நெடுநல்வாடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
No edit summary
வரிசை 4:
==நூற்பொருள்==
 
இது ஒரு [[புறப்பொருள்]] நூலாகக் கொள்ளப்படினும் இதில் பெருமளவு [[அகப்பொருள்]] அம்சங்கள் பொதிந்துள்ளன. இந் நூல் அகப் பொருளையே பேசினாலும் புறப்பொருள் நூல்கள் வரிசையில் வைக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் நம் முன்னோர்களின் நுன்மான் நுழைபுலத்தை உணர்த்துவதாய் உள்ளது. பொதுவாக தமிழ்ப் புலவர்(கள்) தம் அகப் பாடல்களில் தலைவன் தலைவி ஆகியோரின் அடையாளத்தை வெளிப்படுத்தாத கண்ணியத்தைக் காத்து வந்தனர். புறவாழ்வை அனைவருக்கும் கூறலாம். அகவாழ்வை அகிலமே அறியச்செய்வது அறிவுடைமை அன்று என்பது அவர்தம் அறிவுமுடிவாய் இருந்திருக்கிறது. ஆனால் நெடுநல்வாடையில் பாண்டியனின் அடையாளச் சின்னமாகிய வேம்பு நக்கீரரால் சுட்டப்பட்டுள்ளது. ஆகவே தான் தலைவன் பாண்டிய மன்னனாய்க் கொள்ளப்பட்டான். இந் நூலும்இந்நூலும் புறப் பொருள் நூலாயிற்று.
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/நெடுநல்வாடை" இலிருந்து மீள்விக்கப்பட்டது