கடைச்சங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 177:
(சிலம்பு. காடுகாண்.19-22)
 
என்று சிலப்பதிகாரத்திலும் இதைப்பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. இவற்றின் அடிப்படையில் நோக்கின், வட மதுரையானது பாண்டிய நாட்டின் தலைநகராவதற்கு முன்பு பாண்டியர்கள் அதற்குத் தென்பால் கபாடபுரத்தில் அமர்ந்தும், அதற்கும் முன்பு மேலும் தெற்கில் அமைந்திருந்த தென்மதுரையிலிருந்தும் ஆட்சி புரிந்து வந்தனர் என்ற வரலாறு உண்மையே என்று பேராசிரியர். கே.கே. பிள்ளை போன்றோர் உறுதிப்படுத்துகின்றனர்.
 
இதுகாறும் சொல்லப்பட்ட செய்திகளிலிருந்து சங்கம் பற்றிய செய்திகளும் அவற்றிற்கு உறுதுணையாக இருந்த சான்றுகளும், எந்த அளவுக்கு உண்மையென்பதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள்.
 
''' ===காலம்'''===
 
மூன்று சங்கங்களும் இருந்த காலத்தைப்பற்றிப் பல்வேறு வகையான கருத்துகள் நிலவுகின்றன. சிலர் மிகவும் முன்பும், சிலர் மிகவும் பின்பும் கொண்டு செல்கின்றனர், இவர்கள் தம் உணர்வுகளின் விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் இவ்வாறு கூறுகின்றனர். அக, புறச் சான்றுகளின் அடிப்படையில் சிலர், நடு நிலையாகச் சில கருத்துக்களை வழங்கியுள்ளனர். அவ்வாறு, பெரும்பாலோர் ஏற்றுக்கொள்ளுகின்ற கருத்து, மூன்றாம் சங்கம் முடிவுற்றதாகக் கருதப்படும் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரையிலான காலம் சங்க காலம் என்பதாகும்.
'''===நிலமும் பொழுதும்'''===
 
சங்க நூல்களுள் நுழைவதற்கு முன்பு, அவற்றின் பாடுபொருள், பாடுமுறை பற்றிச் சுருக்கமாக அறிந்து கொள்வோம். வாழ்வின் இருபெரும் பகுதிகளாகிய அகப்பொருளையும் புறப்பொருளையும் பாடுவன சங்க இலக்கியங்கள் என்பதை அறிவீர்கள். ஆணும் பெண்ணும் ஒருவரை யொருவர் கண்டு காதலித்து மணந்து இல்லறம் நடத்தி வருவதை 'அகம்' என்றும் வீட்டுக்கு வெளியேயான பொது வாழ்க்கை முறை, போர், செல்வம், கல்வி, கொடை முதலியன 'புறம்' என்றும் பொருள் இலக்கணம் வகுத்தனர் பண்டைய தமிழர்.
வரி 199 ⟶ 193:
ஓராண்டிற்குரிய தட்ப வெட்ப மாறுபாடுகளுக்கேற்ப, கார்காலம், கூதிர்காலம், முன்பனிக் காலம், பின்பனிக் காலம், இளவேனிற் காலம், முதுவேனிற் காலம் ஆகிய காலங்களைப் பெரும் பொழுதுகள் என்றனர். காலை, நண்பகல், எற்பாடு, மாலை, யாமம், வைகறை ஆகியவற்றைச் சிறு பொழுதுகள் என்று குறித்தனர். பெரும் பொழுதை ஆண்டு, திங்கள், கிழமை, நாள், நாழிகை, நொடி எனவும் பகுத்திருந்தனர்.
 
'''===அகமும் புறமும்'''===
 
உலக அமைப்பை முதல், கரு, உரி என மூன்றாக வகுத்து, உலகில் வாழும் மக்களின் வாழ்க்கையை அகம் என்றும் புறம் என்றும் பாகுபடுத்தி, அதை இயற்கையுடன் இயைபுறுத்தியது பண்டைய தமிழரின் சிறப்பு என்பதை அறிவீர்கள்.
"https://ta.wikipedia.org/wiki/கடைச்சங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது