சிவதொண்டன் (இதழ்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 2:
 
==வரலாறு==
செந்தமிழ் ஆங்கிலத் திங்கள் வெளியீடான சிவதொண்டன் இதழ் [[1935]] ஆம் ஆண்டு [[சனவரி]] மாதம் வெளிவர ஆரம்பித்தது. [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்து]] [[யோக சுவாமிகள்|யோக சுவாமிகளின்]] திருவுளப்படி, அவரது ஆசீர்வாதத்துடன் பண்டித. க. கி. நடராசன் (B.O.L) என்பாரால் இவ்விதழ் ஆரம்பிக்கப்பட்டது.
 
நடராசன் [[1934]] ஆண்டில் கமலாசனி அச்சு நிலையத்தை ஆரம்பித்தார். பண்டித. க. கி. நடராசன் 25ஆம் ஆண்டு சிவதொண்டன் சிறப்பு மலரில் பின்வருமாறு எழுதியிருந்தார்: "அடியேன் செய்த தவப்பயனாகச் சில நாட்களுக்குப் பின் சுவாமிகள் அச்சு நிலையத்துக்கு எழுந்தருளினார்கள். ''தொடங்கிவிட்டாய்! கவனமாய் நடத்து,'' என்றார்கள். பின்னர் ஒரு வாரத்துக்குப் பின்வந்து, ''பத்திரிகை ஒன்றைத் தொடங்கு,'' என்றார்கள். பத்திரிகைக்கு என்ன பெயரிடலாம் என்று கேட்டேன். அதற்கு அவர் பதில் கூறாமல் போய் விட்டார்கள். பின்னொருநாள் வந்து சிவதொண்டன் என்று பெயரிட்டுச் சிறிய அளவில் நடத்து என்றார்கள்"<ref>அம்பிகைபாகன், ச., ''யோகசுவாமிகள்'', கொழும்பு, 1972</ref>.
"https://ta.wikipedia.org/wiki/சிவதொண்டன்_(இதழ்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது