொண்டுச் செல்வதுதான் எங்களின் முக்கிய நோக்கம்.