கா. கலியபெருமாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
 
1953-ஆம் ஆண்டில் மலேசியாவில் தமிழ் முரசு மாணவர் மணிமன்ற மலரில் இவரது முதல் ஆக்கம் பிரசுரமானது. அதிலிருந்து இன்றுவரை 20 க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 500 க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும், 300 க்கும் மேற்பட்ட கவிதைகள், உரைவீச்சுகள், நாடகங்களையும் இவர் எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகள், சஞ்சிகைகளில் பிரசுரமாகியுள்ளன. மொழி, சமயம், சமுதாயம் பற்றி மலேசிய தேசிய பத்திரிகைகளில் தொடர் கட்டுரைகளையும், வினா விடைகளையும் எழுதியுள்ளார்.
==தமிழ்க்குயில்==
தமிழ்க்குயில் என்ற இதழை இவர் வெற்றிகரமாக நடத்தினார். இதனால் 'தமிழ்க்குயில் கா.கலியப்பெருமாள்' எனவும் 'தமிழ்க்குயிலார்' எனவும் அழைக்கப்படுகிறார். இவர் ஒரு சிறந்த மேடைப்பேச்சாளரும்கூட.
"https://ta.wikipedia.org/wiki/கா._கலியபெருமாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது