ரெ. கார்த்திகேசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
'''ரெ. கார்த்திகேசு''' (பி: 1940) [[மலேசியா]]வில் மூத்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் மலேசிய அறிவியல் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகவும். இணைப் பேராசிரியராகவும், பொதுமக்கள் தொடர்புத்துறை பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
 
மலேசிய அறிவியல் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகவும். இணைப் பேராசிரியராகவும், பொதுமக்கள் தொடர்புத்துறை பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.
==எழுத்துத் துறை ஈடுபாடு==
[[1952]]-ஆம் ஆண்டில் இவரது முதல் சிறுகதை 'தமிழ் முரசு மாணவர் மணிமன்ற மலரி'ல் பிரசுரமாகியது. அதிலிருந்து தொடர்ச்சியாக 50 க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகள், கவிதைகள், உரைவீச்சுகள், நாவல்கள், வானொலி நாடகங்கள், குறுநாடகங்களையும் எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசிய தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. அத்துடன், [[இந்தியா]] தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் முற்போக்கு இலக்கிய ஏடுகளான '[[தீபம்]]', '[[கணையாழி]]', '[[கல்கி]]' போன்றவற்றிலும். '[[இந்தியா டுடே]]' இதழ்களிலும் வெளிவந்துள்ளன. தமிழ்ப் புத்திலக்கியம் பற்றிய திறனாய்வுக் கட்டுரைகள் பலதை எழுதியுள்ளார். இணையத்தின் வழியாக இவரது ஆக்கங்கள் தமிழ்பேசும் உலக நாடுகளில் உலா வந்து கொண்டிருக்கின்றன.
 
இவர் மலேசிய எழுத்தாளரும், கவிஞரும், நடிகருமான காலஞ்சென்ற [[ரெ. சண்முகம்]] அவர்களின் இளைய சகோதரர் ஆவார்.
 
==மலேசிய வானொலியில்==
இவர் மலேசிய வானொலியில் ஒலிபரப்பாளராகவும், நிர்வாகியாகவும் பணியாற்றியுள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/ரெ._கார்த்திகேசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது