சிறுவயதிலேயே அனாதையாக தாயாரால் விடப்படுகின்றார் சூர்யா ([[இணைப்புத் தலைப்புரஜினிகாந்த்]]ரஜினிகாந்த்) இதனைத் தொடர்ந்து ஏழைகளுடன் வாழ்க்கை நடத்தும் சூர்யா நல்ல மனிதராக உருவெடுக்கின்றார்.நல்ல செயல்கள் பல செய்யும் சூர்யா ஒரு சமயம் பெண்ணொருவரைத் தாக்க முற்பட்டவனைத் தாக்கிய பொழுது அவன் இறந்துவிடுகின்றான்,இதனால் சூர்யா கைது செய்யப்படுகின்றார் ஆனால் அவரை விடுதலை செய்ய ஏற்பாடு செய்கின்றார் அவ்வட்டாரத் தலைமை அதிகாரத்தினை உடையவரான தேவ்ராஜ் ([[மம்முட்டி]]).தனது குழுவில் ஒருவனையே சூர்யா கொன்றுள்ளான் என்பதனைத் தெரிந்தும் அவன் செய்த் நல்ல குணத்தினால் காப்பாற்றுகின்றார்.பின்னர் இருவரும் நல்ல நண்பர்களாகின்றனர் அச்சமயம் அங்கு புதியதாக பதவியேற்கும் அர்ஜூன் ([[அரவிந்த் சாமி]]) தேவ்ராஜின் குற்றச் செயல்களிற்காக அவரைக் கைது செய்ய ஏற்பாடுசெய்ய உத்தரவு பிறப்பிக்கின்றார்.சூர்யா இதனை அறிந்து அர்ஜூனைக் கொல்லச் செல்கின்றார் ஆனால் அர்ஜூன் தன் சகோதரர் என அறிந்து செய்வதறியாது திகைத்து நிற்கின்றார்.மேலும் அவரின் தாயாரின் கட்டளைப்படி சகோதரனான அர்ஜூனனுக்கு கெடுதல் செய்யக் கூடாதென சத்தியம் செய்தவரென்பதால் அவ்வாறு நின்றது குறிப்பிடத்தக்கது.